India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஏப்.13 முதல் ஜூன் 01 வரை திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவையும், ஏப்.14 முதல் ஜூன் 02 வரை மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவையும் நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பனைமடல் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும், 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கர்ப்பமான சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து வாழப்பாடி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை பொக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்ட வழங்கல் (ம) விற்பனை சங்கத்தில் கணக்காளர், இரவு நேரக் காவலர் பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார். விண்ணப்பங்களை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ மேலாளர், சூரமங்கலம் நகர்ப்புற வாழ் வாதார மையம், அறை எண் 207,2-ம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் ஏப்.15 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஊதியம் ரூ.25,000 வழங்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.

சேலம் மாவட்டத்தில் புதியதாக மாவட்டச் சிறை ஒன்று கட்டப்பட உள்ளதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு ஆகியோரை தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வரர் தயாள் நேரில் சந்தித்து பேசியதாகவும், சேலம் மத்திய சிறையில் ஆய்வுச் செய்து சிறை வாடர்களிடம் கோரிக்கை மனுக்களை டிஜிபி பெற்று கொண்டதாக அதிகாரிகள் தகவல்.

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க.

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, பல இடங்களில் பரவலாக மழையும் பெய்தது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE IT!

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாய் கடியால் காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பண்டிகைகள், விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் வரும் மே 04- ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளிக்கிழமையில் தாம்பரத்தில் இருந்து போத்தனூருக்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் போத்தனூரில் இருந்து தாம்பரத்திற்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (06185/06186) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூபாய் 50 உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 886.50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.