Salem

News October 11, 2025

சேலம்: ஐடிஐயில் தொழிற்பழகுநர் சேர்க்கை -ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் (அப்ரன்டீஸ்) காலியிடங்களை நிரப்பும் வகையில், கோரிமேடு அரசு ஐடிஐயில் வரும் அக்.13ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது. இந்த முகாமில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு உரிய தொழிற்பழகுநர் இடங்களை தேர்வு செய்யலாம் என தெரிவித்தனர்.

News October 11, 2025

சேலம்: கனரா வங்கி வேலை – நாளை கடைசி நாள்!

image

கனரா வங்கியில் அப்ரண்டிஸ் பயிற்சி வேலை!
மொத்த பணியிடங்கள்: 394 (தமிழ்நாடு)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.15,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: 12.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 11, 2025

சேலம் சிறப்பு ரயில்கள் முன்பதிவு தேதி அறிவிப்பு!

image

சேலம் ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி போத்தனூர், சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 06044),திருவனந்தபுரம், வடக்கு சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06108) மற்றும் சென்னை சென்ட்ரல், மங்களூரு சிறப்பு ரயில் வண்டி எண் (06001). இந்த ரயில் பயணங்களுக்கான முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 11, 2025

பரபரப்பு…சேலம் அருகே ஆண் சடலம் மீட்பு!

image

சேலம்,வலசையூர் அருகே உள்ள சீலாவரி ஏரி பகுதியில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மாபேட்டை போலீசார், சடலத்தைக் கைப்பற்றி நடத்திய சோதனையில், அவர் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஜீவா என்பதும், அவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.

News October 11, 2025

சேலம்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

image

சேலம் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<>ரயில் ஒன்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அப்புறம்.., தீபாவளிக்கு டிக்கெட் போட்டாச்சா..?

News October 11, 2025

சேலம்: GPay, PhonePe-யில் தவறுதலா பணம் அனுப்பிட்டீங்களா?

image

மக்களே G Pay / PhonePe / Paytm பயன்படுத்தும் போது யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். முதலில் https://www.npci.org.in/upi-complaint என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும்.பின்னர் அந்த பக்கத்தில் உள்ள புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், மொபைல் எண் போன்றவற்றை கொடுத்தால் அடுத்த 24-48 மணி நேரத்தில் பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது.SHARE பண்ணுங்க!

News October 11, 2025

சேலம்: கிராம ஊராட்சி செயலாளர் வேலை!

image

சேலம் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இணையதள முகவரியில் இன்று முதல் (அக்.10) விண்ணப்பிக்கலாம். (விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.11.2025) ஷேர் பண்ணுங்க!

News October 11, 2025

சேலம்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

அக்.1 முதல் 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது.இதற்கு கட்டணம் ஏதும் இல்லை;இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப் போன்ற அரசு உதவிகளை பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது.உடனே UPDATE பண்ணுங்க; இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க

News October 11, 2025

சேலத்தில் யாசகர் கழுத்து நெரித்து கொலை!

image

சேலம்: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த வெள்ளாளப்பட்டி சேர்ந்தவர் பெரியசாமி (65). இவர் நேற்று அவரது வீட்டில் உடலில் காயங்களுடன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் பெரியசாமி, (19) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 11, 2025

காவலரே கொள்ளையர்:சேலத்தில் பகீர் சம்பவம்

image

சேலம்: ஓமலூர் பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (56), இவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகையை 4 பேர் கொண்ட கும்பல் பறித்து சென்றுள்ளனர்.இந்த வழக்கில் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பணி புரியும் சிவக்குமார் (25) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்தநிலையில் சிவகுமாரை சேலம் மாநகர காவல் ஆணையர் அணில்குமார் கிரி சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!