Ranipet

News March 28, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளத்தை வெளியிட்டுள்ள செய்தியில், சில விஷயங்களை பகிரக்கூடாது, உங்கள் கடவுச்சொல்லை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். தகவல் பாதுகாப்பு உங்களிடமிருந்து தொடர்கிறது என மாவட்ட காவல்துறை சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. உதவிக்கு சைபர் கிரைம் 1930-ஐ அழைக்கலாம்.

News March 28, 2025

ரூ.1.50 கோடியில் ஒருங்கிணைந்த கைத்தறி விற்பனை வளாகம்

image

ராணிப்பேட்டை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி இன்று(மார்.28) சட்டசபையில் தனது துறை மானிய கோரிக்கையின் மீது கூறும்போது ராணிப்பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் ரூ.1.50 கோடியில் நகராட்சி நிர்வாகத்தால் கட்டப்படும் கட்டிடத்தில் கோ ஆப் டெக்ஸ் ஒருங்கிணைந்த கைத்தறி விற்பனை வளாகம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தார்.

News March 28, 2025

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு

image

வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொது தேர்வு மையத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமல் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி மின்சார வசதி செய்து தர வேண்டும் என்றார்.

News March 28, 2025

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

image

தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் இன்று காலை கண்டெய்னர் லாரி ஒன்று நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாலை ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டி உடல் நசுங்கி உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 28, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள்<> இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 28, 2025

ரயிலில் 26 கிலோ கஞ்சா பறிமுதல் 

image

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த மூன்று பைகளை போலீசார் மீட்டு சோதனை நடத்தினர். இதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து  பறிமுதல் செய்த கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

News March 28, 2025

போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை

image

ராணிப்பேட்டை மாவட்டம் பெருமூச்சி கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(30). இவர் சிறுமி பாலியல் வழக்கில் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

News March 28, 2025

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜே. யூ. சுந்தரகலா இ. ஆ.பா. அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 27/03/2025 வியாழன் கிழமை மார்ச் 2025ஆம் மாதத்திற்கு விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆறு விவசாயிகளுக்கு ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிலான விசைத்தெளிப்பான், சூரிய விளக்குப்பொறி, மண்புழு உரப்படுக்கை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை வழங்கினர்.

News March 27, 2025

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்.27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News March 27, 2025

பெண்களின் பிரசவ வழிபாட்டு தலம்

image

பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், சுகப் பிரசவம் நடைபெற வேண்டியும் வழிபடும் முக்கிய கோவில்களில் தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோவில் முக்கியமானது. இக்கோவிலில், அம்பாளுக்கு பதிலாக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். பெண்களின் கர்ப்ப கால பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பொதுவாக நேராக அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி இங்கு தலையை ஒரு புறமாக சாய்த்த நிலையில் காட்சி தருகிறார்.

error: Content is protected !!