India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இன்றைய நிகழ்வுகள்:➤ காலை 10 மணி மனம் மன்றம் பாவலர் 75 பவள விழா சண்முக மருத்துவமனை.➤ காலை 10 மணி முத்தமிழ் மன்றம் தமிழர் விருது வழங்கல் சேலம் கேசில்.➤ காலை 10 மணி நாம் தமிழர் கட்சியின் ரத்த தான முகாம் தாதகாப்பட்டி.➤ காலை 8 மணி சிறார்களுக்கு ஓவியத் திறனை மேம்படுத்தும் மகிழ்ச்சி சுவர் திட்டத்தின் கீழ் ஓவிய போட்டி.➤ மதியம் 3 to 4 மத்திய அரசை கண்டித்து இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிரவும், மாநகர காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில். அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு. இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி. கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் சிறந்த கலை படைப்புகளுக்கு அரசின் சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு கலை பண்பாட்டுத் துறையின் சேலம் மண்டல அலுவலகத்தை 0427-2386197 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சேலம், தளவாய்ப்பட்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் டாக்டர் ரா.பிருந்தாதேவி பார்வையாளராக கலந்து கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம், ஒன்றியக் குழுத்தலைவர் மலர்க்கொடி ராஜா, தளவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் 12-வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (நவ.23) சேலம் மாவட்டம், பூலாவரியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன், மாலை வைத்து மரியாதைச் செலுத்தினார். தொடர்ந்து, திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கம், தி.மு.க. நிர்வாகிகள் மரியாதைச் செலுத்தினர்.
சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்!
சேலம் மாவட்டத்தில் (நவ.23) இன்றைய நிகழ்ச்சிகள். ➤மூவேந்தர் கலை அரங்கில் திரையிடலும் கலந்துரையாடலும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ➤தெய்வீகம் திருமண மண்டபத்தில் விவசாய கண்காட்சி இரண்டாம் நாள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. ➤ சேலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. ➤சொத்து வரி, குடிநீர் இணைப்பு வரி ரூ.7.59 லட்சம் நிலுவை வைத்திருந்ததால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு.
சமூக நீதிக்காக பாடுபட்டவர்களை சிறப்பு செய்வதற்காக சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டிற்கான விருந்துக்கு தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 110 அலுவலகத்தில் நேரடியாகவோ கடிதம் மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு கலெக்டர் பிருந்தா தேவி கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் வரும் நவம்பர் 29-ம் தேதி புத்தகத் திருவிழா தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் 150-க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை அரங்குகளுடன், அறிவுச்சார்ந்த பல்வேறு காட்சி அரங்குகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக டிச.23,30-ல் மச்சிலிப்பட்டணம்- கொல்லம் (07147), டிச.25, ஜன01-ல் கொல்லம்- மச்சிலிப்பட்டணம் (07148), டிச.06,13,20,27-ல் மௌலா அலி- கொல்லம் (07143), டிச.08,15,22,29-ல் கொல்லம்- மௌலா அலி (07144), டிச.02,09,16-ல் மச்சிலிப்பட்டணம்-கொல்லம் (07145), டிச.04,11,18- ல் கொல்லம்- மச்சிலிப்பட்டணம் (07146) ரயிலுகளுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Sorry, no posts matched your criteria.