India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் TRAINEE பணிக்கு 100 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் <
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் தினந்தோறும் சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படுகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட முயற்சிக்காதீர்கள் உங்களுக்காக உங்கள் குடும்பம் காத்திருக்கிறது மதுபோதையில் பயணம் செய்வதை தவிர்ப்போம்.. பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம்…என விழிப்புணர் செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பபணிகள் குடிமைப்பணிகள் தேர்வுகள் வருகிற 17, 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 தேர்வு கூடங்களில் நடைபெற உள்ளது. தேர்வினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 781 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்விற்காக கூடுதல் சிறப்பு பஸ் வசதிகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்
பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350918>>தொடர்ச்சி<<>>
FSSAI (அ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ/ புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது , கடையின் முழுமையான முகவரி போன்ற ஆதாரங்களோடு புகார் செய்யும் போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது அந்தந்த வட்டாச்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டையில் பெயர், முகவரி திருத்தம், உறுப்பினர் சேர்க்கை, புகைப்பட பதிவேற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் தான் கி.பி 949ல் முதலாம் பராந்தகனின் மகன் ராஜாதித்யனுக்கும், ராஷ்டிரகூடர்களின் கங்க இளவரசர் பூட்டுகனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஆதித்த கரிகாலனை போல வீரமிக்க சோழ இளவரசனான ராஜாதித்யன் இந்த போரில் வீரமரணம் அடைந்தான். இவரது வீரத்தை போற்றும் விதமாக தான் அரக்கோணம் CISF ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் ராஜாதித்ய சோழன் (RTC), தக்கோலம் என மறுபெயரிடப்பட்டது. ஷேர் பண்ணுங்க
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பயணித்து வரும் அதிமுக கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான EPS இந்த மாதம் ராணிப்பேட்டைக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் அவருக்கு சிறப்பாக வரவேற்பளிக்கவும் உரிய ஏற்பாடுகளை செய்திடவும், மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் சுகுமார் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் கலாம் கனவு அறக்கட்டளை சார்பில் வருகின்ற ஆகஸ்ட்-15 மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய ஆகஸ்ட் 9 முதல் 13 வரை ஒதுக்கப்பட்டுள்ளது, பதிவு கட்டணம் 200 ரூபாய் என அறிவிப்பு. வயது வரும்போது 18 வயது முதல் 35 வரை நிர்வாகம் அறிவிப்பு மூன்று பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.