India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 2024ம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 3 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை இன்று (பிப்.17) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். விழாவில் சேலத்தில் இருந்து அமைச்சர், ஆட்சியர், சார் பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் சிறப்பு ரயில் (03680) நாளை (பிப்.18) காலை 07.50 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 16 மணி நேரம் தாமதமாக நாளை நள்ளிரவு 11.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அலுவலகத்தினை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார். ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 20 கிராமங்களும்,மேச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 4 கிராமங்களும், பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 2 கிராமங்களும் 26 கிராமங்கள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு <
சேலம் அருணாச்சல ஆசாரி தெருவில் 5 தலைமுறை வாரிசுகளுடன் 100-வது பிறந்தநாளைக் கொண்டாடிய சரஸ்வதி அம்மாள் பாட்டி. கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள், பேரன், பேத்திகளுடன் கேக் வெட்டி உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்கம், பக்கத்தினரும், புதுமண தம்பதிகள் உள்ளிட்டோரும் பாட்டியிடம் ஆசி வாங்கி மகிழ்ந்தனர்.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் . அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் (GRAMIN DAK SEVAKS -GDS) புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க <
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 16 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் சஞ்சீவி (25). நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் நரசிங்கபுரம் ரயில்வே கேட் அருகில் ரயில் வந்து கொண்டிருந்தது போது சஞ்சீவி மீது மோதியது, இதில் சம்பவ இடத்திலேயே சஞ்சீவி உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் தங்கும் அறை, சமையற்கூடம், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்த சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன், அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் காலை உணவு உட்கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் உணவின் சுவை, தரம் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
Sorry, no posts matched your criteria.