India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ரயில்களில் டிக்கெட்டின்றியும், முறைகேடாகவும் பயணித்த 27,500 பயணிகளிடம் ரூ.1.81 கோடி அபராதம் விதிக்கப்பட்டு டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க ரயில்வே துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.04) காலை 6 மணி வரை 27.4 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, ஆணைமடுவுவில் 7 மி.மீ. மழையும், வீரகனூரில் 6 மி.மீ. மழையும், ஏற்காடு, ஆத்தூரில் தலா 5.6 மி.மீ. மழையும், தம்மம்பட்டியில் 1 மி.மீ. மழையும், சேலம் நகரில் 0.8 மி.மீ. மழையும், வாழப்பாடியில் 1.4 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தொடர் கனமழை காரணமாக சேலம், கந்தம்பட்டி பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை சீர்செய்யும் பணியினை நேற்று (டிச.3) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேரில் ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தியதன் அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் முடிவுற்று நேற்று மாலையே வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது அச்சாலையில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சேலம்-ஏற்காடு பிரதான சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டு இன்று (டிச.04) பிற்பகல் 03.00 மணி முதல் போக்குவரத்துக்கு இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார். இதனால் ஏற்காட்டில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர், ராமன்நகர், இரட்டைபுளியமரத்தூரை சேர்ந்த, ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் (66). இவர் நேற்று (டிச.03) 246-வது முறையாக ஆந்திரா மாநிலம், விஜயவாடா மாவட்டம் அமராவதியில் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு போட்டியிட, தேர்தல் நடத்தும் அலுவலர் வனிதா ராணியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் 2025ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான விண்ணப்பத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய நல அலுவலகத்தில் 10ஆம் தேதி 5 மாலை மணிக்குள் வழங்கலாம் அல்லது https//awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சேலம் அல்லிகுட்டைப் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் மன்னார்பாளையம் பிரிவு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், மாமன்ற உறுப்பினர்கள் அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் சேலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது; திருமணிமுத்தாற்றில் முறையாக தூர்வாராததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்காடு மலைப்பாதையில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மலைப்பாதையை அரசு உடனே சீரமைக்க வேண்டும்” என சேலத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டிளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.