India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் இன்று(10.12.24) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. அதன்படி, கருப்பூர், மல்லியக்கரை, உடையார்ப்பட்டி, மேட்டுப்பட்டி, நங்கவள்ளி, தெடாவூர், எட்டிக்குட்டைமேடு, ஜலகண்டாபுரம் ஆகிய துணை மின்நிலையத்தின் கீழ் உள்ள ஊர்களில் மின்தடை ஏற்படுகிறது. சேலம் மக்களே உங்க துணை மின்நிலையம் எது என பார்த்து கொள்ளவும். ஷேர் பண்ணுங்க
(29/11/2024) அன்று தொடங்கி இன்று (09/12/2024) வரை 11 நாள்கள் நடைபெற்ற சேலம் புத்தகத் திருவிழாவில், மொத்தம் ரூ.120 கோடிக்கு 1,06,046 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அதேபோன்று பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 1,30,282 நபர்கள் வருகைபுரிந்து பார்வையிட்டு பயன்பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான இன்றைய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
➤ சேலம் புத்தக திருவிழா நிறைவு ➤ எடப்பாடியில் லாட்டரி விற்பனை செய்த 7 பேர் கைது ➤ நங்கவள்ளி பகுதிகளில் நாளை மின்தடை ➤ சேலத்தில் கரும்பு அறுவடை தீவிரம் ➤ சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி ➤ மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; லாரி டிரைவர் கைது ➤ சுவரில் துளை போட்டு நகை கடையில் கொள்ளை ➤ வயிற்று வலியால் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த 90 வயதை கடந்த முதிய தம்பதி செல்லப்பன் (94) – வள்ளியம்மாள் (90). இவர்கள் ‘பிரியாத வரம் வேண்டும்’ என்பதற்கேற்ப இறப்பிலும் இணைந்தனர். இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்வால் காலை வள்ளியம்மாள் நேற்று இறந்த நிலையில், அன்றைய தினம் மதியமே செல்லப்பனும் உயிரிழந்தார்.
சபரிமலை சீசனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக காக்கிநாடா- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் (07155/07156) அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.06,13-ல் காக்கிநாடாவில் இருந்து கொல்லத்திற்கும், ஜன.08,15-ல் கொல்லத்தில் இருந்தும் காக்கிநாடாவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (டிச.09) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக வரும் ஜனவரி இயக்கப்படவுள்ள ரயில்களின் பட்டியல் இதோ- ஹைதராபாத்- கோட்டயம் (07065), கோட்டயம்- செகந்திராபாத் (07066), மௌலா அலி- கோட்டயம் (07167), கோட்டயம்- செகந்திராபாத் (07168), கச்சிக்குடா- கோட்டயம் (07169), கோட்டயம்- கச்சிக்குடா (07170), மௌலா அலி- கொல்லம் (07171), கொல்லம்- மௌலா அலி (07172) ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்று வரும் சேலம் புத்தகத் திருவிழாவின் 11-வது நாளான இன்று (டிச.09) மாலை 04.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் முதன்மை விருந்தினர் ஜீவானந்தம், ‘வண்ணம் பேசும் மொழி’ என்ற தலைப்பில் உரையாற்றும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. புத்தகத் கடைசி நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.