India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குதிரை சவாரி போட்டியில் ஆத்தூர் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவி பிரியங்கா கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இன்று மாணவி பிரியங்காவை பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குனர் பாராட்டினர்.
சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்- கோவை வாராந்திர சிறப்பு ரயில் சேவை, பயணிகள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் தாம்பரம்- கோவை ரயில் வரும் பிப்.28- ஆம் தேதி வரையும், கோவை- தாம்பரம் சிறப்பு ரயில் வரும் மார்ச் 02- ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்.05ம் தேதி நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குரிமைப் பெற்ற அனைத்து தொழிலாளர்களும் வாக்களிக்கும் வகையில் அனைத்து தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட விவசாயிகள் மாதாந்திர குறைதீர் கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா 4,704 மெட்ரிக் டன்னும், டி ஏ பி 2,041 மெட்ரிக் டன்னும், பொட்டாஸ் 5,389 டன்னும், காம்ப்ளக்ஸ் 3902 டன்னும், ஆக மொத்தம் 16,036 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளதாகவும், கடந்த ஆண்டு 1,95,099.6 ஹெக்டர் நிலப்பரப்பு சாகுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சேலம் (பிப்ரவரி 1) இன்றைய முக்கிய நிகழ்வுகள்:1) காலை 9:30 மணி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் – அழகாபுரம் திரௌபதி அம்மன் கோவில் .2) காலை 10 மணி கோட்டை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா – அமைச்சர் பங்கேற்பு. 3) காலை 10 மணி கோட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவ துவக்கம். 4) காலை 10 மணி சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் பிப்.16ல் சேலம் வழியாக கோவையில் இருந்து பனாரசுக்கும், பிப்.22- ல் பனாரசில் இருந்து கோவைக்கும் சிறப்பு ரயில்கள் (06187/ 06188) இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் சிறப்பு ரயில்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று (பிப்.1) முதல் அமலுக்கு வருகிறது என சேலம் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து அறிவித்துள்ளனர். கட்டிங் மற்றும் சேவிங்கிற்கு ரூ.200, கட்டிங் மட்டும் ரூ.150, மாடல் கட்டிங் ரூ.180, சேவிங் மட்டும் ரூ.80 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக, ஆத்தூர் வெங்கடேசனை நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். மேலும், மாவட்ட இணை செயலாளர் விஜய், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர்களாக சக்தி , அரவிந்த் குமார் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 11 மணியளவில் பணியில் இருந்த மருத்துவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மருந்து செலுத்திய 6 நோயாளிகளின் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் ஒரு நோயாளி இறந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனை அரசு மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் மறுத்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம் இ.ஆ.ப, நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.