India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில், இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்கள், விமான நிலைய பணிக்கு விண்ணப்பித்து, பயிற்சி பெறலாம் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். ஐஏடிஏ இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் கனடா மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான, இலவச பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி, காலை 10 மணிக்கு, கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் துவங்க உள்ளது. பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களை பெற, அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல், 5 மணி வரை, அல்லது 04272401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
சேலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், முறைகேடு மற்றும் புகார்கள் இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் முழுவதிலும் புகார்களை குறை தீர்ப்பாளர் காந்திமதியிடம் தெரிவிக்கலாம். 89258 11323 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடுஅரசாணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி அமானி கொண்டலாம்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, எருமாபாளையம், சன்னியாசிக்குண்டு ஆகிய பகுதிகள் சேலம் மாநகராட்சியில் இணைக்கப்படவுள்ளது.
சேலம்: அரசு ஆஸ்பத்திரிகளில் புத்தாண்டு அன்று 26 குழந்தைகள் பிறந்தன. நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 11 ஆண் குழந்தைகள், 7 பெண் குழந்தைகள் என மொத்தம் 18 குழந்தைகள் பிறந்தன. அதே போல் புறநகர் பகுதியில் 8 குழந்தைகள் பிறந்தன. அதன்படி ஆங்கில புத்தாண்டான, நேற்று சேலம் மாவட்டத்தில் மொத்தம் 26 குழந்தைகள் பிறந்தன.
தமிழகத்தில் சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, கவுந்தம்பாடி, போளூர், செங்கம், கன்னியாகுமரி, அரூர், சூலூர், மோகனூர், நாரவாரி குப்பம், வேப்பம்பட்டு ஆகிய 13 நகராட்சிகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சியாக மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முகாசி பிடாரியூர், கணியூர், அரசூர், பேரூர்செட்டிபாளையம், அத்திப்பட்டு, பாடியநல்லூர், விராலிமலை, காளையார்கோவில், ஏற்காடு, மணிவிழுந்தான், பாகலூர், பட்டணம், கூத்தப்பாடி, ராயக்கோட்டை உள்ளிட்ட 25 பேரூராட்சிகள் புதிதாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, தலைவாசல், மணிவிழுந்தான் ஆகிய ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன 1) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜனவரி 1) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.