India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தை திருமணங்கள் குறித்து கடந்த நவம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் 27 அழைப்புகள் வந்ததாகவும், அதில் ஆறு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்தார். மேலும் 20 புகார்கள் தவறு என்றும் மீதமுள்ள ஏழு வெளிமாவட்டத்தை சேர்ந்தது என்றும் தெரிவித்தார். புகார் மீது உடனடி எடுக்கப்படும் என்றும், எந்த விதமான பாரபட்சம் பார்க்கப் படுவதில்லை என்றும் தெரிவித்தார்.
அகில இந்திய அளவிலான கடிதப் போட்டியை நடத்த இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. ‘எழுதுவதில் ஒரு மகிழ்ச்சி- டிஜிட்டல் யுகத்தில் கடிதத்தின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் கடிதப்போட்டி வரும் டிச.14 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வரும் டிச.15- ம் தேதி காலை 9 மணிக்கு கொங்கணாபுரம் வின்னர் விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடக்க உள்ளது. திராவிட இயக்க கொள்கைகளில் பற்று, ஆர்வம் கொண்ட 18 முதல் 35 வயதுள்ளவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம் என திமுக-வின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி அறிவித்துள்ளார்.
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சேலம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு குறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ஆத்தூர் 67.6 மில்லி மீட்டர் மழையும், ஓமலூர் 14 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சேலம் சுற்று வட்டாரங்களான கொண்டநாயக்கம்பட்டி, அஸ்தம்பட்டி மாநகரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது.
கனமழை எச்சரிக்கை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் வழியாக இயக்கப்படும் தன்பாத்- கோவை வாராந்திர சிறப்பு ரயில் (03325) டிச.18 முதல் டிச.25 வரையிலும், கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03326) டிச.21 முதல் டிச.28 வரையிலும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும். பயணிகள் மாற்று ரயில்களைப் பயன்படுத்தி கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் ஆய்வகங்களை அமைக்க ரூபாய் 12.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதில் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ரூபாய் 1.31 கோடி மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் ஆய்வகம் அமையவுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இன்று அவரது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையை, 33 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (டிச.12) மீண்டும் ‘தளபதி’ திரைப்படம், சேலம் ஆஸ்கர் திரையரங்கத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தைக் காண வந்த ரஜினி ரசிகர்களுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரஜினி தலைமை நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள், ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லியில் நேற்று (டிச.11) மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்த மயிலாடுதுறை எம்.பி. சுதா, கும்பகோணம் வெற்றிலை, வீரமான்குடி அச்சுவெல்லம், பேராவூரணி தேங்காய், சேலம் மாம்பழம், தூத்துக்குடி மக்ரூன் உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான கோரிக்கை நீண்ட நாட்கள் நிலுவையில் இருப்பதை நினைவூட்டி மனு அளித்தார்.
Sorry, no posts matched your criteria.