India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.28 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
ரூபாய் 25 கோடியில் சர்வதேச தரத்தில் 8 தடங்கள் கொண்ட செயற்கை தடகள ஓடுபாதையுடன் இயற்கை கால்பந்து புல்வெளி மைதானம் சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் நீர்த்தெளிப்பான் வசதி, பாதுகாப்பு வேலி, தடகள மற்றும் கால்பந்து உபகரணங்கள், நீளம் தாண்டுதல் குழி மற்றும் பிற தேவையான வசதிகள் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் பணிபுரிந்து வரும் 145 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தாரமங்கலத்தில் இருந்த வசந்தா நங்கவள்ளி ஒன்றியத்திற்கும், ஏற்காட்டில் இருந்த மணிகண்டன் மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கும், சேலத்தில் இருந்த அமுதா தாரமங்கலத்திற்கும், மேச்சேரியில் இருந்த சரவணன் காடையாம்பட்டிக்கும் என 145 பேர் மாற்றம்.
தமிழகத்தில் வருவாய்த்துறையில் தாசில்தாராக பணிபுரிந்து வரும் 26 அலுவலர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கி கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் தாசில்தாராக இருந்த மகேஸ்வரி, கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (தேர்தல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் வழியாக செல்லும் சாம்பல்பூர்- ஈரோடு- சாம்பல்பூர் சிறப்பு ரயில்களில் (08311/08312) வரும் ஏப்ரல் முதல் மே 02- ஆம் தேதி வரை மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், ஸ்லீப்பர் பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அதே பகுதியை சேர்ந்த தங்கவேலு என்ற முதியவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக புருஷோத்தமன் முதியவரைப் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர், புருஷோத்தமனை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை.
சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் ஈரோடு- நான்டெட் வாராந்திர சிறப்பு ரயில்கள் (07189/ 07190) வரும் மே மாதம் முதல் வாரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் ஏப்.09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கும், ஏப்.10, 17, 24, மே 01 தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் (01005/01006) இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மார்ச் 30- ஆம் தேதி காலை 08.00 மணிக்கு தொடங்கும்.
சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில், வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கைப்பேசியில் யாரேனும் தொடர்பு கொண்டு தங்களுக்கு பரிசு விழுந்துள்ளது.அதற்கு குறிப்பிட்ட தொகையை அனுப்புங்கள் என சொன்னாலும், Google Pay பின் நம்பர் போன்ற எதையும் சொல்லக்கூடாது என வலியுறுத்தினர். சைபர் கிரைம் புகார்களுக்கு அழையுங்கள் 1930. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து மோசடியிலிருந்து விழிப்புணர்வுடன் இருங்கள்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.27 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Sorry, no posts matched your criteria.