India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤காலை 9 மணி தமிழ்நாடு வருவாய்த்துறையினர் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. ➤சேலம் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. ➤காலை 11 மணி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் சிபிஎம் ஆபீசில் நடக்கிறது. ➤காலை 11 மணி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சேலத்தில் புத்தக கண்காட்சி வரும் 29ஆம் தேதி துவங்கி வரும் டிச.9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 100 பதிப்பங்கள் 2 லட்சத்திற்கு மேல் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. புத்தக பிரியர்களே ஷேர் பண்ணுங்க.
சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 4ம் வகுப்பு பயின்று வரும் மாணவி கிருத்திகா. இவர் 100 திருக்குறளை பார்க்காமல் எழுதி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்காக இன்று மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் மாணவி கிருத்திகாவின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
கடந்த இரண்டு வாரங்களில், சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாட்கள் நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் வாயிலாக, சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டமன்றத் தொகுதிகளில் 84 ஆயிரத்து 620 விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்தும் அடங்குமென மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு சிறுபான்மை இன பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும், தொழில் கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் திட்டங்களைப் பெற விரும்புவோர், தங்களது ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து கீழ் இருப்பின், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மை நல துறை அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி இன்று அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருகின்ற 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. நவம்பர் 24-க்கான மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215ல் நடைபெறும். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, வேளாண்மை சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
சேலம் மாவட்டத்தில் சிறிய ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக, ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணி நூல் துறையின் மண்டல இணை இயக்குனர், முன்னோடி வங்கி மேலாளர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில், 4 நாட்கள் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 42,411 பேரும், பெயர் நீக்கத்திற்காக 12,229 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக 29,980 பேரும் என மொத்தம் 84,620 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக, சேலம் மேற்கு தொகுதியில் பெயர் சேர்க்க 4,944 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். நிலப் பிரச்சனை தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இதுவரை 12,019 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், 4,710 பேர் பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.