Ranipet

News April 9, 2025

நாவில் எச்சில் ஊற வைக்கும் ராணிப்பேட்டை மக்கன் பேடா

image

ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரியமான உணவு வகை இருக்கும். எத்தனை தலைமுறை கடந்தாலும் அந்த உணவும் அதன் ருசியும் மாறவே மாறாது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்பெஷல் உணவு என்றால் அது மக்கான் பேடா தான். மக்கன் என்றால் உருது மொழியில் நயம் என்றும் பேடா என்றால் சர்க்கரை பாகில் ஊறவைக்கும் இனிப்பிற்கு பேடா என்று கூறப்படுகிறது. தந்தை பெரியார் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார். ஷேர் பண்ணுங்க மக்களே!

News April 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News April 8, 2025

மகாவீர் ஜெயந்தி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினம் என்பதால் அந்நாளில் மட்டும் அரசு டாஸ்மாக் மது கடைகளை மூடி வைக்க வேண்டும். மதுக்கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்த மது கூடங்களையும் மூட வேண்டும். மீறினால் மதுக்கூடங்களின் உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ஆட்சியர்

image

 மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏப்ரல் 12ம் தேதி காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல் நீக்கல், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்டவற்றுக்கு மனு கொடுத்து தீர்வு பெறலாம்.

News April 8, 2025

ரேஷன் அட்டையில் திருத்தும் செய்யணுமா?

image

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, ராணிப்பேட்டை மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க

News April 8, 2025

ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

image

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ambedkarfoundation.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

News April 8, 2025

குடும்ப பிரச்சனையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

image

மேல்புலம் கிராமம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (55). நேற்று (ஏப்ரல்.07) குடும்ப பிரச்னை காரணமாக தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் முனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல) 

News April 8, 2025

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆட்சியர் அறிவிப்பு

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் காசோலை, பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும். தகுதியானவர்கள் www.sdat.tn.gov.in ல் மே 9 ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

நகை கடையில் செயின் திருடிய பெண் கைது

image

நெமிலி பஜார் பகுதியை சேர்ந்தவர் சுசில்குமார். இவர் அதே பகுதியில் நகை மற்றும் அடகு கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் தேதி சுசில்குமாரின் கடைக்கு வந்த பெண் ஒருவர், நகை வாங்குவது போன்று ஒன்றை சவரன் செயினை திருடி சென்றார். நெமிலி போலீசார் இதனை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், திருவள்ளூரை சேர்ந்த ரஹானா என்பவர் நகையை  திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று அவரை கைது போலீசார் செய்தனர்.

News April 7, 2025

நாட்டின் முதல் காந்தி சிலை

image

ராணிப்பேட்டை முத்துக்கடை ஜங்சனில் வைக்கப்பட்ட காந்தி சிலை தான் நாட்டிலேயே காந்திக்கு வைக்கப்பட்ட முதல் சிலை. காந்தி இறந்த 13 நாட்களில் ஜெயராமன் செட்டியார் என்பரால் வைக்கப்பட்ட இந்த சிலை இன்று ராணிபேட்டை அரசு பள்ளியில் உள்ளது. உலகம் முழுவதும் காந்தியின் சில உள்ள நிலையில் முதல் காந்தி சிலையை நிறுவி பெருமை பெருமை பெற்றுள்ளது ராணிப்பேட்டை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!