Salem

News February 18, 2025

கைதிகளுக்கு செல்போன் விற்ற காவலர் பணியிடை நீக்கம்!

image

சேலம் மத்திய சிறைக் கைதிகளுக்கு செல்போன் விற்றதாக சிறையின் முதல்நிலைக் காவலர் சண்முக குமாரைப் பணியிடை நீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளர் வினோத் நடவடிக்கை எடுத்துள்ளார். சிறையில் 10-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு, ரூபாய் 15,000 முதல் ரூபாய் 20,000 வரை செல்போன்கள் விற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவ்வப்போது சேலம் மத்திய சிறையில் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News February 18, 2025

சேலத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற பால் 

image

சேலம் ஆவின் பால் பண்ணையில் இருந்து சிங்கப்பூருக்கு சுமார் 80,000 லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால், 2 கண்டெய்னர் மூலம் அனுப்பி வைக்கும் பணியில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் ஆவின் மூலம் சிங்கப்பூருக்கு பால் அனுப்பப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

News February 18, 2025

பழங்களைப் பழுக்க வைக்க ரசாயனம் தெளித்தால் ரூ.2 லட்சம் அபராதம்

image

சேலம் மாவட்டத்தில் 20- க்கும் மேற்பட்ட பழ குடோன்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். செயற்கையான முறையில் மா, வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் அந்த வியாபாரிகளுக்கு ரூபாய் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். பழ குடோன்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

News February 18, 2025

நடத்தையில் சந்தேகம்: தாயை அடித்து கொன்ற மகன்கள்

image

மேட்டுடையார் பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பொண்ணுவேல் மனைவி வசந்தி (38). இவர் செல்போனில் அடிக்கடி பேசியதால் சந்தேகமடைந்த மகன்கள் இருவரும் தாக்கி உள்ளனர். இதில் மயங்கிய வசந்தியை மீட்ட உறவினர்கள், வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இரு மகன்களையும் பிடித்து, ஏத்தாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 18, 2025

தொழில் முனைவோர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

image

சேலம் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்துரிமை பயிற்சிப் பட்டறை 19.02.2025 அன்று சேலம், ஐந்து ரோடு, சிட்கோ தொழில்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News February 17, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவாரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும்,இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காப்பாற்றவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 17 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம்.

News February 17, 2025

அதிமுகசேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

image

2026- ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, அ.தி.மு.க.வின் சேலம் மாநகர் மாவட்டப் பொறுப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிங்காரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

News February 17, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் ,அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நினையில் (பிப்ரவரி 17) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

News February 17, 2025

“மாணவர் மரணம்: முறையான விசாரணை தேவை”

image

திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, “எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்” என்று பொறுப்பற்ற முறையில் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது; முறையான விசாரணை தேவை என இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.

News February 17, 2025

“மாணவர் மரணம்: முறையான விசாரணை தேவை”

image

திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, “எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்” என்று பொறுப்பற்ற முறையில் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது; முறையான விசாரணை தேவை என இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!