India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.10) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடையை நீக்கக்கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கு விசாரணையை வரும் ஜன.28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜன.11ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கும், ஜன.12ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் (06067/06068) இயக்கப்படுகின்றன. அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை,சேலம், ஈரோடு,திருப்பூர்,கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகிற 15ஆம் தேதி மற்றும் 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபான கூடங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்துள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (ஜன.10) முதல் ஜன.14 வரையும், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு ஊர் திரும்ப வசதியாக ஜன.16 முதல் ஜன.20 வரையும் சென்னை, பெங்களூரு, ஓசூர், கோவை, சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரை, தர்மபுரி உள்ளிட்ட நகரங்களுக்கு சுமார் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் இன்றைய (ஜன.10) முக்கிய நிகழ்வுகள் 1.அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு. 2. காலை 9 மணி ஜெயராணி கலைக்கல்லூரியில் கலை விழா. 3.10 மணி முதல் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையினர் கருப்பு பேட்ச் அணிந்து பணி. 4. 1.30 மணி தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.10- ஆம் தேதி யஷ்வந்த்பூரில் இருந்து எர்ணாகுளத்திற்கும், மறுமார்க்கத்தில், ஜன.11- ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து யஷ்வந்த்பூருக்கும் இடையே சிறப்பு ரயில்கள் (06571/06572) இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.9) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.9) இரவு ரோந்து காவலர்கள் விபரங்கள் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018- ம் ஆண்டு சேலம் மாவட்டம், ஆத்தூரில் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் ஆகியோர் மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட விவகாரத்தில், ரயில்வேத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் எம்.எல்.ஏ., எம்.பி. உள்பட 5 பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.