India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைக்கடிகாரம் மற்றும் கடிகாரம் பழுதுபார்க்கும் 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிக்கு நேரடியாகவோ (அ) https://forms.gle/8Zf9r5Ne61x7CERW9 என்ற Google Form மூலமாகவோ வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள புது மாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழா பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் வெகு சிறப்பாக தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டூரை சேர்ந்த புருஷோத்தமன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகவில்லை இவர் தனது வியாபாரத்திற்கு மேட்டூர் சேர்ந்த தங்கவேலு என்ற முதியவரிடம் 18 லட்சம் கடன் வாங்கினார் பணம் கொடுக்கல் வாங்கலின் போது இருவரும் ஓரினச்சேர்க்கை இருந்துள்ளனர் சில தினங்களுக்குப் பிறகு புருஷோத்தமன் முதியவரை பார்க்க வில்லை இதனால் முதியவர் கத்தியை எடுத்து புருஷோத்தமனின் குத்தினார் காவல்துறை விசாரணை
அமாவாசை, யுகாதி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்ட சார்பில் சென்னை, ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும், மார்ச் 28- ஆம் தேதி முதல் ஏப்ரல் 01- ஆம் தேதி வரை 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டெண்டரில் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமான விதிமுறைகள் உள்ளன. புதிய விதிமுறைகளை கண்டித்து காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று (27ம் தேதி) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தத்தை முன்னிட்டு சேலம் கருப்பூரில் உள்ள காஸ் நிரப்பும் (பாட்டிலிங் பிளாண்ட்) அருகே நேற்று மாலை முதல் நூற்றுக்கணக்கான எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டன.
அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் 98.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 99.3 டிகிரியாக உயர்ந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மதிய நேரத்தில் வெப்பம் தகிக்கிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்ப நிலை காரணமாக பகல் பொழுதுகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது.
சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு,நாமக்கல், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் <
சேலம் மார்ச் 27 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️காலை 8 மணி அருள்மிகு எல்லை பிடாரி அம்மன் திருக்கல்யாணம் குமரசாமிப்பட்டி ▶️காலை11 மணி சேலம் மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டம் ▶️மாலை 4 மணி ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட சுகாதார அலுவலகம் ▶️மாலை 6 மணி எல்லைப்பிடாரியம்மன் திருக்கோவில் பங்குனி மாத குண்டம் மிதி திருவிழா
பட்ஜெட் அறிவிப்பின்படி, சென்னை- செங்கல்பட்டு- திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் வேலூர் மற்றும் கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் ஆகிய 3 வழித்தடங்களில், பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து (RRTS) சேவையை உருவாக்குவதற்கு, விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கு டெண்டர் வெளியிட்டது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.
கோடை காலம் முன்னரே சேலத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.