India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு வனத்துறையின் கட்டுப்பாட்டில் சூழல் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரிப்பால் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். மழையால் நீர்வரத்து அதிகரித்ததால் வனத்துறையினர் பாதுகாப்பு கருதி தடை செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொத்திக்குட்டை ஏரியில் இன்று துணி துவைத்தபோது, 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஏரியில் மூழ்கிய சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இங்கு முதல்முறையாக துணை முதலமைச்சராக வந்துள்ள நிலையில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார்.
சேலத்தில் இன்று நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். இந்நிலையில் “மாவட்ட எல்லையான தலைவாசல் அருகே சாலை நெடுக நின்றிருந்து, என்னை ஆரவாரத்துடன் வரவேற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கு என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை- 2024’ மாநில அளவிலான போட்டிகள் 15வது நாளாக இன்று (அக்.19) சென்னையில் நடைபெற்று வருகின்றன. மாநில அளவிலான பதக்கப் பட்டியலில் 159 பதக்கங்களுடன் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 13 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் சேலம் மாவட்டம் 3- வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. 41 பதக்கங்களுடன் செங்கல்பட்டு மாவட்டம், 2 ஆவது இடத்தில் உள்ளது.
வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் (அக்.19), நாளையும் (அக்.20), நாளை மறுநாளும் (அக்.21) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம் மாநகரில் அவ்வப்போது தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை- 2024’ மாநில அளவிலான போட்டிகள் 15வது நாளாக இன்று (அக்.19) சென்னையில் நடைபெற்று வருகின்றன. மாநில அளவிலான பதக்கப் பட்டியலில் 159 பதக்கங்களுடன் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 13 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் சேலம் மாவட்டம் 3- வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. 41 பதக்கங்களுடன் செங்கல்பட்டு மாவட்டம், 2 ஆவது இடத்தில் உள்ளது.
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, கோவை- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (03326) இன்று (அக்.19) மதியம் 12.55 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், 11 மணி 20 நிமிடங்கள் தாமதமாக நள்ளிரவு 12.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்; சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆயுதபூஜையையொட்டி சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 15 நாள்களாக பயணிகளிடம் பயணச்சீட்டு சிறப்பு சோதனை ரயில்களில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்தது, சுமை கட்டணம் பெறாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 8,390 பேரிடம் அபராதமாக ரூ. 48.61 லட்சம் வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேட்டூர் தேர்தல் மன்னன் பத்மராஜன், 244ஆவது முறையாக நேற்று கேளரா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் கட்நத ஆகஸ்ட் தெலங்கானாவில் எம்.பி பதவிக்கு போட்டியிட 243 முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.