Salem

News October 15, 2024

வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வுக்கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். மழைக்காலத்தில் பாதிப்புகள் நடைபெறாமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
.

News October 15, 2024

வடகிழக்கு பருவமழை: அமைச்சர் திடீர் ஆய்வு

image

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பச்சப்பட்டி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை ராஜேந்திரன் இன்று (அக்.15) காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News October 15, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

சேலம் மாநகரின் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று சேலத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News October 14, 2024

சேலத்தில் இரு சிறார்கள் படுகொலை

image

சேலம் அருகே பனமரத்துப்பட்டி ஒடுவன்காடு பகுதியில் ராஜா என்பவரின் 17 வயது மகளும், 15 வயது மகனும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூரம். பக்கத்து நிலத்தின் உரிமையாளர் தனசேகரன் தலைமறைவு. நில தகராறில் சிறார்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 14, 2024

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான நீர்த்திறப்பு குறைப்பு

image

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து நீர்த்திறப்பு வினாடிக்கு 7,000 கனஅடியில் இருந்து 3,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் பாசனத்திற்கான நீர் தேவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

சேலம் மாவட்டத்தில் கோழி வளர்ப்போர் கவனத்திற்க்கு

image

சேலம் மாவட்டம், சந்தியூர் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் அக்.16-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை முறைகள் ஒருநாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் ரூபாய் 354 பதிவுக்கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் 60 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.

News October 14, 2024

சேலத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு

image

சேலத்தில் ஆளுநர் வருகையையொட்டி விமான நிலையம், . மேச்சேரி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் 400 போலீசாரும், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அவர் செல்லும் பாதையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News October 14, 2024

சேலத்தில் 82 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

சேலம் மாநகரில் கடந்த 9 மாதத்தில் 82 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

ஆளுநர் நாளை சேலம் வருகை: போலீஸ் குவிப்பு

image

ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் வருகிறார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் வந்திருக்கும் அவர் பெரியார் பல்கலைக்கழகம் சென்று தங்குகிறார். பிற்பகல் 3 மணிக்கு மேச்சேரியில் அகில இந்திய நெசவாளர் நல சங்கம் சார்பில் நடக்கும் சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று ஆளுநர் சிறப்புரையாற்றுகிறார். போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News October 14, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து 17,596 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 89.920 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 52.559 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

error: Content is protected !!