India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.05) “YOUR LIFE IS EXPENSIVE FOR US AS WELL.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

சேலம் மக்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 130 Credit Manager, பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

சேலத்தில் மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நேற்று துவங்கியது. பள்ளி, மாணவ மாணவிகளுக்கு இரு நாட்கள் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலை அரங்கில் நடைபெற்ற போட்டிகள் நிறைவு பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி டிச.08 வரை நடத்தப்படுகிறது. அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். “என் முன்மாதிரிக்கு கடிதம்” தலைப்பில் தமிழில் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு-600002 முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாநில அளவில் முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், அகில இந்திய அளவில் முதல் பரிசு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இடி, மின்னலுடன் பரவலாக மழைபெய்தது. மாவட்டத்தில் நேற்று பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: சேலம் மாநகரம் 7.8, ஏற்காடு 17.4, வாழப்பாடி 35. ஆணைமடுவு 12. ஆத்தூர் 46.2, கெங்கவல்லி 5, ஏத்தாப்பூர் 43, கரியகோவில் 16, நத்தக்கரை 7. சங்ககிரி 2, மேட்டூர் 21 ஓமலூர் 1.5,டேனிஷ்பேட்டை 9.1 என மொத்தம் 223 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சேலம் மக்களே.. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் நடத்தும் பொழுது மிகுந்த உதவியாக அமைகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று (அக்.05) முதல் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். https://drbslm.in/ என்ற இணையத்தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். வரும் அக்.11- ம் தேதி 4 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக, பல பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது, தெருவிளக்குகள் எரியாமல் இருப்பது அல்லது மின் கம்பிகளில் சேதம் போன்ற பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.இனி அந்த கவலை வேண்டாம்!
நீங்கள் எங்கு இருந்தாலும்,(TNEB) பிரத்தியேக உதவி எண்: 94987 94987 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு உங்கள் புகாரைத் தெரிவிக்கலாம்.SHARE பண்ணுங்க!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 2025-26 ஆம் கல்வி ஆண்டில் முதல் பருவம் மற்றும் காலாண்டு விடுமுறை இன்று நிறைவடைகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வடகிழக்கு பருவமழை காலமாகும். எனவே சேலம் மாவட்டத்தில் பலவீனமான சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழலை கண்டறிந்து அதனை அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம்.சேலம் மக்களே யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.