India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஆகஸ்ட் 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 9:30 மணி தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் மாநாடு மெய்யனூர் ▶️காலை 11 மணி அரசு அனைத்து துறை எஸ்சி எஸ்டி பணியாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்▶️ காலை 11 மணி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நலன் காக்கும் மருத்துவ முகாம் இடங்கணசாலை▶️ மின்னாம்பள்ளி மகேந்திரா பொறியியல் கல்லூரியில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம், ஆகியவை நடைபெறுகிறது.

சேலம் மக்களே..தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் சேலத்தில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்த தகவல் மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <

போதை இல்லா தமிழ்நாடு என்பதை உருவாக்கும் விதமாக வருகின்ற 11-ம் தேதி திங்கட்கிழமை மாநிலம் முழுவதும் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. சிஎம் காணொளி வாயிலாக உறுதியேற்கிறார். சேலத்தைச் சேர்ந்த பொதுமக்களும் இணையதளம் https://www.drugfreetamilnadu.tn.gov.in/ மேலும் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து உறுதிமொழி ஏற்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பெறலாம், என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

சேலம் ரயில்வே பகுதிகளில் இயங்கும், ரயில்களில் பயணிக்கும் சிலர் பீடி, சிகரெட், புகைப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து போலீசார் சேலம் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து ரயில்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் பீடி, சிகரெட், குடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பிஎப் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயணிகள் இது தொடர்பாக 139 அழைத்து புகார் செய்யலாம்.

சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் நாளை (ஆக.9) தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் அறிமுகமில்லாதவர்கள் தொடர்பு கொண்டு, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி QR குறியீட்டை ஸ்கேன் செய்து PIN எண்ணை சொல்லும் மோசடிகள் நடைபெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் நிதி மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வரும் ஆக.10- ஆம் தேதி அன்று சேலம் வழியாக செல்லும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், கோவை ரயில் நிலையம் செல்லாது. மாறாக, போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும், என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம்) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் அருகே உள்ள அரசு நிர்வாக கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணனுங்க!
Sorry, no posts matched your criteria.