Salem

News January 6, 2025

4,299 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவு

image

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் மூலம் தேர்வான உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் (ஜன.05) நிறைவடைந்தது. சேலம் மாவட்டத்தில் 385 ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட 4,299 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News January 6, 2025

சேலத்தில் பெண் வாக்காளர்களே அதிகம்

image

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.06) வெளியானது. சேலம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். 14,87,707 ஆண் வாக்காளர்களும், 15,11,922 பெண் வாக்காளர்களும், 324 இதர வாக்காளர்களும் என மொத்தம் 29,99,953 இடம் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 74,976 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

News January 6, 2025

பெரியார் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற கலைத் திருவிழா

image

பெரியார் பல்கலைக்கழகத்தில், சாதிப்போர் தமிழ் சங்கம் சார்பில், நாளை ஜன.7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள், நாட்டுப்புற கலைத் திருவிழா நடைபெற உள்ளதாகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து, 2000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமையை காட்டவுள்ளதாகவும், அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News January 6, 2025

10 ரவுடிகள் கைது- காவல்துறை அதிரடி

image

மேட்டூர் மாதையன்குட்டை அருகே வாகனங்களை நிறுத்தி பணம், நகையைப் பறிக்க சிலர் திட்டமிட்டனர். இதனையறிந்த போலீசார், மேட்டூர் பிள்ளையார் கோவில் தெரு ராமு (44),  சிவக்குமார் (30),  தமிழரசன்(30), பொன்னகர் ஜீவா (32), மட்டச்சாலை வல்லரசு(32) ஆகிய ரவுடிகளை கைது செய்தனர். அதேபோல், மூர்த்தி (34), நிவாஸ்(28), சுரேஷ்குமார்(35), முருகன்(32), மாதேஸ்(29) ஆகிய ரவுடிகளையும் கொளத்தூர் போலீசார் கைது செய்தனர். 

News January 6, 2025

22 நாட்கள் முழு கொள்ளளவில் மேட்டூர் அணை நீர்மட்டம்

image

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 8 வரை 10 நாட்கள் முழு கொள்ளளவில் அதாவது 120 அடியில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நீடித்தது. அதேபோல், ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 20 வரை 9 நாட்களும், டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை 3 நாட்களும் முழு கொள்ளளவில் நீர்மட்டம் இருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டில் 22 நாட்கள் முழு கொள்ளளவில் நீடித்துள்ளது.

News January 6, 2025

சேலம் GHல் ஊழியர்களின் வாகனங்களுக்கு கட்டணம்

image

சேலத்தில் இயங்கி வரும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவதற்கு கட்டணமாக ரூ.15 செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

News January 5, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன 5) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 5, 2025

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பருவ தேர்வு முடிவுகள், இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், மறு கூட்டல், மறு மதிப்பீடு, மற்றும் நகல்கள் பெறுவதற்கான ஜன.23 தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 5, 2025

ஆவினில் ரூ.10 க்கு விற்பனையாகும் நெய்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் ஆவினில் நெய் விற்பனையை அதிகப்படுத்தும் விதமாக ரூ.10-க்கு 15 மி.லி., ரூ.48-க்கு 50 மி.லி., ரூ.165-க்கு 200 மி.லி., ரூ.365-க்கு 500 மி.லி., ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் ஆவின் பாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆவின் 15 மி.லி. முதல் 15 லிட்டர் வரை பல அளவுகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News January 5, 2025

சேலம்; மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

நங்கவள்ளியை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமியிடம், அவரது மகன் வெங்கடாசலம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2021 ஆண்டு வெங்கடாசலத்தை கடப்பாரையால் தாக்கியுள்ளார் பழனிச்சாமி. இதில் படுகாயமடைந்த வெங்கடாசலம் இறந்து விட்டார். இந்த வழக்கு மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துநிலையில், விசாரணை முடிந்து பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!