India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் : வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரையின் மகன் கிருபாகரன்( 10) அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இன்று(மார்ச் 14) காலை கிருபாகரன் பள்ளிக்குச் சென்றபோது தனியார் கல்லூரி பேருந்து கிருபாகரன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் கி பலத்த காயம் அடைந்த கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் : கடந்த 2017ம் ஆண்டு ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை டிபன் வாங்கித் தருவதாகச் சொல்லி அழைத்து முள்ளுக்காட்டில் வைத்து 4 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்தனர். இதுகுறித்து, தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட 4 பேருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
▶ சேலம் மாநகராட்சியில் ‘முதல்வர் படைப்பகம்’ அமைக்கப்படும்.▶சேலம் மாவட்டத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய நூலகம் அமைக்கப்படும். ▶சேலம் அன்புச் சோலை மையம். ▶சேலம் பால் நிறுவனம் நவீனமயமாக்கப்படும். ▶சேலம் தெலுங்கனூரில் தொல்லியல் அகழாய்வுகள்.
சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் பால் நிறுவனங்கள் நவீனமயமாக்கப்படும். ஆவின் பால் நிறுவனங்களில் உள்ள சாதனங்களை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என 2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
“போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சேலம், கடலூர், நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் வசதிகளுடன் புதிய நூலகம் அமைக்கப்பட வேண்டுமென சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், பேரவையில் கோரிக்கை வைத்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்டை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விடுமுறை நாட்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்களை ஒட்டி வரும் 17ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் வசதிக்காக போக்குவரத்து கழகம் இணைய வழியாகவும் முன்பதிவு செய்து பயன் பெற போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025- 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. அதன்படி ▶ சேலம்- தெலுங்கலூர் பகுதியில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படவுள்ளது. ▶ சேலத்தில் முதல்வர் படைப்பகம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துரை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட ஆண்டுகால கோரிக்கையாகும். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள பட்ஜெட் தொடரில் ஆத்தூர் தனிமாவட்டமாக அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சேலம் மக்களே இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும். மேலும், Share பண்ணுங்க.
சேலம், மேட்டூர் வெள்ளார் கிராமம் அரசமரத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (55). இவர் நேற்று தண்ணீர் தொட்டியின் மீது ஏறி பணி செய்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் இரத்தக் குழாய் அடைப்பினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த சுமதி (வயது 40), வனிதா (வயது 64) ஆகியோருக்கு ஐவிசி பில்டர் எனப்படும் உயரிய சிகிச்சையை இருதயத்துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர்.கண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து இரத்தக் குழாய் கட்டியை அகற்றி சாதனை. மருத்துவர்களை நேரில் அழைத்து மருத்துவமனை முதல்வர் வாழ்த்து!
Sorry, no posts matched your criteria.