India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வுப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. “DON’T DRINK AND DRIVE” என்ற எச்சரிக்கையுடன், வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையில், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை தவிர்க்குமாறு, பொதுமக்களை மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உயிர்கள் பாதுகாக்க சேலம் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரயில் பயணிகளின் வசதிக்காக வரும் ஆக.14- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும், மறுமார்க்கத்தில், வரும் ஆக.17- ஆம் தேதி போத்தனூரில் இருந்து சென்னை சென்டரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும், என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான (Sports Quota) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 50 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர், முதுநிலை எழுத்தர் (கிளார்க்), இளநிலை எழுத்தராக பணியமர்த்தப்படுவர். இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

சேலத்தில் சிறை கைதி மணிகண்டனை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பின்பு சிறையின் நுழைவாயிலில் மணிகண்டன் மீது மெட்டல்டிடெக்டர் கருவி கொண்டு சோதித்தனர். அப்போது அவர் ஆசன வாயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது பின்னர் இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். மேலும், அஸ்தம்பட்டி காவல் துறையின் விசாரணை நடத்தினர்

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர்( Office Assistant) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.15,700 முதல் 58,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ‘The Advocate General of Tamil Nadu, High Court, Chennai -600104’ எனும் முகவரிக்கு ஆக.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். படிவத்திற்கு <

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: ▶️காலை 10:30 மணி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடன் தள்ளுபடி கோரி ஆர்ப்பாட்டம், கோட்டை மைதானம் ▶️காலை 11 மணி: கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம், கோட்டை மைதானம் ▶️காலை 10 மணி: நெசவாளர்களுக்கான மருத்துவ முகாம் அமைச்சர் தொடங்கி வைப்பு, வனவாசி▶️ கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் உருலுதண்டம் வைபவம்.

சேலம்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <

சேலத்தில் நாளை(ஆக.8) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்கள்: ♦️அதிகாரி பட்டி தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் அருகே♦️ இடங்கணசாலை நகராட்சி திருமண மண்டபம் இடங்கணசாலை♦️ கெங்கவல்லி குமரன் திருமண மஹால், கெங்கவல்லி ♦️வாழப்பாடி ஜெயமுருகன் திருமண மண்டபம், பேளூர் ♦️பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா பெருமாள் திருமண மஹால், புத்திரகவுண்டம்பாளையம் ♦️ஆத்தூர் கோல்டன் திருமண மண்டபம், கொத்தம்பாடி

சேலம் மக்களே.., தமிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே<
Sorry, no posts matched your criteria.