India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி திடலில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 8வது நாளாக நடைபெறும் விழாவில், தமிழ்நாடு முன்னாள் தலைமை செயலாளர் வே.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். மேலும், முனைவர் ஆவுடையப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு, தமிழக அரசு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 11,726 மாணவர்களுக்கும், 14,548 மாணவிகள் என மொத்தம் 26,276 மாணவ மாணவிகளுக்கு, ரூ.12.43 கோடி மதிப்பீட்டில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்று வரும் சேலம் புத்தகத் திருவிழா, வரும் டிச.09-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சித் துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் தமிழ் வினைச்சொல், அகரமுதலி உள்பட 7 புத்தகங்கள் 35% சிறப்பு தள்ளுபடியுடன் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளார்.
முகூர்த்தத்தினம், வார இறுதி நாட்களை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று (டிச.06) முதல் டிச.09 வரை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் சேலம் கோட்டத்தின் சார்பில் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சேலத்தில் இன்று(6.12.24) முக்கிய நிகழ்வுகள். ▶காலை 9:30 மணி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் GH-ல் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். ▶காலை 9 மணி பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல். ▶காலை 10:30 மணி அமைச்சர் ராஜேந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். ▶இன்று மாலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
1. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
2.ரூ.5 லட்சம் வரை காப்பீடு தொகை
3.ஆவின் பாலகத்தைத் திறந்து வைத்த எம்.எல்.ஏ.!
4.போராட்டத்தில் ஈடுபட்ட 156 பேர் மீது வழக்குப்பதிவு
5.உலக மண் தினத்தில் 95260 மரக்கன்றுகள் நடவு
முதலமைச்சரின் மருத்துவர் காப்பீடு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவினர் மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சம் வரை பெறலாம். இதேபோல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 22 லட்சம் வரை காப்பீடு தொகை பெறலாம் இதற்கு ஆதார் மற்றும் குடும்ப அட்டை போதுமானது. www.cmchitn.com என்ற இணையம் மூலமும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்பாக்கம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.06) சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12680) காட்பாடி வரையிலும், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12679) காட்பாடியில் இருந்து புறப்படும். இந்த ரயில், காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் வழியாக சம்பல்பூர்- ஈரோடு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை (08311/08312) வரும் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.11,28,25, ஜன.01,08,15,22,29, பிப்.05,12,19,26, மார்ச் 05 ஆகிய தேதிகளில் சம்பல்பூரில் இருந்தும், டிச.13,20,27, ஜன.03,10,17,24,31, பிப்.07,14,21,28, மார்ச்.07 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்தும் இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.