Salem

News September 2, 2025

சேலம்: சொந்த ஊரில் வங்கி வேலை!

image

சேலம் மக்களே.., உங்கள் சொந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை வேண்டுமா? இந்தியாவின் வங்கிப் பணியாளர் தேர்வாணயம்(IBPS) கிராம வங்கி உதவியாளர் வேலைக்கு 7927 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 2, 2025

சேலத்தில் தமிழ் வளர்ச்சித்துறையில் பயிலரங்கம்

image

சேலம் மாவட்டத்தில் நடப்பு 2025-2026ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் செப்.10, 11 ஆகிய 2 நாட்களுக்கு சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் 4ஆவது தளத்தில் உள்ள அனிச்சம் கூட்டரங்கத்தில் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

News September 2, 2025

சேலம் சுய உதவிக் குழுக்களுக்கு அரசின் இலக்கு!

image

சேலம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 1,343 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.75.86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்குப் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.328 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், நகைக்கடன் உள்ளிட்ட 34 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன.

News September 2, 2025

சேலத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நகர கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(செப்.3) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வெங்கட்ராவ் ரோட்டில் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.

News September 2, 2025

சேலத்தில் இன்றைய ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

சேலத்தில் இன்று (செப்.2) ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்: ▶️சூரமங்கலம் மண்டலம் – கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபம் சிவதாபுரம் ▶️கருக்கல்வாடி – கேகேஎம் திருமண மண்டபம் கிருஷ்ணம் புதூர்
▶️ சங்ககிரி – சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை
▶️ நங்கவள்ளி – எம்என்வி திருமண மண்டபம் நங்கவள்ளி ▶️வீரபாண்டி – ஏவிஎம் திருமண மண்டபம் வேம்படிதாளம் ▶️தலைவாசல் – சமுதாயக்கூடம் ராமானுஜபுரம்.

News September 2, 2025

சேலத்தில் ஆவின் பால் கடை வைக்க ஆசையா?

image

சேலம் மக்களே.., தமிழக அரசின் தாட்கோ(TAHDCO) ஆவின் பாலகம் மானியத் திட்டம் மூலம் உங்கள் ஏரியாவில் நீங்களும் பாலகம் அமைக்கலாம்.
▶️இதற்கு அரசு சார்பாக ரூ.90 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
▶️இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம். இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்த <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE)

News September 2, 2025

சேலம்: மேச்சேரி பத்ரகாளியம்மன் சிறப்பு பூஜை

image

சேலம்: மேச்சேரியில் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய பத்திரகாளியம்மனுக்கு இன்றைய அதிகாலை தரிசனமாக சிறப்பு அபிஷேக பூஜைகளும், மஞ்சள் நிற பட்டு உடுத்தி, திரிசூலம் கையில் ஏந்தி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் பூட்டப்பட்டது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

News September 2, 2025

சேலம் நுண்ணறிவுப் பிரிவில் எஸ்.ஐ, ஏட்டுக்கள் 10 பேர் இடமாற்றம்!

image

சேலம் மாநகர காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவில் ஒரே நாளில் 10- க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்து மாநகர காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐ பாஸ்கர், அழகாபுரத்திற்கும், அழகாபுரத்தில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐ மணிகண்டன், பள்ளப்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 2, 2025

செப்.03- ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

image

வரும் செப்.03- ல் சேலம் மாவட்டத்தில் மூலப்புதூர் ஆர்.கே.எஸ். திருமண மண்டபம், ஆட்டுக்காரன் வளவு கிருஷ்ணவேணி ராமலிங்க செட்டியார் திருமண மண்டபம், செங்கரடு சமுதாயக்கூடம், குள்ளம்பட்டி சமுதாயக்கூடம், ஆத்தூர், ராணிப்பேட்டை, அண்ணா கலையரங்கம், நாச்சிப்பாளையத்தில் காளியம்மன் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

News September 2, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.01) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!