Salem

News March 15, 2025

சேலத்தில் புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி!

image

சேலத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை பொறியாளர்களுக்கு, புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்படும். தங்கி பயிலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கான கால அளவு 18 வாரம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும். இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com இணையத்தில் பதிவுச் செய்துக் கொள்ளலாம்.

News March 15, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கியமான அறிவிப்பு

image

யார்டில் தண்டவாளம் மாற்றியமைக்கும் பணி காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் ஆழப்புலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) நாளை (மார்ச் 16) போத்தனூர்- இருகூர் மார்க்கத்தில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையத்திற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News March 15, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு

image

கோவையில் இருந்து அரியானா மாநிலம், ஹிசார் ரயில் நிலையத்திற்கு இருமார்க்கத்திலும் இயக்கப்படும் வாராந்திர ரயில்கள் (22475/ 22476) இன்று (மார்ச் 15) முதல் சோதனை முயற்சியாக கர்நாடகாவின் கும்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள்.

News March 15, 2025

சேலம்: பெண் குழந்தைகளுக்கு கை கொடுக்கும் திட்டம்

image

சேலம், அஞ்சல் அலுவலகளில் செல்வமகள் சேமிப்பு திட்டம்’ செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 முதல் 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். உங்களிடம் பணம் இருக்கும் போது டெபாசிட் செய்யலாம். இதற்கு 8% வட்டி வழங்கப்படுகிறது . இது உங்களின் பெண் குழந்தைகளின் கல்வி, திருமனம் போன்றவைகளுக்கு பயனுள்ளதாக அமையும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 15, 2025

சேலம்: பெண்ணின் கழுத்தை அறுத்த EX காதலன்

image

சேலம், வாழப்பாடியை சேர்ந்தவர் சின்ராஜ்,இவருடைய மனைவி வனிதா (23). இந்தநிலையில் வனிதாவிற்கு அவருடைய முன்னாள் காதலன் வேடராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டநிலையில், நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வேடராஜ் , கத்தியால் வனிதா கழுத்தில் அறுத்துள்ளார்.இதன் பின்னர் தனது கையையும் கத்தியால் அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை.

News March 15, 2025

சேலம் ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக வாட்ஸ்அப் குரூப்

image

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேலம் ரயில்வே போலீசார் வாட்ஸ் அப் குழுவை (94981-01963) அறிமுகம் செய்துள்ளனர். மேலும் “அறிமுக இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவு பொருள்களை வாங்கி உண்ண வேண்டாம். நகை அணிந்து கொண்டு உறங்க வேண்டாம். சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டால் 139, 1512 அல்லது 9962500500 அழைக்கவும்” என தெரிவித்துள்ளனர். இதை ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News March 15, 2025

சேலம் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்ச் 14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News March 15, 2025

கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர்கள் பங்கேற்பு

image

சேலம் ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது ஆண்டு விழா இன்று (மார்ச் 14) கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர்கள் நரேந்திர பிரசாத் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் தனி நடனம், குழு நடனம், பரதநாட்டியம், குறுநாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News March 14, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல் துறை தொடர்ந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 14) மாநகரப் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News March 14, 2025

வெற்றி நாயகனான கூலித் தொழிலாளியின் மகன்

image

சேலம்: வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த மோ.அஜித். இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்.தாயும் கூலித் தொழிலாளி. இத்தனை கடின சூழ்நிலைகளையும் கடந்து,அரசு பணி தேர்வுக்கு தன்னம்பிக்கையுடன் படித்து தற்போது வெற்றி பெற்றுள்ளார். இப்பொழுது இளநிலை வருவாய் ஆய்வாளராக குறிஞ்சிப்பாடி, கடலூரில் பணியமர்த்தப்பட்ட சான்றிதழை கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் பெற்றார். இவரை வாழ்த்தலாமே…!? 

error: Content is protected !!