Salem

News February 19, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்றைய (பிப்.19) இரவு காவல் உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய காவல் அதிகாரிகள் விவரம்: சேலம் டவுன் சரகம் பழனியம்மாள், காவல் ஆய்வாளர் B3 PS 94981-67715, செவ்வாய்பேட்டை கா.நி அரசு மருத்துவமனை அன்னதானப்பட்டி சரகம், பழனியம்மாள் – காவல் ஆய்வாளர் B3 PS 94981-67715, கொண்டலாம்பட்டி சரக,ம் தமிழரசி – காவல் ஆய்வாளர் CCB 94981-10740, அம்மாபேட்டை சரகம், மணிவண்ணன் – காவல் ஆய்வாளர் 94981-67695.

News February 19, 2025

சேலம் மாவட்டத்தில் மது விற்பனை: 178 பேர் கைது

image

சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம் கோயல் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட, 24 பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. டாஸ்மாக் எதிரே பெட்டிக்கடை வைத்து மது அருந்த அனுமதித்தது, கடை இயங்காத நேரத்தில் மது விற்றது உள்பட 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 4ஆம் தேத முதல் இன்று வரை, மதுபாட்டில் விற்ற 178 பேரை கைது செய்துள்ளோம் என்றார்.

News February 19, 2025

சேலம் 1008 லிங்கத் திருக்கோயில்!

image

சேலத்தில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் அரியானூரில் அமைந்துள்ள 1008 லிங்கத் திருக்கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரபலமான கோயிலாகும். இதில் 1008 லிங்கங்கள் உள்ளன. சக்தி வாய்ந்த கடவுளான சிவனுக்கு சிவசஹஸ்ரநாமாவலியில் 1000 பெயர்கள் உள்ளன. இதன் அடிப்படையில் இக்கோயிலில் 1008 சிவலிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு சிவலிங்கமும் சிவபெருமானின் ஒவ்வொரு பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

News February 19, 2025

சேலம்: மாணவர்கள் மீது வன்கொடுமை வழக்கு

image

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு மூன்று மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.இந்நிலையில் அந்த மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆத்தூர் டிஎஸ்பி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

News February 19, 2025

இரட்டை கொலை சம்பவத்தில் கணவர் வாக்குமூலம்

image

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை வெட்டியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை செய்ததில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டி கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

News February 19, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு

image

பசூர்- ஊஞ்சலூர் இடையே ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு காரணமாக, பிப்.20, 23, 25, 28 ஆகிய நாட்களில் திருச்சி- ஈரோடு ரயில், கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாட்களில், செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் கரூர் வரை மட்டும் இயக்கப்படும்; மறுமார்க்கத்தில், ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கரூரில் இருந்து புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News February 19, 2025

சேலம்: வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

image

சேலம் மாநகர காவல் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மதுவிலக்கு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட, 24 இருசக்கர வாகனங்கள்  ஏலம், வரும் 24-ஆம் தேதி, அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள மாநகர காவல் காவல் மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் அன்று காலை 10 மணிக்குள் முன்வைப்பு தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

News February 18, 2025

சேலம் மெட்ரோ ரயில்- திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் மெட்ரோ ரயில் தொடர்பான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பித்தது மெட்ரோ ரயில் நிர்வாகம். கரபுநாதர் கோயில் முதல் அம்மாப்பேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணத்திற்கும், கருப்பூர் முதல் சேலம் ரயில் நிலையம் வழியாக நாழிக்கல்பட்டி வரையிலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிப்பு!

News February 18, 2025

சேலம்: பாலியல் தொழில் நடத்தியவர் கைது!

image

சேலம் சூரமங்கலம் தர்மநகர் முதல் தெரு பகுதியில், வீடு வாடகைக்கு எடுத்து, பாலியல் தொழில் நடப்பதாக, சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று, போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 34) என்பவர், வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில்நடத்தியது தெரியவந்தது. விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்களை போலீசார் மீட்டனர்.

News February 18, 2025

சேலம் மாநகர காவல் துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி

image

சேலம் மாநகரத்தின் முக்கிய பிரதான பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணி நடைபெறுகிறது. இரவு நேரங்களில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், பொது மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், காவலர்கள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர், அந்த வகையில் இன்று மாநகர பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. 

error: Content is protected !!