India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 16 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து மூன்றாம் நாள் காணும் பொங்கல் தினமான இன்று (16-01-25) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போட்டியானது மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது. இதில் சிறந்த காளைக்கான முதல் பரிசான டிராக்டர், சேலத்தினை சேர்ந்த பாகுபலி காளைக்கு வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தின் பல்வேறு பகுதிகளில் எருதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆத்தூர் அருகே உள்ள செந்தாரப்பட்டியில் நடைபெற்ற எருதாட்டம் நிகழ்சியில் காளை முட்டியதில் மணிவேல்(43) என்ற தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் நடத்து சென்றபோது காளை முட்டியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் காஜா முஹைதீன் (23), அரவிந்த்(23). இவர்கள் இருவரும் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், இருவரையும் பிடிக்க நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. அதன்படி, இருவரையும் கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று (ஜன.15) கூடிய வாராந்திர ஆட்டுச்சந்தையில் 5,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 10 கிலோ எடைக்கொண்ட ரூபாய் 8,500 முதல் ரூபாய் 10,000 வரை விற்பனையானது. சுமார் ரூபாய் 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாகவும், கூடுதல் விலை கிடைத்ததாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடைகள், மொத்த மருந்துக் கடைகளை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சேலம், நாமக்கல்லில் மட்டும் கடந்த 2 வாரத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 கடைகளின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தின் ஜனவரி 16 இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் இருந்து மதுவிலக்கு வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மதுரை வரை விழிப்புணர்வு நடை பயணம். 2)காலை 10 மணி கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவிலில் எருதாட்டம் 3) செட்டி சாவடி மாரியம்மன் காளியம்மன் கோவிலில் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் 4) அஸ்தம்பட்டியில் முனியப்பன் கோவில் திருவிழா சிறப்பு வழிபாடு
சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் பகுதிகளுக்கு இண்டிகோ, அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்கள், பயணியர் விமான சேவையை இயக்கி வருகின்றன. தற்போது பொங்கல் பண்டிகையால் இரு நாட்களாக அனைத்து விமானங்களில் 65 முதல் 70 இருக்கைகளும் நிரம்பியபடி இயக்கப்பட்டன. அதே நேரமும் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்றும் பயணிகள் கூட்டம் காணப்பட்டதால், விமான நிலையத்தில் அதிக கார்கள் நின்றன.
குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் 2 சமூக பார்வையாளர்கள், சிறார் அலகிற்கு 2 பார்வையாளர்கள் என நான்கு பேர் நியமிக்கப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0472415966 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும்சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில்காவல் |அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி இன்று ஜன.15 இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.