India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டியில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தின் பெயிண்ட் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. விபத்து குறித்து ஓமலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்ட காவல்துறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (டிசம்பர் 16) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
1.ஓமலூர் பகுதியில் பயிர் சேதம் குறித்து தகவல் தெரிவிக்க அழைப்பு.
2.GHஇல் போர்வை வழங்கிய அமைச்சர்.
3.ரயில் மறியல் முயற்சி: விவசாயிகள் போலீஸ் இடையே தள்ளு முள்ளு.
4.அம்மாப்பேட்டை மண்டலத்தில் அறிவியல் பூங்கா.
5.NTKவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்.
6.ஒரே நாளில் 302டன் காய்கறிகள் உழவர் சந்தையில் விற்பனை.
7.கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் போராட்டம்.
குறைந்தபட்ச ஆதாய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாய உரப்பொருளுக்கு விலை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் செய்ய முயற்சி செய்தனர். போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
சேலம் மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட 9-வது வார்டு வர்மா சிட்டி அருகில் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாகவும், பள்ளி மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையிலும் தமிழக அரசின் சிறப்பு நிதியில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. 70- க்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த புகைப்படங்கள், மாடல்கள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்கப்படுகிறது
நாம் தமிழர் கட்சியிலிருந்து சேலம் மாநகர மாவட்ட செயலாளர் தங்கதுரை, வீரத்தமிழர் முன்னணியின் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், மேட்டூர் நகர து.தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் விலகிய நிலையில் தற்போது அக்கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட ஓமலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பால்ராஜ் அசோகன் (ம) 30 உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை, சூரமங்கலம், ஆத்தூர், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட 13 உழவர் சந்தைகளில் கார்த்திகை மாதத்தின் பௌர்ணமியையொட்டி நேற்று (டிச.15) ஒரே நாளில் மட்டும் 302 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.1.36 கோடிக்கு விற்பனையானதாக வேளாண் மற்றும் உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் இன்றைய(16.12.24) நிகழ்வுகள். ➤ காலை 6 மணி முதல் அனைத்து இந்து ஆலயங்களிலும் மார்கழி மாத திருவெம்பாவை விழா நடைபெறவுள்ளது. ➤ காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைத்தீர் கூட்டம். ➤ காலை 9:30 மணி ஏ வி ஆர் திருமண மண்டபத்தில் இன்னிசை திருவிழா. ➤ காலை 10 மணி வாழப்பாடியில் வாய்க்காலை தனிநபர் ஆக்கிரமித்ததை கண்டித்து கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில், காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான (டிசம்பர் 15) அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.