India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <

சேலம் மாநகர் மக்களே மின் தொடர்பான பிரச்சனையா, கரண்ட் பில் அதிகமாக வருகிறதா? புதிய இணைப்பு பெறுவதில் ஏதேனும் சிக்கலா? மின் தொடர்பான வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அக்.22ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு அன்னதானப்பட்டி வள்ளுவர்நகர் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் “கடந்த 16ம் தேதி முதல் நேற்று 18ம் தேதி வரை 35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று (19ம் தேதி) 16 லட் சம் பேர் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் சேலம் கோட்ட போக்குவரத்து கழகத்திற்கு பல கோடி வருவாய் கிடைத்துள்ளது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வனச்சரக அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில், பட்டாசு வெடித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் ஏற்காடு, குப்பனூர், டேனிஷ்பேட்டை, உள்ளிட்ட வனப்பகுதி மலைப்பாதையில் பட்டாசு வெடிக்க முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டெல்பின் டோனி (24) என்பவர் நேற்று இரவு நண்பர்களுடன் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கிற்கு சினிமா பார்க்கச் சென்றார். படிக்கட்டில் ஏறியபோது திடீரென மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை!

ஈரோட்டைச் சேர்ந்த ஜெகன்செந்தில், பூமி அரசன், விவேக் ஆகிய மூவரும் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில், காரில் ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் சென்றபோது, திடீரென ஒரு நாய் குறுக்கே வந்தது. இதனால் ஓட்டுநர் பிரேக் போட்டபோது, கார் நிலை தடுமாறி கவிழ்ந்ததுடன், சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதியது. இதில்பலத்த காயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள்<

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <

சேலம் நவம்பட்டி செக்கனுர் பாலம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மேட்டூர் காவல் நிலையத்தில் இருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி சோதனையிட்டனர். முழுவதும் அழுகி இருந்ததால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தானாக இறந்தாரா இல்லை அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.