India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூட்டுறவுத்துறை சார்பில், 71 ஆவது கூட்டுறவு வார விழா இன்று(நவ.19) ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில் ரூ.10.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் இணைப்பதிவாளர் ஜினு உள்பட பலர் பங்கேற்றனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,19) 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.
இராமநாதபுரம் 1ன் கீழ் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி, சத்திரக்குடி ஆகிய வட்டாரங்களுக்கு எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லி.,நிறுவனம், 2-ன் கீழ் இராமநாதபுரம், திருப்புல்லானி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடாணை, நயினார்கோவில், மண்டபம் ஆகிய வட்டாரங்களுக்கு பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனத்திற்கும் அரசாணை வழங்கி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
இராமநாதபுரத்தில் இன்று (நவ.19) தமிழக பால் வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பரக்கத் திருமண மஹாலில் காலை 10 மணியளவில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு சங்க வார விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக 20 மீனவ பெண்கள் பழங்கள் விற்றனர். காலப்போக்கில் இவர்களுக்கு போட்டியாக 120க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாயுள்ளது. மேலும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் பைகள் தனுஷ்கோடி கடலோரம் வீசப்படுவதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ.22 அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பகுதியைச்சேர்ந்த காளீஸ்வரி என்பவர் பரமக்குடி ஜீவா நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி தைராய்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று(நவ.17) இரவு மர்மமான முறையில் தரைப்பாலம் வைகை ஆற்றில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் எமனேஸ்வரம் போலீசார்கள் காளீஸ்வரியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று(நவ.18) வடகிழக்கு பருவமழை காரணமாக 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்கள் தங்களது பணிகளை முன்னேற்பாடு செய்து கொள்ளவும். *பகிரவும்*
புதுடில்லி தேசிய பால பவனில் தேசிய குழந்தைகள் தினவிழா நவ.21, 22, 23 ல் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் சிலம்ப ஆசிரியர் ஆகாஷ் தலைமையில் மாணவர்கள் பிரகுல், ஹரி பிரித் திவிராஜ் கிஷோர், புகழ்மதி ஆகியோர் கலை நிகழ்வில் பங்கேற்க இன்று டில்லி புறப்பட்டனர். இவர்களை முன்னதாக ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.