India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச்.03) இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர், முதுவை பாரூக் விருப்பமனுவை வழங்கினர்.

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள எஸ்.கீரந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தூா்பாண்டி. விவசாயியான இவா் தனது சொந்த ஊரில் 120 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். அவ்வாறு வளர்க்கப்பட்ட செம்மறி ஆடுகளை நேற்று (மார்ச்.03) தெருநாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. தெருநாய்கள் கடித்து இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக மாவட்ட வனத்துறையின் சார்பில் பயணிகள் பேருந்து இயக்கம், விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக (தற்காலிக பணி) மாதம் ரூ.18,500 சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் ராமநாதபுரம் வன உயிரின கோட்டம் அலுவலகத்தை அணுக வேண்டும். (இராமேஸ்வரம் தீவு பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை) *SHARE

இன்று (மார்.03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

இராமநாதபுரம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: CLICK HERE.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..

மண்டபம், வாலந்தரவை ஊராட்சிக்குட்பட்ட வழுதூர் அருளொளி நகர் பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான சிமெண்ட் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். ராமேஸ்வரம் நேஷனல் ஹைவே இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. சாலை சீரமைக்கப்படாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.