India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரம். இவர் புற்களை நன்கு பதப்படுத்தி அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு எண்ணெய் எடுத்து வருகிறார். இதன்மூலம் நாளொன்றுக்கு ரூபாய் 1,500 முதல் ரூபாய் 3,000 வரை வருவாய் ஈட்டும் விவசாயி, ஏற்கனவே பல கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக செல்லும் 4 ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.13-ல் ஹைதராபாத்தில் இருந்தும் கோட்டயத்திற்கும் (07137), டிச.14-ல் கோட்டயத்தில் இருந்து செகந்திராபாத்திற்கும் (07138), டிச.08,15,22,29-ல் கச்சிக்குடாவில் இருந்து கோட்டயத்திற்கும் (07131), டிச.09,16,23,30-ல் கோட்டயத்தில் இருந்து கச்சிக்குடாவிற்கும் (07132) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழக அரசு போக்குவரத்து சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் டிஜிட்டல் போர்டு, ஏ.சி, டிக்கெட் மெஷின் என பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பேருந்து நிலையத்தில் நடத்துநர்கள் ஊர்ப்பெயரை கூறி பயணிகளை அழைக்கும் முறை மட்டும் மாறாமல் இருந்தது. இந்நிலையில், சேலத்தில் ஊர்ப்பெயரை அறிவிக்க ஏதுவாக, தானியங்கி ஒலிபெருக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் இன்று (7.12.24) முக்கிய நிகழ்வுகள். 1)காலை 8 மணி குறிஞ்சி மருத்துவமனை புதிய சிகிச்சை பிரிவு துவக்கம். 2) காலை 9:30 புதிய பேருந்து நிலையத்தில் புதிய வழித்தட பேருந்துகளை அமைச்சர் துவக்கி வைக்கிறார். 3)காலை 10 மணி தெய்வீக திருமண மண்டபத்தில் துப்புரவு பணியாளருக்கான மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. 4)காலை 11 மணி சோனா அறிவியல் கலை கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.
பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு, 2025ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழக அரசின் https//awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் பிருந்தா தேவி இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.
சேலத்தில் உள்ள துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறத. அதன்படி, பேளுர் துணை மின்நிலையத்தில் குறிச்சி, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்குட்டை, பெலாப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, கனுக்கானூர், சின்னவேலாம்பட்டி (ம) கூடமலை துணை மின்நிலையமான கிருஷ்ணாபுரம், கடம்பூர், மண்மலை, விஜயபுரம், நரிப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவராக மாற்றும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார் அதன் ஒரு பகுதியாக இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை விருந்து பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த நிகழ்வில் கலெக்டர் பிருந்தா தேவி, எம்எல்ஏ அருள் சதாசிவம், எம்பி செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிரவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய இரவு ரோந்து அலுவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4, இதர போட்டித் தேர்வுகளுக்கான 4 மாத பயிற்சி வகுப்புகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் டிச.10- ல் தொடங்குகிறது. இதில் பல்கலை. மாணவர்கள் மட்டுமல்லாது, வெளியில் இருந்தும் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களும் சேரலாம். இதற்காக நேரடியாக பயிற்சி மையத்தில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 9789319722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.