India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெங்கல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காமலாபுரம், செம்மாண்டப்பட்டி, காருவள்ளி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
1.சேலம் மாவட்டத்தில் இன்று அமாவாசையை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
2.சேலம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
3.தந்தை மகள் காதலை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
4.பழங்குடியின மாணவ மாணவிகளுக்கான பயிற்சி முகாம்
5.பட்டாசு வெடித்ததில் தீ – உடல் கருகி சிறுமி உயிரிழப்பு
6.சேலம்: ரூ.1 லட்சம் பரிசு விண்ணப்பிக்கலாம்
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் 30இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், குண்டுக்கல் கிராமத்தை சுற்றியுள்ள தொப்பூர், பையுரான்கொட்டாய், ஜோடுகுளி, வணம்கொண்டாமலை, குல்லக்கவுண்டனூர், பழையூர், மூலக்கடை, கொண்ரெட்டியூர், குப்பநாயக்கனூர், ஒலக்கூர், தளவாய்ப்பட்டி, தீவட்டிப்பட்டி, எலத்தூர் பகுதிகளில் இன்று மதியம் 2 மணி முதல் அடைமழை பெய்து வருகிறது.
சேலம் அயோத்தியபட்டினம் கஸ்தூரி திருமண மண்டபத்தில் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வருகின்ற 3ஆம் தேதி வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/VettriNichayamskill இணையதளம் மற்றும் 9442617066 என்ற எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் சிறப்பு ரயில் (03326) இன்று (நவ.30) மதியம் 12.55 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில், 11.20 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்களது பயண திட்டத்தை இதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளலாம்.
மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இன்று (நவ.30) மாலை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை, மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவனம், சேலம்- சென்னை, சென்னை- சேலம் இடையேயான விமான சேவையை இன்று (நவ.30) ரத்துச் செய்துள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஜன., 24 தேசிய பெண் குழந்தை தினத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மூலம், வீர தீர செயல் புரிந்து வரும், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக விருது வழங்கப்படும். சேலம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள், டிச.25 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்படும்.
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவெடுத்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதவிர சேலம் மாவட்டத்தில் இன்று சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஊரில் மழையா கமெண்ட் பண்ணுங்க.
1.’சேலம் புத்தகத் திருவிழா 2024′ தொடங்கியது!
2.தீக்குளிக்க முயற்சி: குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு
3.தலைவாசலில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி
4.சேலம்: 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
5.சேலம் மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு
6.சேலம் வழியாக செல்லும் ரயிலில் எல்எச்பி பெட்டிகள்
Sorry, no posts matched your criteria.