India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம், மேட்டூர் வெள்ளார் கிராமம் அரசமரத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (55). இவர் நேற்று தண்ணீர் தொட்டியின் மீது ஏறி பணி செய்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் இரத்தக் குழாய் அடைப்பினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த சுமதி (வயது 40), வனிதா (வயது 64) ஆகியோருக்கு ஐவிசி பில்டர் எனப்படும் உயரிய சிகிச்சையை இருதயத்துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர்.கண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து இரத்தக் குழாய் கட்டியை அகற்றி சாதனை. மருத்துவர்களை நேரில் அழைத்து மருத்துவமனை முதல்வர் வாழ்த்து!
சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கலியுக கண்ணன் (50). இவர் அதே பகுதியில் டுடோரியல் சென்டர் நடத்திவருகிறார். இவரது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் வந்ததை எடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 13 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் பாஜக பெருங்கோட்ட பாரதிய ஜனதா மண்டல மாநாடு ஓமலூரில் ஏப்ரல் 19ஆம் தேதி முத்து மஹாலில் எதிரில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து பாஜக பெருங்கோட்ட தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியுமான அருள் MLA மீது தாக்குதல் நடத்திய திமுகவினரின் வன்முறை போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும், திமுக ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பில்லை. எதிர்கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை காட்டாட்சி நடக்கிறது என H ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் இரும்பாலை வளாகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என சோதனைக்குப் பின்பு போலீசார் அறிவித்துள்ளனர். இதனால் சேலம் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் இயக்கும் டிரைவர்களின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டு வருகிறது. சேலம், தருமபுரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 263 பேரின் லைசென்ஸ் 3 மாதத்திற்கு ரத்துச் செய்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை. பர்மிட் இல்லாமல் இயங்கிய வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அகில இந்திய அளவில் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் நான்கு பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளது. எரிபொருள் சேமிப்பு பாதுகாப்பான இயக்கம் போன்ற சேவைகளுக்காக நான்கு பிரிவுகளில் சேலம் போக்குவரத்து கழகம் முதலிடம் பெற்றுள்ளது என போக்குவரத்து நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். அதற்கான பரிசுகளையும் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சேலம் அருகே உள்ள SAIL (இரும்பாலை வாளாகம்) நிறுவனத்திற்கும் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டல் சேலம் மாநகர் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரும்பாலை வளாகத்திற்கு மற்றும் அரசு பொறியியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.