India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொண்டி அருகே நம்புதாளையில் தீபாவளிக்கு ராட்டினம் தொழில் செய்ய வந்த பரமக்குடியை சேர்ந்த முத்துகுமாரை நேற்று(நவ.1) சிலர் வெட்டி படுகொலை செய்தனர். தொண்டி போலீஸ் விசாரனையில் சிவகங்கை பெருமாட்சேரி சரவணன் அக்காவுடன் முத்துக்குமார் திருமணம் மீறிய உறவு வைத்துள்ளார். அவரை கண்டித்தும் பலன் இல்லை என்பதால் சரவணன் & சிலர் சேர்ந்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து போலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ராமேஸ்வரம் சேதுநகரை சேர்ந்தவர் கனகராஜ் மகன் கரண்ராஜ் 6ம் வகுப்பு படித்தார். தீபாவளி கொண்டாட 31ம் தேதி அவர் மாமா வீட்டிற்க்கு கனகராஜ் குடும்பத்துடன் சென்றார். அங்கு உருளை வடிவில் இருக்கும் பட்டாசு திரிக்கு தீப்பற்ற வைத்தார். வெடிக்க தாமதமானதால் பட்டாசு குழாயை உற்றுப்பார்த்தார். அப்பபோது திடீரென மேலே கிளம்பிய பட்டாசு முகத்தில் வெடித்து முகம் சிதைந்து வீட்டார் முன்னிலையிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் ஐங்கரன் (24), இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த அவர் நேற்று(அக்.31) இரவு 12 மணியளவில் தனது புதிய பைக்கில் பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்தபோது வழிகாட்டி பலகை மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நம்புதாளையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொழுது போக்கிற்காக போடப்பட்ட ராட்டினம் தொழிலில் முன்விரோதம் காரணமாக பரமக்குடியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கொலையால் பரபரப்பு தொண்டி போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நவ.3 ஞாயிறு மாலை 3 மணியளவில் ராமநாதபுரம் – தாம்பரம் ஒரு வழி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. திருச்சி சந்திப்பில் இருந்து, கார்ட் லைன் வழித்தடத்தில் செல்லும் இந்த ரயில் நவ.3 இரவு 11:40 மணியளவில் தாம்பரம் ரயில் நிலையம் சென்றடையும். இதன் முன்பதிவு இன்று(நவ.1) காலை 8 மணிக்கு துவங்குகிறது. தீபாவளி விடுமுறை முடிந்து ராமநாதபுரம், பரமக்குடியில் இருந்து சென்னை செல்வோர் இந்த ரயிலில் பயணிக்கலாம்.
தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.1) திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று(அக்.31) முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து கிடந்த கொடிகம்பத்தை அகற்றும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரமக்குடி சார்பு ஆய்வாளர் சரவணன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
➤எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள் வெடிக்கக் கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்த வேண்டும்
➤ வாளியில் தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்
➤ தீக்காயம் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்.
SHARE IT!
முத்துராமலிங்க தேவரின் 117 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 62 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று (அக்.30) பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் நடிகர் விஷால் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் இன்று(அக்.30) முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பாஜக முத்த தலைவர் ஹெச்.ராஜா கருப்பு முருகானந்தம் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.