Salem

News January 7, 2025

சேலம் வழியாக பெங்களூரு – தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்!

image

பொங்கல் பண்டிகையையொட்டி, பெங்களூரு-தூத்துக்குடி இடையே ஜன.10-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து இரவு 10.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11.00 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைகிறது. கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்கள் நின்றுச் செல்லும்.

News January 7, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

image

சேலம், காட்பாடி வழியாக இயக்கப்படும் கோவை- கயா (03680) சிறப்பு ரயில் இன்று (ஜன.07) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில், இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக 05.20 மணி நேரம் தாமதமாக இன்று நண்பகல் 01.10 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News January 7, 2025

சேலத்தில் 5மாத சிசு மீட்பு

image

கெங்கவல்லி பத்தாவது வார்டில் நேற்று (ஜன.06) மாலை சப்பானி தெரு பகுதியில் உள்ள சாக்கடையில் 5 மாத சிசு சாக்கடையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல்  தெரிவித்தனர். கெங்கவல்லி போலீசார் உடனடியாக சிசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி ஆய்வு செய்து வருகின்றனர்.

News January 7, 2025

சேலத்தில் இன்றைய நிகழ்வுகள்

image

சேலம் (ஜன.7) இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1) காலை 9.30 மணியளவில் திமுக சார்பில் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். 2) 10 மணி பெரியார் பல்கலைக்கழக கலைத் திருவிழா. 3) சேலம் துணை தபால் நிலையங்களில் ஆதார் முகாம். 4) காலை 11 மணி தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம். 5) மாலை 6:00 மணி பழைய பேருந்து நிலையத்தில் கண்காட்சி நடைபெறுகிறது.

News January 7, 2025

”ஆன்லைன் கடன் செயலிகள் தவிர்ப்பீர்” 

image

சேலம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தில் ”சைபர் அலார்ட் ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெறுவதை கட்டாயம் தவிர்ப்பீர். நீங்கள் பெரும்கடன் தொகைக்கு அதிகவட்டி தொகை விதிக்கப்படுவதோடு உங்கள் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டு அவை தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு சைபர் குற்றவாளிகள் உங்களிடம் பணம் கேட்டு மிரட்டும் அபாயம் உள்ளது. ஆன்லைன் நிதி சார்ந்த குற்றங்கள்புகாருக்கு1930 அழைக்கவும்”.

News January 7, 2025

சேலத்தில் ஒருவருக்கு HMPV வைரஸ் பாதிப்பு

image

சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட சளி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு ஹெச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் “பொதுமக்கள் யாரும் அச்சப்படவேண்டாம், பொது இடங்களில் முகக்கவசம் அணியும்படி மக்களை” தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

News January 6, 2025

மாவட்ட காவல் ரோந்து பணி விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்றிரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 6, 2025

சேலத்தில் சீமான் பேட்டி!

image

சேலத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது மரபை மீறிய செயல். சட்டப்பேரவையை விட்டு வெளியேறியதை விட, தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேறலாம். அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் உள்ளிட்ட அனைத்தையும், அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது” என கூறினார்.

News January 6, 2025

சேலத்தில் இப்ப இந்த தொகுதிதான் டாப்பு!

image

சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.06) வெளியானது. மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக, சேலம் மேற்கு தொகுதி உள்ளது. 1,51,857 ஆண் வாக்காளர்கள், 1,53,973, பெண் வாக்காளர்கள், 78 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3,05,908 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. ஓமலூர் தொகுதி 2-வது இடத்திலும், எடப்பாடி தொகுதி 3-வது இடத்திலும் உள்ளது.

News January 6, 2025

சேலம்: ஒரே நிகழ்ச்சியில் பிரபல நடிகர், Ex போலீஸ் அதிகாரி

image

சேலம் மறவனேரி அருகே உள்ள தொங்கு பூங்காவில் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி மற்றும் திரைப்பட நடிகர் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 3000 மேற்பட்ட மாணவ மாணவிகளிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

error: Content is protected !!