Salem

News January 16, 2025

சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் கைது

image

சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் காஜா முஹைதீன் (23), அரவிந்த்(23). இவர்கள் இருவரும் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், இருவரையும் பிடிக்க நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. அதன்படி, இருவரையும் கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

News January 16, 2025

மேச்சேரி சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை

image

சேலம் மாவட்டம், மேச்சேரியில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று (ஜன.15) கூடிய வாராந்திர ஆட்டுச்சந்தையில் 5,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 10 கிலோ எடைக்கொண்ட ரூபாய் 8,500 முதல் ரூபாய் 10,000 வரை விற்பனையானது. சுமார் ரூபாய் 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாகவும், கூடுதல் விலை கிடைத்ததாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

News January 16, 2025

6 மருந்துக் கடைகளின் லைசென்ஸ் ரத்து!

image

சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடைகள், மொத்த மருந்துக் கடைகளை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சேலம், நாமக்கல்லில் மட்டும் கடந்த 2 வாரத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 கடைகளின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 16, 2025

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தின் ஜனவரி 16 இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் இருந்து மதுவிலக்கு வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மதுரை வரை விழிப்புணர்வு நடை பயணம். 2)காலை 10 மணி கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவிலில் எருதாட்டம் 3) செட்டி சாவடி மாரியம்மன் காளியம்மன் கோவிலில் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் 4) அஸ்தம்பட்டியில் முனியப்பன் கோவில் திருவிழா சிறப்பு வழிபாடு

News January 16, 2025

விமான நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

image

சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் பகுதிகளுக்கு இண்டிகோ, அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்கள், பயணியர் விமான சேவையை இயக்கி வருகின்றன. தற்போது பொங்கல் பண்டிகையால் இரு நாட்களாக அனைத்து விமானங்களில் 65 முதல் 70 இருக்கைகளும் நிரம்பியபடி இயக்கப்பட்டன. அதே நேரமும் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்றும் பயணிகள் கூட்டம் காணப்பட்டதால், விமான நிலையத்தில் அதிக கார்கள் நின்றன.

News January 15, 2025

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

image

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் 2 சமூக பார்வையாளர்கள், சிறார் அலகிற்கு 2 பார்வையாளர்கள் என நான்கு பேர் நியமிக்கப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0472415966 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News January 15, 2025

சேலம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும்சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில்காவல் |அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி இன்று ஜன.15 இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

News January 15, 2025

சேலம் மாநகராட்சியில் 500 டன் குப்பைகள் சேகரிப்பு!

image

பொங்கல் பண்டிகை முதல் நாளில் போகி கொண்டாடப்படுகிறது. இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் உள்ள பழைய பொருட்களை வீதியில் போட்டு எரிப்பர். தற்போது வீட்டை சுத்தப்படுத்தி தேவையற்ற பொருட்களை குப்பையில் போடுகின்றனர். சேலம் மாநகராட்சியில் தினமும் 400 டன் குப்பை சேகரிக்கப்படும். போகி பண்டிகையில் சேர்ந்த கூடுதல் குப்பையால் நேற்று 500 டன் குப்பை சேகரிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு அதிக குப்பை சேகரமாகும்.

News January 14, 2025

கடித்து குதறிய நாயை அடித்து கொன்ற மக்கள்

image

சேலம் மாநகராட்சியின் அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட ராஜகணபதி தெருவில் நாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொங்கல் பண்டிகை அன்று நிகழ்ந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அச்சுறுத்தி வந்த நாயை பொதுமக்கள் அடித்தே கொன்றனர்.

News January 14, 2025

“2026-ல் தி.மு.க.வை வேரோடு அகற்றுவோம்!”

image

“2025ம் ஆண்டை சிறப்பான ஆண்டாக அமைத்து, 2026 தைத்திருநாள், தி.மு.க.வை வேரோடு அகற்றும் நாளாக அமையும்; அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் வேளாண் தொழில் சிறந்து விளங்கியது. நானும் விவசாயி என்ற முறையில் மக்களோடு சேர்ந்து பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சி”- சேலத்தில் நடந்த பொங்கல் விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

error: Content is protected !!