Salem

News March 23, 2025

தங்கம் வெள்ளி நிலவரம் போல் கொலை நிலவரம் என்ன? 

image

சேலம் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு கிடப்பதாகவும், தற்போது தினமும் தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன என கேட்பது போல், தமிழகத்தில் கொலை நிலவரம் என்ன என கேட்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாக தமிழக அரசை குற்றமாட்டினார். 

News March 23, 2025

சேலம் மக்களே இந்த டைம்ல வெளியே போகாதீங்க!

image

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை எட்டி வெப்பக் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வெயிலில் சோர்வு, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

News March 23, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு

image

கோடைக்காலம் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வரும் மார்ச் 28 முதல் ஜூலை 07 வரை வாரத்தில் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் குன்னூர்- உதகமண்டலம், உதகமண்டலம்- குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில்கள் (06177/06180) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 23, 2025

மார்ச் 28 எரிவாயு நுகர்வோர்கள் கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இதில் நுகர்வோர்கள் பங்கேற்று எரிவாயு உருளை பதிவு செய்தல் மற்றும் விநியோகத்தல்,  குறைபாடுகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2025

சேலத்திலிருந்து ஹைதராபாத் செல்லும் விமான நேரம் மாற்றம்.

image

சேலம் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து சேலம் ஹைதராபாத்துக்கு இடையே இயக்கப்படும் இண்டிகோ விமானம் அதன் நேர அட்டவணையை மாற்றி அமைத்துள்ளது. இண்டிகோ விமான பயணம் ஹைதராபாத்தில் இருந்து 10.45AM புறப்பட்டுப் 12.35பின் சேலத்தில் இருந்து 12.55 PM புறப்பட்டு 14.50 PM சென்றடைய உள்ளது. இதனை இண்டிகோ விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News March 23, 2025

சேலம்: போக்குவரத்து கழகத்தில் 486 காலிப்பணியிடம்

image

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் கோட்டத்தில் 486 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். <>இங்கு கிளிக்<<>> செய்து ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம்.

News March 23, 2025

சேலம் மார்ச் 23 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மார்ச் 23 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 7 மணி ‘போதையில்லா தமிழகம்’ என்பது வலியுறுத்தி தன்னார் அமைப்புகள் சார்பில் மாரத்தான் (காந்தி ஸ்டேடியம்) ▶️ காலை 10மணி மாவீரன் பகத்சிங் வீர வணக்கம் (செவ்வாய்பேட்டை) ▶️காலை 10 மணி செவ்வாய்பேட்டை நெல் அரிசி உற்பத்தியாளர்கள் (சங்க மாவட்ட கூட்டம்) ▶️மாலை 5 மணி அனைத்து மணிகள் சங்க கூட்டமைப்பு பேரவை கூட்டம் (சீலநாயக்கன்பட்டி)

News March 23, 2025

பெண்ணின் கழுத்தை அறுத்து முன்னாள் காதலன் கைது 

image

வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ் (27). அவரது மனைவி வனிதா (23). கடந்த 14ல், வாழப்பாடி அரசு பஸ் டிப்போ அருகே வனிதா சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சேலம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வனிதாவின் முன்னாள் காதலர் வேடராஜி (26), வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கினார். இந்தநிலையில்வாழப்பாடி போலீசார் நேற்று, வேடராஜை கைது செய்தனர். 

News March 22, 2025

சேலம்-காரைக்கால் ரயிலை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும்

image

நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் பங்கேற்று பேசிய நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன், “சேலம்-கரூர், கரூர்-திருச்சி, திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயிலை இணைத்து சேலம்-காரைக்கால் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். சங்ககிரி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்த்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

News March 22, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து காவல்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!