India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (ஜன.9) இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் ரூ.5.46 கோடி மதிப்பீட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM machine) பாதுகாப்பு வைப்பறை கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.09) திருவள்ளூர் மாவட்டத்தில் “உங்கள் கனவை சொல்லுங்க” என்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வை இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் இராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பார்வையிட்டனர்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய இளைஞர் விளையாட்டு திருவிழாவான “இது நம்ம ஆட்டம் 2026” இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் 16 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்.
போட்டிகள் ஜன.22 முதல் பிப்.08 வரை ஊராட்சி, மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் நடைபெறும்.
பதிவு செய்ய கடைசி தேதி ஜன.21. பங்கேற்க விரும்புவோர்
www.sdat.tn.gov.in, www.cmyouthfestival.sdat.in இணையதளங்களில் பதிவு செய்யலாம்.

ராணிப்பேட்டை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

தமிழக அரசின் TANSIM இயக்கம், புதிய பிசினஸ் ஐடியா வைத்துள்ள இளைஞர்களுக்கு ₹10 லட்சம் வரை மானியம் (Seed Grant) வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி உதவி மட்டுமன்றி, தொழில் வழிகாட்டுதலும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர் <

ராணிப்பேட்டை மாவட்ட திமுகவின் திராவிட பொங்கல் சார்பில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகளை உள்ளடக்கிய விளையாட்டு போட்டிகள் ஜனவரி 10, 11 மற்றும் 25, 26 தேதிகளில் நடைபெறுகின்றன.
இதற்கான நோட்டீஸை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி இன்று (ஜன.9) வழங்கபட்டது.

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<

ராணிப்பேட்டை மக்களே! தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும். <

ராணிப்பேட்டை மக்களே! தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் இன்று (ஜன.9) மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்து வருகின்றன. இதில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.