India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

சேலம் மாவட்டம் பேளூர் அமைந்துள்ளதுள்ளது, 1000 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகரை வழிபட்டால் நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யவும்.

“திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது. இன்னும் 8 மாதத்தில் கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது குறித்து செய்தியாளர்கள் பேச்சிலேயே தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. அந்த 8 மாதத்தில் சிறப்பான கூட்டணி அமையும். அப்போது அனைவருக்கும் தெரிவிப்போம்” என சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 132 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

மின்னாம்பள்ளி மகேந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (09.08.2025) நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை, மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குநர் மரு.செ.மணி உடனிருந்தனர்.

சேலம் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<

ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, எடப்பாடி, இளம்பிள்ளை, ஆத்தூர், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட 13 உழவர்சந்தைகளில், நேற்று ஒரே நாளில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 303.80 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை சுமார் 72,200 நுகர்வோர்கள் வாங்கி சென்றனர். நேற்று மட்டும் ரூபாய் 1.25 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

சேலம் மக்களே நீண்ட கால முதலீட்டில் அதிகபட்ச வட்டி வருமானத்தை தரக்கூடிய ஓர் சூப்பர் திட்டம் ’கிசான் விகாஸ் பத்ரா(KVP)’. தபால் நிலையத்தின் சேம்பித் திட்டமான இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். ஆக, ரூ.1 லட்சம் செலுத்தினால் எடுக்கும் போது அதே பணம் இரட்டிப்பாக ரூ.2 லட்சமாகிவிடும். இதுகுறித்த விவரம், முதலீடு செய்ய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!

சேலத்தில் இன்று (ஆக.9) ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
▶️ சூரமங்கலம் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி.
▶️உடையாப்பட்டி ஸ்ரீ சேக்கிழார் திருமண மண்டபம் உடையாபட்டி.
▶️மேட்டூர் சிவகாம சுந்தரி திருமண மண்டபம் மேட்டூர்.
▶️தலைவாசல் ஸ்ரீ அன்னபூர்ணா திருமண மண்டபம்.
▶️ நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வீரனூர்.
▶️ஓமலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காமலாபுரம். ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற உள்ளது.

சேலம் ஆகஸ்ட் 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 9:30 மணி தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் மாநாடு மெய்யனூர் ▶️காலை 11 மணி அரசு அனைத்து துறை எஸ்சி எஸ்டி பணியாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்▶️ காலை 11 மணி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நலன் காக்கும் மருத்துவ முகாம் இடங்கணசாலை▶️ மின்னாம்பள்ளி மகேந்திரா பொறியியல் கல்லூரியில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம், ஆகியவை நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.