Salem

News December 14, 2024

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

image

மத வழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், புத்தமதத்தினர், பார்சிகள், சீக்கியர்கள், சமணர்கள் ஆகியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசின் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் தலைமையில் வரும் டிச.19 அன்று மாலை 03.30 மணிக்கு சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

News December 14, 2024

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

image

மத வழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், புத்தமதத்தினர், பார்சிகள், சீக்கியர்கள், சமணர்கள் ஆகியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசின் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் தலைமையில் வரும் டிச.19 அன்று மாலை 03.30 மணிக்கு சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

News December 14, 2024

ஒரே மாதத்தில் 142 பேரின் ‘லைசென்ஸ்’ தற்காலிக ரத்து

image

சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான குழுவினர், ஆத்தூர், சங்ககிரி உள்பட 11 அலுவலகப் பகுதிகளில், 7,622 வாகனங்களை சோதனை செய்தனர். அதில் சாலை விதிகளை மீறியவர்களில் 142 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மொபைல் போனில் பேசிய படி வாகனம் ஓட்டிய 41 பேர், அதிவேகமாக சென்ற 33 பேர் என 142 பேரின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

News December 14, 2024

நடப்பாண்டில் 22,157 பேருக்கு சிகிச்சை

image

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடப்பாண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரை மட்டும் 22,157 பேருக்கு பெரிய அளவிலான அறுவைச் சிகிச்சைகளும், 44,560 பேருக்கு சாதாரண அறுவைச் சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தேவி மீனாள் தெரிவித்துள்ளார். ஏராளமானோர் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் அறுவைச் சிகிச்சை பெற்று வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

News December 14, 2024

விடுமுறை நாளில் இயங்கிய பள்ளிகளுக்கு நோட்டீஸ்

image

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 2, மேச்சேரி மற்றும் சேலம் தலா 1 என மொத்தம் 4 தனியார் பள்ளிகள் நேற்று முன்தினம் (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில் செயல்பட்டதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) இஸ்மாயில், அந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

News December 14, 2024

சேலத்தில் பெய்த மழை அளவு 

image

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சேலம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. சேலத்தில் மழையின் தாக்கம் குறைந்து, மிகக் குறைந்த அளவு பல பகுதியில் மழை இன்றியும் காணப்படுகிறது. தம்மம்பட்டியில் அதிகபட்சமாக 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிலப்பகுதியில் மழை இன்றி பதிவாகியுள்ளது.

News December 14, 2024

விருது பெற விண்ணப்பிக்கலாம் 

image

“கபீர் புரஸ்கார் விருது” பெற சேலம் மாவட்டத்தில் தகுதியான நபர்கள் வருகின்ற 15/12/2024-க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சேலம் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இந்த விருது குடியரசுத் தினத்தன்று வழங்கப்படவிருக்கிறது.

News December 14, 2024

சேலத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

சேலத்தில் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (ம) பெண்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 14, 2024

சேலம்: இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்றசெயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News December 13, 2024

குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்: கடும் நடவடிக்கை ஆட்சியர்

image

சேலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். குழந்தைகள் உதவி மைய எண் 1098 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம், இதைக் கண்காணிக்க காவல்துறை, மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், தன்னார் தொண்டு நிறுவனங்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!