India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் அலுவலகத்தில் புகுந்த குரங்குகள் அலுவலகம் முன்பு உள்ள தகவல் பலகைகள் மீது ஏறி அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அரசு அலுவலர்கள் கடும் அவதியடைந்தனர். அதேபோல், அலுவலகத்தில் வரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர். அட்டகாசம் செய்து வரும் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 3- வது முறையாக இன்று (டிச.31) இரவு 10.00 மணியளவில் 120 அடியை எட்டியது. ஆங்கில புத்தாண்டு பிறப்புக்கு இன்னும் சில மணி நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில் மேட்டூர் அணை நிரம்பியிருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னை சென்ட்ரல்- போடிநாயக்கனூர் ரயில் (20601), போடிநாயக்கனூர்- சென்னை சென்ட்ரல் ரயில் (20602) ஆகிய ரயில்கள், நாளை ஜன.01 முதல், நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும். காட்பாடி, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த வாரந்தோறும் மூன்று நாட்களுக்கு இயக்கப்படுகிறது.
சேலம், மாநகரில் இரவு நேரங்களில், குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு, நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. சேலம் மாவட்டம் மாநகரங்களில் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக, சாலை விபத்துகள் நடந்து வருகிறது. அதிக விபத்துகள் ஏற்படும், சேலம் மாநகரம், சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி மேம்பாலம் எடப்பாடி மேட்டூர் ஆத்தூர் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.
ஜன.01- ஆம் தேதி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரை திருச்சி- கரூர் இடையே இருமார்க்கத்திலும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் (06115/ 06116) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் இந்த ரயில் சேவைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை விடுமுறையில் முன்னிட்டு ஊட்டி மலைப்பாதையில் சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி ஜன.16 முதல் ஜன.19 வரை ஊட்டி-குன்னூர் இருமார்க்கத்திலும், ஜன.17 முதல் ஜன.19 வரை மேட்டுப்பாளையம்- ஊட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (டிச.30) காலை 08.00 மணிக்கு தொடங்க உள்ளது.
“புத்தம் புது நம்பிக்கைகள் மலர தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்; தமிழக மக்கள் நிம்மதியாக வாழ ஏற்ற சூழலை ஏற்படுத்த ஒன்றுபட்டு நிற்போம்”- என எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு உரிமம் பெற்றுள்ள நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிக்குள் நிகழ்ச்சிகளைக் முடித்துக் கொள்ள வேண்டும். வளாகத்திற்குள் வரும் வாகன விவரங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும், ஆபாசமில்லாமலும் நடத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
மஹா கும்பமேளாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, ஜன.18, பிப்.15-ல் மங்களூரு சென்ட்ரலில் இருந்து வாரணாசிக்கும், மறுமார்க்கத்தில், ஜன.21, பிப்.18-ல் வாரணாசியில் இருந்து, மங்களூரு சென்ட்ரலுக்கும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.