Salem

News December 2, 2024

சேலம் தலைப்புச் செய்திகள்

image

1.சேலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
2.சேலத்தில் பல்வேறு பகுதியில் மழை
3.உத்தமசோழபுரத்தில் 1,008 சங்காபிஷேகம்
4.முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
5.ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
6.வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு அறிவுறுத்தல்

News December 1, 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

image

ஃபெங்சல் புயல் காரணமாக சேலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ஏற்காடு செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

News December 1, 2024

சேலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

image

சேலம் மாவட்டத்தில் நாளை (டிச.2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News December 1, 2024

இரவு நேர ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக மாநகர காவல் துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி நடைபெறுகிறது. இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மாநகரப் பகுதி முழுவதும் இன்று ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News December 1, 2024

ஸ்டேஷனில் பூஜை: இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

image

ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் தொடர்ந்து, விபத்து, கொலை, போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றன .குற்ற நடைபெறாமல் இருக்க சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பூசணிக்காய் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டதாக வீடியோ வைரல் வைரலானது. ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரனை, சேலம் ஆயுதப்படைக்கு தற்காலிக பணியிடம் மாற்றம் செய்து சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம்கோயல் நேற்று உத்தரவிட்டார்.

News December 1, 2024

வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு அறிவுறுத்தல்

image

சேலம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளான பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டுமென பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News December 1, 2024

திறன் வளர்ப்பு பயிற்சியுடன் கூடிய வேலை

image

சேலம் மாவட்டத்தில் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் இலவச திறன் வளர்ப்பு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான தேர்வு முகாம், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும் டிசம்பர் 04-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கவுள்ளது. இதில் தேர்வுச் செய்யப்படுவோருக்கு இலவசமாக சீருடை, உணவு, தங்குமிட வசதி ஆகியவை தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2024

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

image

சேலம், மேட்டூர் அணைக்கு, இன்று காலை நிலவரப்படி, வரும் நீரின் அளவு வினாடிக்கு 4528 கன அடியிலிருந்து வினாடிக்கு 5195 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

News December 1, 2024

சேலம் விமான பயணிகளின் கவனத்திற்கு

image

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை, மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவனம், இரண்டாவது நாளாக இன்றும் (டிச.01) சேலம்- சென்னை, சென்னை- சேலம் இடையேயான விமான சேவைகளை ரத்துச் செய்துள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/check-flight-status.html என்ற இணையதளத்தை அணுகலாம்.

News December 1, 2024

முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை

image

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கள்ள நத்தம் முட்டல் பகுதியில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்துறையினர் நீர்வீழ்ச்சி மற்றும் பூங்காவை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளது. இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

error: Content is protected !!