Salem

News March 17, 2025

சேலம்: விவசாயிகளுக்கு ஆட்சியரின் வேண்டுகோள் 

image

விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் கட்டி வைத்து உரிய அளவில் நீர் மற்றும் பசுந்தீவனங்களைக் கொடுத்து பராமரித்திடவும், கோடை காலத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்த முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடைத் துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளைக் கடைபிடிக்க விவசாயிகளுக்கு சேலம் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 17, 2025

சேலம்: இந்திய கிரிக்கெட் அணியில் சேர வாய்ப்பு 

image

சேலம் : ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 4 வது தெற்கு ஆசிய ரெட் டென்னிஸ் கிரிக்கெட் போட்டிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. 14,17,19 வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கான இந்த தேர்வு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது . கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்குப் பகிரவும். 

News March 17, 2025

சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண்.56106 ஈரோடு – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் நாளை 18.03.2025 ஈரோடு கரூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது; அன்று கரூரில் இருந்து காலை 09.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயங்கும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 17, 2025

“ஹெட்லைட்டை மாற்றலாம் தலையை மாற்ற முடியாது”

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (மார்ச். 16) தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில், ஹெட்லைட்டை மாற்றலாம், தலையை மாற்ற முடியாது என விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 17, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாட்டால் வறண்ட விழித்திரை, மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு சேலத்தில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை 5வயது வரை உள்ள 2,62,674 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் உள்ள ஆரம்ப,துணை மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படும். இதை குழந்தை வைத்துள்ள மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். 

News March 17, 2025

சேலத்தில் முருக பக்தர்கள் செல்ல வேண்டிய கோயில்கள் இதுதான்

image

ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் சேலத்தில் பார்க்க வேண்டிய பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள். ▶️முத்துமலை முருகன் கோயில் (ஏத்தாப்பூர்) ▶️காவடி பழனி ஆண்டவர் திருக்கோயில் (சூரமங்கலம்) ▶️காளிப்பட்டி முருகன் கோயில் (ஆட்டையாம்பட்டி) ▶️கந்தாஸ்ரமம் திருக்கோயில் மற்றும் குமரகிரி தண்டாயுதபாணி கோயில் (சேலம் மாநகர்) ஆகும். இதை மற்ற பக்தர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News March 17, 2025

அரசு பஸ் மோதியதில் இரண்டு பெண்கள் காயம்

image

சேலம், ஆத்தூர் பகுதி சேர்ந்த அம்மம்பாளையத்தில் இரண்டு பெண்கள் நேற்று, இரவு 8:00 மணி அளவில் மோட்டார் பைக்கில் அம்மம்பாளையம் சாலையை கடக்கும் பொழுது ஆத்தூர் டு சென்னை சென்ற அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து 2 பெண்களை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனை அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் ஒரு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல். . 

News March 16, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.16 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.

News March 16, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல் துறை தொடர்ந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 16) மாநகரப் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News March 16, 2025

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் 3,500 வீடுகள்

image

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 580 வீடுகளும், வாழப்பாடி ஒன்றியத்தில் 429 வீடுகளும், கொளத்தூர் ஒன்றியத்தில் 379 வீடுகளும், எடப்பாடி ஒன்றியத்தில் 335 வீடுகளும், தலைவாசல் ஒன்றியத்தில் 279 வீடுகளும், ஆத்தூர் ஒன்றியத்தில் 190 வீடுகளும் என மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 3,500 வீடுகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தகவல்.

error: Content is protected !!