India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடப்பாண்டில், இதுவரை 8,922 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாக டீன் தேவி மீனாள் தெரிவித்துள்ளார். இதில் 3,761 பேருக்கு சுகபிரசவமும், 5,161 பேருக்கு அறுவை சிகிச்சை மூலமும் குழந்தை பிறந்தது. 4,614 ஆண் குழந்தைகளும், 4,308 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு நீதிமன்றங்களில் வரும் டிசம்பர் 14-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது. சமரசம் செய்துக் கொள்ளக்கூடிய காசோலை, வங்கிக்கடன், கல்விக்கடன், தொழிலாளர் நலன் உள்ளிட்ட வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் இணைந்து, மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர் கூட்டத்தை நடத்துகிறது. அதன்படி, சேலம், அத்வைத ஆசிரம சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று (நவ.27) காலை 9 மணிக்கு தொடங்கி மாலை, 05.45 வரை கூட்டம் நடக்கிறது. ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள் குறைகளை நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.
➤காலை முதல் 10 மணி முதல் அனைத்து மாநகர காவல் நிலையங்களிலும் வாராந்திர மனுநீதி முகாம். ➤காலை 11 மணி காவல்துறையை கண்டித்து மக்கள் தேசம் கட்சி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம். ➤பகல் 11 மணி தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் சார்பில் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு. ➤பிற்பகல் 12 to 1 உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அன்னதானம்.
சேலத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு போக்குவரத்து செலவு உட்பட நாளொன்றுக்கு ரூ.1000 வீதம் மாதத்திற்கு 9 நாள்கள் என ஆண்டு முழுவதும் வழங்கப்படும். இது தற்காலிக பணியாகும். கடைசிநாள் 11.12.2024 ஆகும். மேலும், விபரங்களுக்கு 0427-2415966 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்கவும், மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய இரவு ரோந்து பணி செல்லும் அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கொல்லம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06111) இன்று (நவ.26) இரவு 11.20 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் இணைந்து மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அதன்படி, சேலம் அத்வைத ஆசிரம சாலையில் உள்ள தனியார பள்ளியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் உறுப்பினர் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் இ.பி.எஃப். விழிப்புணர்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் துவங்கப்படுகிறது. சேலத்தில் பி.பார்ம் சான்று பெற்றவர்கள் www.mudhalvar marunthagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பினை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ளார். இதற்கு வருகின்ற (30.11.2024) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், ஊரகப் பகுதிகளில் சுய உதவி குழு மகளிர்க்காக, 40 சமுதாய மேம்பாட்டு பள்ளிகள் வாயிலாக, மூலிகை பொருட்கள், மசாலா பொடிகள், அகர்பத்தி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அந்தந்த ஊரகப் பகுதி மாதிரி பள்ளிகளில் 15 முதல் 30 நாட்கள் வரை அளிக்கப்பட உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் விசாரித்து பயன்படுத்திகொள்ளுமாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.