India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.24) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதது. அதில், இணையம் வழியாக நிதி மோசடியில் பாதிக்கப்பட்டாலோ அல்லது சந்தேகத்துக்கிடமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்தாலோ, உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் தெரிவிக்க www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspslmdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0427-2418735 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளர், துணை தாசில்தார், விஏஓ உள்ளிட்ட 10 பேர் மீது கூட்டுசதி, போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடங்கணசாலை அருகேயுள்ள மெய்யனூரைச் சேர்ந்த கோவிந்தன் (73) எஸ்.பி. கௌதம் கோயலிடம் புகார் மனு அளித்திருந்த நிலையில் விசாரணை நடைபெறுகிறது.
சேலம் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சேலம் மாவட்டம், மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்கள் மாணவியர்கள் சந்திப்பு இன்று பள்ளியில் நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டியும், ஒருவருக் ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட 80 ஆரஞ்சு மிட்டாய்களையும் ஊட்டிவிட்டு அன்பை வெளிப்படுத்தி நினைவுகளைப் பகிர்ந்தனர்.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்காக Dash-Cam பொருத்துவது மிகவும் அவசியம். இது விபத்து நேரங்களில் ஆதாரமாகவும், குற்றச்செயல்களை தடுக்கவும், சாலை விதிமுறைகள் மீறப்படுவதை கண்டறியவும் உதவும். தங்கள் மற்றும் பிறர் உயிர் பாதுகாப்பிற்காக உங்கள் வாகனத்தில் Dash-Cam பொருத்துங்கள் என சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சேலம் மக்களே.. மத்திய அரசின் கீழ் செயல்படும் Uranium Corporation of India Ltd காலியாக உள்ள 99 Operational Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிப்ளமோ மற்றும் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,990 முதல் ரூ.40,000 வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநர் மணிவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மகுடஞ்சாவடி வட்டாரத்தில் தனிப்பட்ட பட்டாதாரர் 2 ஆண்டுகளுக்கு மேலாக பயிரிடாமல் தரிசாக வைத்துள்ள விவசாய நிலங்களை மீண்டும் விளை நிலங்களாக மாற்ற விண்ணப்பிக்கலாம். தர் நீக்கி சமன் செய்து உழுது பயிர் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு மகுடஞ்சாவடி வேளாண் துறை அலுவலகத்தை அணுகலாம்.
Sorry, no posts matched your criteria.