India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலத்தைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 32) என்பவர் மணியனூரைச் சேர்ந்த திருநங்கை சரோ என்பவரை இருவீட்டாரின் சம்மதத்துடன் முறைபடி திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு பல்வேறு தரப்பினரும் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உங்கள் வாழ்த்துகளை கீழே கமெண்ட் செய்யுங்கள்!
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செப்.10) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் நடைபெற்றது .இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தகவல் தெரிவித்தார்.
சேலம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 35 வயதுகுட்பட்ட மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கான அரிய வாய்ப்பு இவர்களுக்கு ஜெர்மனியில் பணிபுரிய ரூ.2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை மாத சம்பளம் பெற வாய்ப்புள்ளது. அதற்காக ஜெர்மன் மொழி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது தகுதிவாய்ந்தவர்கள இணையதளத்தில் www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெற சேலம் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் படிப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு உழவர் நலம் மையம் அமைக்க ரூபாய் 3 லட்சம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register இணையதளத்தில் விபரங்களை அறிந்து கொண்டு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.
புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? அல்லது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம்,தொலைபேசி எண் போன்றவை ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா? உங்களுக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகின்ற 13.09.2025 அன்று குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இரா. பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.SHAREit
சேலம் அழகாபுரம் பாலம் அருகே நரிக்குறவர் பெண்ணின் 9 மாத பெண் குழந்தை கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இது குறித்து அழகாபுரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் குழந்தையை கடத்திய பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நாமக்கலில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்து குழந்தையை மீட்டு சேலம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
சேலம் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க
சேலம் மாவட்டத்தில் ▶️பனிக்கனூர் பூமி செடி சந்தல் திருமண மண்டபம், ▶️பனமடல் விஜயா தரணி திருமண ஹால், ▶️வெள்ளாளக்குண்டம் ஸ்ரீ வாசவி மஹால், ▶️ஏகாபுரம் ஸ்ரீ ஆதிசேசா திருமண மண்டபம், ▶️மேட்டூர் அணை, சி.எஸ்.ஐ. குட் சேவியர் ஸ்டேடியம், ▶️சேலம் நேரு கலையரங்கம் ஆகிய இடங்களில் நாளை (செப்.11) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
▶️லைசென்ஸை மொபைல் எண்ணை இணைக்க https://parivahan.gov.in/ என்ற வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்
▶️அங்கு,உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளில் ‘Update Mobile Number’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்
▶️பின்னர் ஓட்டுநர் உரிம எண்,பிறந்த தேதி போன்ற போன்ற விவரங்களை உள்ளிட்டு, மொபைல் எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம்
▶️அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.