India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான WAY2NEWS-ல் நீங்களும் நிருபர் ஆகலாம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். மேலும், விபரங்களுக்கு 96558-64426 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். மேலும், whats’s app பண்ணலாம்.
சேலத்தில் இன்றைய (டிச.18) முக்கிய நிகழ்வுகள். 1) காலை 9:30 மணி ஆட்சி மொழி சட்டவார விழாவை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது. 2) காலை 10 மணி சேலம் மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடக்குது. 3) காலை 11 மணிக்கு கோட்டை மைதானத்தில் குகை அடுக்குமாடி கட்டிடத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். 4) மாலை 4 மணி கோட்டை மைதானத்தில் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் சிறப்பு ரயில் (03326) ஜன.04-ஆம் தேதியும், தன்பாத்- கோவை சிறப்பு ரயில் (03325) ஜன.01-ஆம் தேதியும் முழுவதுமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்றைய இரவு ரோந்துப் பணி அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 1,440 மெகாவாட் மின் உற்பத்திச் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் பாய்லர் டியூப் பஞ்சர் காரணமாக, 547 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் 605 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்திச் செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா முதல்நிலைப் போட்டி தேர்வு வரும் டிச.21இல் சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி கூட்ட அரங்கில் பிற்பகல் 01.00 மணி முதல் 02.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான WAY2NEWS-ல் நீங்களும் நிருபர் ஆகலாம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த salem, mettur, thalaivasal, kadayampatti, ஆகிய பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். மேலும், விபரங்களுக்கு 96558-64426 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். மேலும், whats’s app பண்ணலாம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் டிச.09- ல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கின. இந்த நிலையில், மழை காரணமாக, டிச.12- ல் ரத்துச் செய்யப்பட்ட தேர்வை வரும் டிச.21- ல் நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் திட்டமிட்டப்படி, டிச.23- ம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளும் முடிக்கப்பட்டு டிச.24 முதல் ஜன.01 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
சேலத்தில் வரும் 20ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0427-2401750 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடக்கவுள்ளது.
சேலம், ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டியில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தின் பெயிண்ட் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.