India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இன்றைய (8.12.24) முக்கிய நிகழ்வுகள். 1)காலை 10 மணி கொங்குநாடு மக்கள் தேசிய காட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம். 2) காலை 10 மணி நாய் கண்காட்சி LFHSஅமைச்சர் துவக்கி வைக்கிறார். 3)காலை 11 மணி ஆதி தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் அதியமான் செய்தியாளர் சந்திக்கவுள்ளார்.
சபரிமலை சீசனை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் வழியாக இயக்கப்படும் நந்தட்- கொல்லம் இடையேயான சபரி சிறப்பு ரயில்கள் (07159/07160) நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.03,10-ல் நந்தட்டில் இருந்து கொல்லத்திற்கும், ஜன.05,12-ல் கொல்லத்தில் இருந்து நந்தட்டிற்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும், இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர், முன்னாள் சென்ற டிராக்டர் வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் ரவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக வரும் ஜன.17,24 ஆகிய தேதிகளில் தெலுங்கானா மாநிலம், காகஸ்நகரில் (Kagaznagar) இருந்து கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில், ஜனவரி 19,26 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து காகஸ்நகருக்கும் சிறப்பு ரயில்கள் (07161/07162) இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும். டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் டிஜிட்டல் போர்டு, ஏ.சி, டிக்கெட் மெஷின் என பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பேருந்து நிலையத்தில் நடத்துநர்கள் ஊர்ப்பெயரை கூறி பயணிகளை அழைக்கும் முறை மட்டும் மாறாமல் இருந்தது. இந்நிலையில், சேலத்தில் ஊர்ப்பெயரை அறிவிக்க ஏதுவாக, தானியங்கி ஒலிபெருக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாழப்பாடி அடுத்த பேளூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி மோகனாம்பாள். இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே இருவருக்கும் கடந்த 1 வாரத்திற்கு முன் தகராறு ஏற்பட்டு, இருவரும் அங்குள்ள வசிஷ்ட நதியில் குதித்தனர். இதில் ராமன் உயிருடன் மீட்கப்பட்டார். இந்நிலையில் 1 வாரத்திற்கு பின் இன்று மோகனாம்பாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஓமலூர், தாராப்புரத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது பெயர் ஓமலூர் தொகுதியில் மட்டுமின்றி பண்ருட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, ஆர்.கே.நகர், பர்கூர், ஸ்ரீ பெரும்புதூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. தொடர்ந்து, தாலுகா அலுவலகத்திற்கு சென்று தனது தொகுதியின் பெயரை இளைஞர் உறுதி செய்தார். ஓமலூர் தொகுதியில் 32,000 பேருக்கு கடிதம் அனுப்பியதாக தகவல்.
சேலம் கிழக்கு கோட்ட தலைமை தபால் அலுவலகத்தில் வரும் டிச.24ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களின் குறைகளை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம்-636001 என்ற முகவரிக்கு டிச.18க்குள் கிடைக்குமாறு அனுப்பி பயன்பெற்று கொள்ளலாம் என சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.