Ramanathapuram

News October 27, 2024

மீனவர்களின் 10வது நாள் வேலை நிறுத்த போராட்டம்

image

மண்டபம் பகுதியைச் சேர்ந்த 27 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அக்.14ம் தேதி கைது செய்து வவுனியா & யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் நவ.9ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்தது, 27 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் 10வது நாளை எட்டியது.

News October 27, 2024

மருதுபாண்டியர் குருபூஜை விழா மரியாதை செலுத்திய MLA

image

மருதுபாண்டியர்களின் 223-வது குருபூஜை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள மருதிருவர் சிலைக்கு மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து மருதிருவர் சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் MLA காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News October 27, 2024

இராமநாதபுரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

image

மதுரை ,தேனி மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்ததால் வைகை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றின் கரையோர பகுதியில் குடியிருந்து அமர்ந்திருக்கும் மக்களுக்கு பரமக்குடி, இராமநாதபுரம் தாசில்தார் பேரிடர் மேலாண்மை துறைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது மக்களை அப்புற படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 26, 2024

தமிழக முதல்வருக்கு நடிகர் கருணாஸ் கோரிக்கை

image

தமிழகம் முழுவதும் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவுக்கு வரும் வாகனங்களுக்கு அக்.28 ஆம் தேதிக்கு முன்பே அனுமதி சீட்டுகள் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவன தலைவர் முன்னாள்  MLA கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

News October 26, 2024

ரயில் ப்ரேக் ஷூ பட்டு விவசாயி உயிரிழப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் ரயில்வே தண்டவாளத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகவேலு(61) என்பவர் இன்று(அக்.26) காலை விவசாய பணிக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலின் ப்ரேக் ஷீ கழன்று அவரின் முகத்தில் பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

News October 26, 2024

பாஜக சார்பில் தேவர் குருபூஜையில் பங்கேற்பவர்களின் பட்டியல்

image

பசும்பொன்னில் வருகிற (அக்.30) முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை விழாவில் பாஜக சார்பில் கலந்து கொள்பவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய இணை அமைச்சர் முருகன், H ராஜா, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், பொன்பால கணபதி, ராம ஸ்ரீ நிவாசன், ஆனந்தன் அய்யாசாமி, முரளிதரன், தரணி முருகேசன், EMT கதிரவன், ஜி நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

News October 26, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(அக்.26) தென்காசி, திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

News October 26, 2024

ராமநாதபுரம் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை திரு. சுதிர்லால் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News October 25, 2024

புவனேஸ்வரம் To மண்டபம் விரைவு ரயில் ரத்து

image

வண்டி எண் 20896 என்ற புவனேசுவர்- மண்டபம் வராந்திரா விரைவு ரயில் இன்று (25/10/24) மற்றும் நாளை (26/10/24) ரத்து செய்யப்படுகிறது.  இந்த ரயிலில் பயணிப்போர் மாற்று ரயிலை பயன்படுத்திக்கொள்ள தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News October 25, 2024

ராம்நாட்டில் தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.10.2024) மாவட்டத் தொழில் மையம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்,தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்துகொண்டு கடன்களை வழங்கினார். நிகழ்வில், ஏராளமானோர் தொழிற்கடன்களை பெற்றனர்.

error: Content is protected !!