India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அம்மாபேட்டை மண்டலம் நேரு கலை அரங்கம் பழைய பேருந்து நிலையம
▶️புள்ளகவுண்டம்பட்டி அக்ரஹாரம் வி.பி.ஆர்.சி.எண் கட்டிடம் வினோபாஜி நகர்
▶️ தாரமங்கலம் தாரமங்கலம் சமுதாயக்கூடம் ▶️வீரகனூர் சிவன் கோவில் அருகில் சமுதாயக்கூடம் ▶️காடையாம்பட்டி மீனாட்சி திருமண மண்டபம் மரக்கவுண்டன் புதூர் ▶️கொளத்தூர் விபிஆர்சி கட்டிடம் சத்யா நகர்

சேலம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இதனை மறக்காமல் கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க.

தமிழகத்தில் இன்றும் நாளையும் சுப முகூர்த்த தினம் என்பதால் பத்திரப்பதிவு செய்ய விரும்பும் நபர்கள் அதிக அளவில் இருப்பார்கள் அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் இன்றும் நாளையும் கூடுதலாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150 டோக்கன் முதல் 200 டோக்கன் ஆக அனுமதிக்கப்படும் என பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சேலம் இன்று(ஆக.28) முகாம் நடைபெறும் இடங்கள்
▶️ துட்டபட்டி வெள்ளையன் மஹால் அருகில் துட்டப்பட்டி மேல்நிலைப்பள்ளி
▶️ ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை
▶️ தேவூர் அன்னம்மாள் கல்யாண மண்டபம் கனியாள்பட்டி
▶️ ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஏற்காடு ▶️தலைவாசல் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் காட்டுக்கோட்டை▶️மேச்சேரி மல்லிகார்ஜுனா திருக்கோவில். இதனை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க!

சுக்கம்பட்டியை சேர்ந்தவர் நகை கடை உரிமையாளர் ரமேஷ் (35). இவர் குள்ளம்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடை அருகே நேற்று மது அருந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சிலர் ரமேஷை கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் உயிர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்குகிறார். இதில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு உருளைகள் பதிவு செய்வதிலும், வினியோகம் செய்வதிலும் உள்ள குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.27) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக வீட்டுமனை பெறலாம்.இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று (ஆக.27) சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் BBK Boys குழு சார்பில் Save animals என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான விநாயகர் சிலை, பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. விநாயகர் சிலைக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.