Salem

News November 27, 2024

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

➤காலை முதல் 10 மணி முதல் அனைத்து மாநகர காவல் நிலையங்களிலும் வாராந்திர மனுநீதி முகாம். ➤காலை 11 மணி காவல்துறையை கண்டித்து மக்கள் தேசம் கட்சி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம். ➤பகல் 11 மணி தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் சார்பில் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு. ➤பிற்பகல் 12 to 1 உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அன்னதானம். 

News November 27, 2024

காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

image

சேலத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.  இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு போக்குவரத்து செலவு உட்பட நாளொன்றுக்கு ரூ.1000 வீதம் மாதத்திற்கு 9 நாள்கள் என ஆண்டு முழுவதும் வழங்கப்படும். இது தற்காலிக பணியாகும். கடைசிநாள் 11.12.2024 ஆகும். மேலும், விபரங்களுக்கு 0427-2415966 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

News November 26, 2024

சேலத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்கவும், மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய இரவு ரோந்து பணி செல்லும் அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

News November 26, 2024

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கொல்லம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06111) இன்று (நவ.26) இரவு 11.20 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

News November 26, 2024

நாளை பி.எப். குறைதீர்க்கும் கூட்டம்

image

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் இணைந்து மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அதன்படி, சேலம் அத்வைத ஆசிரம சாலையில் உள்ள தனியார பள்ளியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் உறுப்பினர் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் இ.பி.எஃப். விழிப்புணர்வு நடைபெற உள்ளது.

News November 26, 2024

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்!

image

தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் துவங்கப்படுகிறது. சேலத்தில் பி.பார்ம் சான்று பெற்றவர்கள் www.mudhalvar marunthagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பினை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ளார். இதற்கு வருகின்ற (30.11.2024) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2024

மகளிர் சுய உதவி குழுக்களான சிறப்பு பயிற்சிகள்

image

சேலம்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், ஊரகப் பகுதிகளில் சுய உதவி குழு மகளிர்க்காக, 40 சமுதாய மேம்பாட்டு பள்ளிகள் வாயிலாக, மூலிகை பொருட்கள், மசாலா பொடிகள், அகர்பத்தி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அந்தந்த ஊரகப் பகுதி மாதிரி பள்ளிகளில் 15 முதல் 30 நாட்கள் வரை அளிக்கப்பட உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் விசாரித்து பயன்படுத்திகொள்ளுமாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

News November 26, 2024

முதல்வரை கண்டித்து போராட்டம்

image

சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சியினர் 100-க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாமக நிறுவனர் ராமதாஸை, முதல்வர் ஸ்டாலின் கூறி கருத்து தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

News November 26, 2024

நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

சேலம் அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின்ரோடு, ஸ்டேட் பாங்க் எதிரில், தெற்கு மின் கோட்டத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (நவ.27) நடக்கிறது. வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் காலை 11 மணிக்கு கூட்டம் நடக்கிறது. எனவே, கோட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர் கலந்து கொண்டு மின் தொடர்பான குறைகள், கோரிக்கையை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

News November 26, 2024

குழந்தைகளுடன் கர்ப்பிணி தற்கொலை

image

சேலம், இடையப்பட்டி ஊராட்சி நெய்யமலை அக்கரைப்பட்டி கிராமத்தில் குடும்பத் தகராறில் மணமடைந்த விவசாயி ரவியின் மனைவி மாதம்மாள்(30). தனது இரு பெண் குழந்தைகள் மனோரஞ்சனி, நித்தீஸ்வரி ஆகியோருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை மூவரது உடலையும் கைப்பற்றி ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!