Salem

News January 23, 2025

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

image

சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் படைப்பிரிவில் 24 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப, தகுதியான நபர்கள் வரும் ஜன.25-ல் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் தேர்வில் பங்கேற்கலாம்.10-ம் வகுப்பு கல்வி தகுதி,18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.  

News January 22, 2025

ஜனவரி.26 கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அரசின் உத்தரவுப்படி அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அரசின் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். 

News January 22, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

குப்பம் ரயில் நிலையத்தில் பணிகள் காரணமாக, ஜன.24, பிப்.08 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக செல்லும் கன்னியாகுமரி- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் வடக்கு- மைசூரு ஜங்சன் எக்ஸ்பிரஸ் ரயில், ஜன.27, பிப்.03 ஆகிய தேதிகளில் மங்களூரு சென்ட்ரல்- யஷ்வந்த்பூர் ஜங்சன் ஆகிய ரயில்கள், மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் குப்பம் ரயில் நிலையம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News January 22, 2025

சேலம்‌ மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள்

image

சேலம் மாவட்டம், தும்பல், வேம்படிதாளம், கே.ஆர்.தோப்பூர், அஸ்தம்பட்டி, தேவூர், ஆடையூர், சன்னியாசிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அந்தந்த மின்நிலையங்களுக்கு உட்பட்டப் பகுதிகளில் நாளை (ஜன.23) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2025

‘புதுமைப்பெண்’ திட்டத்தில் 8,087 பேர்‌‌ பயன்!

image

தமிழ்நாடு அரசு, சமூக நலத்துறை மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 2023- 24-ம் ஆண்டில் ‘புதுமைப்பெண்’ திட்டம் மூலம் 8 ஆயிரத்து 87 பேர் பயன்பெற்றுள்ளனர். திருமண நிதியுதவி திட்டத்தில் 1,204 பேர் பயனடைந்துள்ளதாக சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!

image

ராஜஸ்தான் மாநிலம், ரதன்கர்- மோலிசர் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே இரு வழிப்பாதை அமைக்கும் பணி நடப்பதால் வரும் ஜன.25 மதியம் 02.55 மணிக்கு கோவையில் புறப்படும் கோவை- ஹிசார் எக்ஸ்பிரஸ் ரயில் பிகனேர் ஸ்டேஷன் வரை மட்டும் இயக்கப்படும். பிகனேர் ஸ்டேஷன் முதல் ஹிசார் வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News January 22, 2025

சிங்கப்பூர் செல்லும் சேலம் ஆவின் பால்

image

சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 20,000 லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால், 2 கண்டெய்னர்கள் மூலம் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, சேலம் ஆவின் பால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 10,000 லிட்டர் பால் சென்னை அடையாரில் உள்ள கடற்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News January 22, 2025

சேலம் அரசு மருத்துவமனையில் சித்த பிரிவுக்கு புதிய கட்டிடம்

image

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், சித்த மருத்துவ பிரிவு கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மாத காலத்திற்குள் பணி‌ நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News January 22, 2025

சேலத்தில் இந்த பகுதிகளில் இன்று மின்தடை!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (22-01-2025) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, மல்லுார் பகுதி துணை மின்நிலையம், இடைப்பாடி பகுதி துணை மின்நிலையம், பூலாம்பட்டி பகுதி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2025

அரங்கனூரில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது

image

அரங்கனூர் கிராமம் பொம்மியம்பட்டி கலர் காடு பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 44) என்பவரது குடிசை வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த நங்கவள்ளி தீ அணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் குடிசை வீடு எரிந்துவிட்டது. மேலும் வாஷிங் மெஷின், கிரைண்டர், வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்துசேதமடைந்தது. மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!