India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் இன்று காலை கண்டெய்னர் லாரி ஒன்று நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாலை ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டி உடல் நசுங்கி உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள்<
டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த மூன்று பைகளை போலீசார் மீட்டு சோதனை நடத்தினர். இதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பெருமூச்சி கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(30). இவர் சிறுமி பாலியல் வழக்கில் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜே. யூ. சுந்தரகலா இ. ஆ.பா. அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 27/03/2025 வியாழன் கிழமை மார்ச் 2025ஆம் மாதத்திற்கு விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆறு விவசாயிகளுக்கு ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிலான விசைத்தெளிப்பான், சூரிய விளக்குப்பொறி, மண்புழு உரப்படுக்கை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்.27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், சுகப் பிரசவம் நடைபெற வேண்டியும் வழிபடும் முக்கிய கோவில்களில் தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோவில் முக்கியமானது. இக்கோவிலில், அம்பாளுக்கு பதிலாக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். பெண்களின் கர்ப்ப கால பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பொதுவாக நேராக அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி இங்கு தலையை ஒரு புறமாக சாய்த்த நிலையில் காட்சி தருகிறார்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக பெண்களுக்கான அவசர உதவி எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் <
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மார்ச் 26 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. வாலாஜா ராணிப்பேட்டை ரத்தினகிரி கலவை ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100
Sorry, no posts matched your criteria.