India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாநகரத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி அரசு கலைக் கல்லூரி அருகே காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (ஆக.12) சுமார் 879.698 கிலோ கஞ்சாவை எரித்து அழித்தனர்.

சேலம் மாவட்டத்தில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேற்படி, விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரம், சேலம் என்ற முகவரியில் ஆக.18 மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஆக.13, 27, செப்.03 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும், ஆக.14, 28, செப்.04 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து பெங்களூருவுக்கும் சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் (06547/06548) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். மேலும், தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

சேலம், உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனியில் அமைந்துள்ள கிழக்கு கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆக.13) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சேலம், உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனியில் அமைந்துள்ள கிழக்கு கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆக.13) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஆக.12) கொச்சினுக்கு இயக்கப்படவிருந்த அலையன்ஸ் ஏர் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய நிர்வாகம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவுச் செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இன்று 12ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள்;
▶️வீராணம் – கோவிந்தக்கவுண்டர் சுசீலா திருமண மண்டபம் வீராணம். ▶️தாரமங்கலம் – சிவகாமி அம்மாள் திருமண மண்டபம் மற்றும் நெசவிளக்கு கிராம ஊராட்சி வள மைய கட்டிடம்.
▶️ காடையாம்பட்டி – வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மகாலட்சுமி நகர் மற்றும் கொங்குபட்டி கௌரநாயுடு சமுதாயக்கூடம்.

சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓமலூர் அடுத்த தண்ணித்தொட்டி பிரிவு சாலை அருகே, இன்று காலை அரசு விரைவு பேருந்தும் தனியார் பள்ளி வாகனமும் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் உரசி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி வாகனம் சற்று சேதமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக பள்ளி குழந்தைகள் உட்பட யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<
Sorry, no posts matched your criteria.