India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புள்ளியியல் துறை வடிவமைத்த மாவட்ட அரசு அலுவலங்களின் தகவல் அடங்கிய புள்ளியியல் கையேட்டை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டார். இக்கையேட்டில் மாவட்ட மக்கள் தொகை, வேளாண்மை, நீர்பாசனம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், சுகாதாரம், கல்வி, மீன்வளம், தொலை தொடர்பு, உள்ளாட்சி, போக்குவரத்து, மாவட்ட வருவாய் மற்றும் அனைத்துத்துறை அலுவலகங்களின் தரவுகள் உள்ளது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஊழியர்கள் 89 பேரின் வருங்கால வைப்பு நிதியில் கடந்த 2019 இல் ரூ.91 லட்சம் மோசடி நடைபெற்றது. இதில் கோயில் முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் உட்பட 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது வழக்கை அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது 2025ல் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ளது. டாக்டர் அம்பேத்கர் விருதை பெறுவதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தாய் தந்தையரை இழந்த, இருவரில் ஒருவரை இழந்த, வருவாய் ஈட்டக்கூடிய தந்தை முடங்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நிதி உதவி அளித்து அவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் மாதம் ரூ.4 ஆயிரம் வழங்கும் மிஷன் வாத்சல்யா நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,330 குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்டுத்தரக்கோரியும் தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியும் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இன்று (நவ.12) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை சுதீர்லால் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கைக்கு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.12) நள்ளிரவு முதல் மழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.நாளை (நவ.13) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர பகுதிகளில் சற்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதிய பாம்பன் பாலத்தில் நவ.13, 14 ஆகிய 2 நாட்கள் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. நவ.13ஆம் தேதி மண்டபம் – பாம்பன் இடையே ரயில்வே வழித்தடத்திலும் நவ.14ம் தேதி புதிய பாம்பன் பாலத்திலும் ஆய்வு செய்கிறார். மேலும் நவ.14ம் தேதி புதிய பாம்பன் ரயில் பாலத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும்
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வி.வி.ஆர். நகரில் கருவாடு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கு தயாரிக்கப்படும் சீலா. ஊளி. நெத்திலி. வாளை உள்ளிட்ட கருவாடுகள் அண்டை மாவட்டங்களான மதுரை. சிவகங்கை. தேனி. விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சில்லறை வியாபாரிகள் கருவாடுகளை மொத்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 1.37 லட்சம் பரப்பளவில் நடப்பாண்டு சம்பா பருவ நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது பயிர் காப்பீடு பதிவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நவ.15 வரை காப்பீடு செய்ய அறிவித்த நிலையில் பட்டா சிட்டா அடங்கல் பெற காலதாமதமாவதால் நவ.30 வரை பதிவை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.