India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய நவம்பர் 22ஆம் தேதி இரவு அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டது.
வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு செய்வோருக்கு தொழில் வரி விதிக்கக் கூடாது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் தொழில் வரி விதிக்கக் கூடாது. கைத்தறி, விசைத்தறி ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பதில் விலக்கு பெற வேண்டும். நூலுக்கான வரிகளை முழுமையாக நீக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள, கிழக்கு ராஜாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர், மது போதையில் மாணவர்களை கால் அமுக்க வைத்த வீடியோ வைரலானது. இதனை அடுத்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், கணித ஆசிரியர் ஜெயபிரகாசை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, சேலம் வழியாக ஈரோடு- நாக்பூர் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நவ.23-ல் ஈரோட்டில் இருந்தும் நாக்பூருக்கும் (06163), நவ.27-ல் நாக்பூரில் இருந்தும் ஈரோட்டிற்கும் (06164) எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் பல்கலைக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் டிசம்பர் 03, 04 ஆகிய தேதிகளில் ஆண்கள், பெண்களுக்கான பிரிவுகளில் நடைபெறவுள்ளன. ஓட்டம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்தாண்டில் இதுவரை 68,763 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்துள்ளனர் என 108 ஆம்புலன்ஸ் சேலம் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார். இதில் விபத்தில் சிக்கி காயமடைந்த 12,430 பேரும், விஷம் குடித்த 5,445 பேரும், இருதய பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 4,152 பேரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் ஆத்தூர் உட்பட புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழ்நாடு ஃபேக்ட் செக் தகவல் வெளியிட்டுள்ளது. இது போன்ற எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசால் வெளியிடவில்லை என்றனர். தவறான தகவல் பரவுகிறது எனவே ஆத்தூர் மக்களே ஷேர் பண்ணுங்க.
சேலம் மாவட்டத்தில் (நவ.22) இன்றைய நிகழ்ச்சிகள். ➤ காலை 9 மணி மாலை 5 மணி வரை சேலம் உருட்டாலையில் தொழிற்சங்க தேர்தல். ➤ காலை 10 மணி தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் சங்கம் ஆர்ப்பாட்டம். ➤ காலை 10 மணி தெய்வீகம் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் விவசாய கண்காட்சி துவக்கம். ➤ காலை 09:30 to 1 மணி வரை அம்மாபேட்டை எஸ்பிஎம்எம் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை முகாம். ➤அருள்மிகு ஈஸ்வரன் கோவிலில் காலபைரவர் பூஜை.
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு நேற்று மாலை சேலம் ஜங்ஷனிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அதே ரயிலில் இருந்தார். இந்த எதிர்பாராத சந்திப்பு இரண்டு அமைச்சர்களிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் உள்ள துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று(நவ.22) மின்பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், கந்தம்பட்டி, தாரமங்கலம், உடையாப்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களுக்கு கீழ் உள்ள ஊர்களில் மின்விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்காது. Share பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.