Salem

News December 5, 2024

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

மேல்பாக்கம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.06) சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12680) காட்பாடி வரையிலும், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12679) காட்பாடியில் இருந்து புறப்படும். இந்த ரயில், காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News December 5, 2024

சேலம் வழியாக செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு

image

சேலம் வழியாக சம்பல்பூர்- ஈரோடு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை (08311/08312) வரும் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.11,28,25, ஜன.01,08,15,22,29, பிப்.05,12,19,26, மார்ச் 05 ஆகிய தேதிகளில் சம்பல்பூரில் இருந்தும், டிச.13,20,27, ஜன.03,10,17,24,31, பிப்.07,14,21,28, மார்ச்.07 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்தும் இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

News December 5, 2024

முதல்வர் மருந்தகம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.

News December 5, 2024

டிக்கெட்டின்றி பயணம்: ரூ.1.81 கோடி அபராதம்

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ரயில்களில் டிக்கெட்டின்றியும், முறைகேடாகவும் பயணித்த 27,500 பயணிகளிடம் ரூ.1.81 கோடி அபராதம் விதிக்கப்பட்டு டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க ரயில்வே துறை அதிகாரிகள் அறிவுறுத்தல். 

News December 5, 2024

சேலம்: இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம் வெளியாகியுள்ளது. 

News December 4, 2024

சேலம் மாவட்டத்தில் 27.4 மி.மீ. மழை பதிவு

image

சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.04) காலை 6 மணி வரை 27.4 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, ஆணைமடுவுவில் 7 மி.மீ. மழையும், வீரகனூரில் 6 மி.மீ. மழையும், ஏற்காடு, ஆத்தூரில் தலா 5.6 மி.மீ. மழையும், தம்மம்பட்டியில் 1 மி.மீ. மழையும், சேலம் நகரில் 0.8 மி.மீ. மழையும், வாழப்பாடியில் 1.4 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

News December 4, 2024

வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது

image

தொடர் கனமழை காரணமாக சேலம், கந்தம்பட்டி பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை சீர்செய்யும் பணியினை நேற்று (டிச.3) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேரில் ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தியதன் அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் முடிவுற்று நேற்று மாலையே வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது அச்சாலையில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

News December 4, 2024

மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி 

image

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சேலம்-ஏற்காடு பிரதான சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டு இன்று (டிச.04) பிற்பகல் 03.00 மணி முதல் போக்குவரத்துக்கு இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார். இதனால் ஏற்காட்டில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

News December 4, 2024

ஏற்காட்டில் ரூ.150க்கு தக்காளி

image

சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

News December 4, 2024

தேர்தல் மன்னன் 246-ம் முறை மனு

image

சேலம் மாவட்டம், மேட்டூர், ராமன்நகர், இரட்டைபுளியமரத்தூரை சேர்ந்த, ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் (66). இவர் நேற்று (டிச.03) 246-வது முறையாக ஆந்திரா மாநிலம், விஜயவாடா மாவட்டம் அமராவதியில் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு போட்டியிட, தேர்தல் நடத்தும் அலுவலர் வனிதா ராணியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

error: Content is protected !!