Salem

News December 15, 2024

சேலம்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ சேலத்தில் கைதிக்கு கஞ்சா கொடுத்த வக்கீல் ➤ 2 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது ➤ சேலம் வழியாக குண்டூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு ➤ ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மேலும் 62 கண்காணிப்பு கேமரா ➤ முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க மீண்டும் தடை ➤ மகளிர் விடியல் பயண பேருந்து: அமைச்சர் துவக்கி வைப்பு ➤ அம்மாபேட்டை பகுதியில் மரக்கன்றுகள் நடவு ➤ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நிறைவு

News December 15, 2024

மகளிர் விடியல் பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்

image

சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மகளிர் விடியல் பயண பேருந்துகளை இன்று (டிச.15) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ், பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 15, 2024

பொங்கல் பண்டிகை- 100 ஏக்கர் செங்கரும்புகள் தயார்

image

பொங்கலை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் கடைகளில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் செங்கரும்பு வழங்குகிறது. அதன் உற்பத்திக்கு தண்ணீர் அதிகம் தேவை என்பதால் காவிரி கரையோரப் பகுதிகளில் மட்டுமே செங்கரும்பு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் காவிரி கரையோரம் உள்ள கோல்நாயக்கன்பட்டி, நவப்பட்டி ஊராட்சிகளில் 100 ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

News December 15, 2024

ரூபாய் 65.க்கு நெட்டை ரக தென்னங்கன்று

image

சேலம் ஆத்தூர், முல்லைவாடி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நாட்டு ரகம் நெட்டை ரகத்தில் 23,500 தென்னங்கன்றுகள் உள்ளன. ஆண்டுக்கு மரத்துக்கு தலா 100 முதல் 150 காய்கள் வரை அறுவடைச் செய்யலாம். வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. இந்த நெட்டை ரக கன்று தலா ரூபாய் 65-க்கு விற்கப்படுகிறது என தோட்டக்கலை அலுவலர் இலக்கியா தெரிவித்துள்ளார்.

News December 15, 2024

சேலம் வழியாககுண்டூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சபரிமலை சீசனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக வரும் ஜன.04,11,18 ஆகிய தேதிகளில் குண்டூரில் இருந்து கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில், ஜன.06- ஆம் தேதி கொல்லத்தில் இருந்து காக்கிநாடாவிற்கும் சிறப்பு ரயில்கள் (07181/07182) இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2024

சேலத்தில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

image

சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் 6ஆம் சுற்றாக அனைத்து கால்நடைகளுக்கும், கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி இலவச முகாம் நாளை(டிச.16) முதல் ஜன.,5 வரை நடைபெற உள்ளது. இந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாமை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

News December 15, 2024

சேலம் வழியாககுண்டூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சபரிமலை சீசனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக வரும் ஜன.04,11,18 ஆகிய தேதிகளில் குண்டூரில் இருந்து கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில், ஜன.06- ஆம் தேதி கொல்லத்தில் இருந்து காக்கிநாடாவிற்கும் சிறப்பு ரயில்கள் (07181/07182) இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2024

சேலம்: இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

News December 14, 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இணைந்து (20.12.24) முதல் (5.01.25) வரை அனைத்து ஊராட்சி கால்நடை மருத்துவமனையிலும், கால்நடைகளுக்கு இலவசமாக NADCP 6வது சுற்று தடுப்பூசி போடப்படும் என்றும், இதனை விவசாய பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். 

News December 14, 2024

சேலம்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (டிச.14) இரவு ரோந்து  அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

error: Content is protected !!