India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். டிச 2 இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
தமிழகத்தின் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும் (டிச.02), நாளையும் (டிச.03) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம் ஏரிக்கரை ரோடு ஒலப்பாடி செல்லும் வழியில் இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்துள்ளது. அதை அந்த பகுதி மக்கள் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக, கடந்த 2 நாட்களாக சென்னை- சேலம், சேலம்- சென்னை இடையேயான விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ரத்துச் செய்திருந்த நிலையில் இன்று (டிச.02) மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. இதனால் சேலம் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம்-சென்னை பயண டிக்கெட் முன்பதிவும் இண்டிகோ இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகராட்சி கன்னங்குறிச்சி புது ஏரியில் முழுவதும் நிரம்பி இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் பாதைகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.02) காலை 06.00 மணி வரை 1,235.8 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, ஏற்காட்டில் 238 மி.மீ., ஆனைமடுவுவில் 100 மி.மீ., கரியகோவிலில் 149 மி.மீ., ஓமலூரில் 99 மி.மீ, டேனீஷ்பேட்டையில் 96 மி.மீ., ஏத்தாப்பூரில் 80 மி.மீ., வீரகனூரில் 63 மி.மீ., கெங்கவல்லியில் 60 மி.மீ., தம்மம்பட்டியில் 64 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
1.சேலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
2.சேலத்தில் பல்வேறு பகுதியில் மழை
3.உத்தமசோழபுரத்தில் 1,008 சங்காபிஷேகம்
4.முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
5.ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
6.வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு அறிவுறுத்தல்
ஃபெங்சல் புயல் காரணமாக சேலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ஏற்காடு செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நாளை (டிச.2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.