Ranipet

News April 10, 2025

ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க மக்களே!

News April 10, 2025

ராணிப்பேட்டையில் பயிற்றுநர் வேலை 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது. பயிற்றுநர் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் dsorpt@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரிக்கு ஏப்ரல் 20 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

சாலை விபத்தில் ஒருவர் பலி

image

ராணிப்பேட்டை, திமிறி அடுத்த வணக்கம்பாடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் மீது நேற்று (ஏப்ரல்.09) அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து தப்பித்து சென்றது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 9, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு.

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 9 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவளூர் நெமிலி கலவை கொண்டபாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100

News April 9, 2025

இரவு ரோந்தில் இருக்கும் போலீசார் பற்றிய தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 09/04/2025 காவலுக்கு இருக்கும் போலீசார்  பற்றிய பெயர் குறிப்பு மற்றும் அலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ராணிப்பேட்டை பொதுமக்கள் தேவை ஏற்பட்டால் நிச்சயமாக இந்த அலைபேசி எண்ணை உபயோகிக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News April 9, 2025

ராணிப்பேட்டை: மணியோசை தரும் பாறை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றாக காஞ்சனகிரி மலைக்கோயில் உள்ளது.1008 சுயம்பு லிங்கங்கள் உள்ள இங்கு மணிப்பாறை எனும் இடம் உள்ளது. இந்த மணிப்பாறையில் கல்லை வைத்து தட்டினால் மணியோசை கேட்பதால் இங்கு வருபவர்கள் இதை ஆச்சரியமாக பார்க்கின்றனர். இயற்கை சூழ்ந்த காஞ்சனகிரி மலை சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

ராணிப்பேட்டை: சொத்துவரி செலுத்துவோருக்கு கட்டண சலுகை 

image

ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் 2025-26ஆம் ஆண்டுக்கான அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30க்குள் செலுத்தும் நபர்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட கால அளவில் வரி செலுத்தாத நபர்களுக்கு ஒரு சதவீத தாமத வட்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது முறையாக வரி செலுத்துவோருக்கு பயன் உள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்து.

News April 9, 2025

ராணிப்பேட்டை MRF டயர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

ராணிப்பேட்டையில் இயங்கிவரும் MRF டயர் நிறுவனத்தில் Lead Trainee பணிக்கான 100 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. BA, BSC, BBA, BCA, B.Com அல்லது Diploma ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.18-25 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ரூ.19,500 சம்பளம் வழங்கப்படும். மானிய விலையில் உணவக வசதி, மானிய போக்குவரத்து வசதி, இலவச காலனி, சீருடை வழங்கபடும். இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் 12-ந்தேதி நடைபெறுகிறது

image

பொது வினியோக திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான சிறப்பு முகாம் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதுதவிர பொது வினியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

மகாவீர் ஜெயந்தி அன்று மது விற்பனைக்கு தடை

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.10ம் தேதி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால், மதுக்கூடங்கள் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!