India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் அனுப்பூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்மாள் இவர் காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதில் தனது வீட்டில் பீரோவில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் ரெண்டு பவுன் தங்க நகை வைத்திருந்ததாகவும் நேற்று மாலை திருமணத்திற்கு செல்ல பீரோவை திறந்த போது பணத்தையும் நகையும் காணவில்லை என்று தெரிவித்துள்ளார் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பம் இல்லாத நேரடி சேர்க்கை நடைபெறுகிறது இது குறித்த விபரங்கள் https://gmkmc.com இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் பனிரெண்டாம் தேதிக்குள் விண்ணப்பத்தை வழங்க வேண்டும் என்று ஆட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்

சேலம் மாநகர இரவு நேர காவல் அதிகாரிகளின் விவரம் காவல் உதவி ஆணையாளர் வி சரவணன் தெரிவித்துள்ளார், சேலம் டவுன்சாரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், உள்ளிட்ட பகுதிகளுக்கான காவல் அதிகாரிகளும் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மாநகர காவல் கட்டுப்பாட்டு அரை தொலைபேசியில் 100 0427 221 0002 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

சேலம் மாவட்டம் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் 1792 ஏப்ரல் 4ஆம் தேதி உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் ஆகும். இளம்பிள்ளை, இரும்பு ஆலை போன்ற பகுதிகளில் இரும்பு, ஜவுளி, வேளாண்மை வளங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேலம் தனி அங்கம் வகிக்கிறது. மேலும் தமிழகத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 3 முதல்வர்களை கொடுத்த ஊராகும். உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை COMMENT பண்ணுங்க!

சேலம் மக்களே..,அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்த ஹரி விக்னேஷ் (23) என்பவர் காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரை தெரு நாய் ஒன்று கடித்ததாகவும் அதனால் அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல்.கடந்த சில நாள்களுக்கு முன் ரோபிஸ் தாக்கி சேலத்தில் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

சேலம் மாநகர் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது: “அவசர ஓட்டம் விபத்துகளையும் கண்ணீரையும் தரும்; பாதுகாப்பான ஓட்டம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும்.” அனைவரும் அவசர ஓட்டத்தை தவிர்த்து, சாலை விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விபத்துகளைத் தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

சேலம் மாநகர எல்லைக்குள் இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று பெண்கள் மாயமாக உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீராணம் காவல் நிலையத்தில் திருமணம் ஆகாத ஷர்மிளா திருமணமான ராஜேஸ்வரி எனும் பெண் காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரமங்கலம் பகுதியில் திருமணமான பாக்கியலட்சுமி பெண் காணவில்லை என புகார் பதிவாகியுள்ளது. தினமும் பெண்கள் மாயமாவது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை எட்டு மாதங்களில் சாலை விபத்துகளில் மொத்தம் 443 பேர் பலியாகி உள்ளதாகவும், 1,463 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தகவல். இதில் சேலம் மாநகரில் மட்டும் 120 பேர் சாலை விபத்துகளில் பலியாகி உள்ளனர். அரசின் முறையான போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்தில்லா பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல்!
Sorry, no posts matched your criteria.