India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தீப்பெட்டி கம்பெனி பகுதியில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த தாய் மாமன் மோகன்குமார் என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ் ஆத்தூர் மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். பள்ளி குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’, விழிப்புணர்வு நிகழ்வின் போது, சிறுமி அளித்த தகவலின் பேரில், தாய் மாமன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) வரும் பிப்.25ம் தேதி காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயிலில் பயணிப்பதற்காக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 21 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழு முட்டை ஓடுகளில் இருந்து கால்சியம் பாஸ்பேட் கனிமமான ஹைட்ராக்ஸிபடைட்டை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான இரண்டு தொழில் நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இதன்மூலம் பொடியாக்கப்பட்ட முட்டை ஓடுகளை எலும்பு முறிவுகள், எலும்பு திசு பொறியியல் மற்றும் பல் சிகிச்சைகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது ஆய்வக சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கிச்சிபாளையம் பகுதியில் போதை மாத்திரையையும் ஊசி விற்பனை செய்ததாக சுதர்சன், தினேஷ்குமார் கிஷோர், சரவணன் அக்பர் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்து, 800 போதை மாத்திரை 50 சிரஞ்ச் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரயில்வேயில் 32,438 குரூப் டி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க இங்கே <
தர்மபுரி சிறையில் தர்மபுரி கிருஷ்ணகிரி குற்ற வழக்குகளில் உள்ளூர் கைது செய்து அடைக்கப்படுவர் 150 கைதிகள் உள்ளனர். கைதிகளை பார்க்க வருபவரிடம் பணம் வசூலிக்கப்படுவதாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் விசாரணையில் இரண்டு சேலை வார்டன்கள் 400 ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. சேலம் மாவட்ட சிறை எஸ்பி வினோத் விசாரணை நடத்தி சௌந்தர்ராஜன் திருப்பதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய அறிவிப்புகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விலை உயர்வால் சேலத்தில் உள்ள நகைக்கடைகளில் 20% வரை விற்பனை சரிந்துள்ளது. நிகழ்ச்சி, சுப முகூர்த்த நாட்கள் உள்ளதால் பெரிய அளவில் விற்பனை குறையவில்லை. தவிர பழைய தங்கத்தை புது தங்கமாக மாற்றத் தொடங்கியுள்ளனர். தங்க நாணயம் வாங்குவதும் உயர்ந்துள்ளதாக சேலம் மாநகர தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் தகவல்!
சேலம் மாநகரில் இன்று (20-2-2025) இரவு 11 முதல் காலை 6 மணி வரை ஊரகம் சங்ககிரி ஆத்தூர் மேட்டூர் வாழப்பாடி ஆகிய உட் கோட்டாவில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுபவர்கள் காவலரின் விவரங்கள் மேலே குறிப்பிட்ட உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள
உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்தில் அழைக்கலாம். தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
ரெசோனன்ஸ் கன்சல்டன்சி நிறுவனம், 2025- ஆம் ஆண்டுக்கான ஆசிய- ஃபசிபிக் பிராந்தியத்தில் 100 தலைசிறந்த 100 நகரங்கள் பட்டியலை சிங்கப்பூரில் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழகத்தின் சென்னை, திருச்சி, சேலம், கோவை ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. பட்டியலில் 79- வது இடத்தில் சேலம் மாவட்டம் இடம் பிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.