Ranipet

News January 11, 2026

ராணிப்பேட்டை: வருமான வரித்துறையில் வேலை.. அரிய வாய்ப்பு!

image

இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து ஜன.31-குள் விண்ணப்பித்து கொள்ளலாம். சூப்பர் வாய்ப்பு. ஷேர் செய்யவும்.

News January 11, 2026

ராணிப்பேட்டையில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

அரக்கோணம்: தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம்!

image

மோசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இன்று (ஜனவரி 11) ரயில் மோதி ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.

News January 11, 2026

ராணிப்பேட்டை: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

image

ராணிப்பேட்டை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 11, 2026

ராணிப்பேட்டை: புதிய TRACTOR வாங்க 80% மானியம்!

image

ராணிப்பேட்டையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 11, 2026

ராணிப்பேட்டை: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

ராணிப்பேட்டையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <>DigiLocker, <<>>M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

BIG NEWS: ராணிப்பேட்டைக்கு கனமழை எச்சரிக்கை!

image

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் பகுதியில் தற்போது மழை பெய்கிறதா என கமெண்டில் சொல்லுங்க.

News January 11, 2026

ராணிப்பேட்டை: தறிகெட்டு ஓடிய கார் – அலறிய மூதாட்டி!

image

முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இன்று (ஜன.10) பேருந்துக்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கார் ஓட்ட பழகிய பெண் ஒருவர் தாறுமாறாக கார் ஓட்டியதில் பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டி ஒருவரின் கால் மீது கார் மோதியது. இதில், மூதாட்டி காலில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 11, 2026

அரக்கோணம்: குளிக்கும் போது மூச்சுத் திணறி பலி!

image

கணபதிபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (45) நேற்று (ஜன.10) தனது வீட்டின் அருகில் உள்ள குட்டையில் குளித்துள்ளார். அப்போது திடீரென மூச்சுத் திணறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தக்கோலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 11, 2026

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விரவம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!