Ramanathapuram

News November 24, 2024

ராமநாதபுரம்: நவ.25 & 26ல் கணிக்க முடியாத மழை

image

இராமநாதபுரம் மாவட்டம், சிறப்பு பதிவு நவ.26, நவ.27ல் ஏதாவது ஒரு நாள் இராமேஸ்வரம், பாம்பன் தங்கச்சிமடம், மண்டபம் மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் குறுகிய நேரத்தில் கணிக்க இயலாத அளவில் அதிக பட்ச மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை மிக அதிகமாக இருக்கும் என்பதால் மிகவும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும் வேண்டும் என எச்சரிக்கை எழுப்பப்பட்டுள்ளது

News November 24, 2024

இலங்கை அரசு மீது மீனவர் குற்றச்சாட்டு

image

இராமேஸ்வரத்தில் இருந்து மார்ச் 6 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற சூசை என்பவரது படகை சிறைபிடித்து 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 30 நாட்களுக்கு பின் 11 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுதலையாகி இராமேஸ்வரம் வந்த அந்தோணி கூறுகையில், சிறைக்காவலர்கள் இந்திய கைதிகளை மதிப்பதில்லை. சுகாதாரக்கேடான உணவு, குடிநீர் வழங்கி சித்ரவதை செய்தனர் என்றார்.

News November 23, 2024

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர்(விநியோகம்) அலுவலகத்தில் நவம்பர் 26 காலை 11 முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இராமநாதபுரம் கோட்டத்திற்குட்பட்ட மக்கள் மின் விநியோகம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என இராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர்(பொ) பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

News November 23, 2024

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(நவ 23) மற்றும் நாளை(நவ 24) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெறவும்.

News November 22, 2024

 சேதமான படகுகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் 

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நவ.19, 20 இல் கனமழை பெய்தது. இதனால் மண்டபம் வடக்கு கடலில் ஏற்பட்ட கடலரிப்பால் சேதமடைந்த விசைப்படகுகளை அமைச்சர்கள் ராமசந்திரன், ராஜகண்ணப்பன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இதில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், நவாஸ் கனி எம்பி, காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மீனவர் சங்க நிர்வாகிகள் ஜாகீர் உசேன், ஆசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News November 22, 2024

ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

image

வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு அமைத்து நேரடி ஆய்வுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மணிபாரதி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், “மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள், தமிழக பொதும்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை , தேனி , திண்டுக்கல், விருதுநகர் , ராமநாதபுரம் ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News November 22, 2024

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ நிவாரணம்

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டோர் பாம்பன், மண்டபம், சக்கரக்கோட்டை நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இதில் பாம்பனில் தங்கியுள்ள 50 குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ நேற்று (நவ.21) இரவு சந்தித்து ஆறுதல் கூறி, 1 மாதத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கினார். நவாஸ் கனி எம்பி, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News November 22, 2024

ராமேஸ்வரம் பகுதியில் விடுமுறை

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் செயல்படும் பள்ளிகளுக்கு இன்று(நவ.22) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News November 21, 2024

இராமநாதபுரம் மாவட்ட வானிலை நிலவரம்

image

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை முற்றிலும் நின்றுள்ளது. இனி வரும் நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை மாவட்டத்தின் உள்பகுதியில் பனிமூட்டத்துடன் கூடிய வறண்ட வானிலை நிலவக்கூடும். ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

News November 21, 2024

ராமநாதபுரம்: அவசர கால உதவி எண் வெளியீடு

image

ராமநாதபுரத்தில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு குறித்தும் மழைநீர் தேங்கி இருப்பது சம்பந்தமாக எதுவாகினும் மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் காலோன் அவசர கட்டுப்பாட்டு எண் 1077, 04567-230060 மற்றும் வாட்ஸ்அப் எண் 8300175888 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!