India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகளை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் 17 இடங்களில் உழவர் நல சேவை மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 20 முதல் 45 வயதுக்குட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். https://www.tnagrisnet.tn.gov.in/ மானிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

சேலம் மாவட்ட அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியான வெளிமுகமை நிறுவனங்கள் உரிய சான்றுகளுடன் தங்களது விண்ணப்பங்களை செப்.10 மாலை 05.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 415, 4-வது தளம், ஆட்சியர் அலுவலகம், சேலம்-636001 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில், காலியாக உள்ள டிரைவர் மற்றும் இரவு காவல் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 8 ஆம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சம்பளமாக 15,700 முதல் 62,000 வரை வழங்கப்படும். மேற்படி காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நாளை (செப்.02) இராமனுஜபுரத்தில் உள்ள சமுதாயக்கூடம், வேம்படிதாளத்தில் உள்ள ஏ.வீ.எம். திருமண மண்டபம், கிருஷ்ணம்புதூரில் உள்ள கே.கே.எம். திருமண மண்டபம், நங்கவள்ளியில் உள்ள எம்.என்.வி. திருமண மண்டபம், சங்ககிரியில் உள்ள சமுதாயக்கூடம், சிவதாபுரத்தில் உள்ள கந்தசாமி கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறுகிறது.

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்.10 முதல் நவ.29 வரை சேலம் வழியாக மதுரை- ப்ரௌனி இடையே சிறப்பு ரயில்கள் (06059/06060) அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் புதன்கிழமைதோறும் மதுரையில் இருந்து ப்ரௌனிக்கும், சனிக்கிழமைதோறும் ப்ரௌனியில் இருந்து மதுரைக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

பண்டிகைகளை முன்னிட்டு செப்.05 முதல் அக்.20 வரை சேலம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு-சந்தரகாசி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்(06081/06082) இயக்கப்படும் என்று அறிவிப்பு. வெள்ளிக்கிழமைதோறும் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து சந்தரகாசிக்கும், திங்கட்கிழமைதோறும் சந்தரகாசியில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

7வது மாநில அளவிலான பின் கார்ட் சிலாட் போட்டி விழுப்புரத்தில் ஆகஸ்ட் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் சேலத்தைச் சார்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேலம் மாவட்ட செயலாளர் அஸ்வின் மற்றும் பயிற்சியாளர் சிவநாதன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

சேலம் மாவட்டத்தில் 12 தேர்வு மையங்களில் இன்று (ஆக.31) நடந்த டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வில் 4,447 தேர்வர்கள் பங்கேற்று தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கு சேலம் மாவட்டத்தில் மொத்தம் 6,000- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,812 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.31) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று (ஆக.31) மாலை முதல் தற்போது வின்சென்ட், அண்ணா பூங்கா, 4 ரோடு, மத்திய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, கன்னங்குறிச்சி, பட்டைக்கோவில், அம்மாப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழையா? கீழே கமெண்ட் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.