India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பொது சுகாதாரத்துறை மூலம் கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடிக்கும் பணி இன்று நடைபெற்றது. மேலும் மாவட்டத்தில் தொடர் மழையால் மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்று வராமல் இருக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிற்கிணங்க மாவட்ட பொது சுகாதார அலுவலர் அர்சுன்குமார் அறிவுரைப்படி 44 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட விவசாய பணிகளுக்கு நவ.மாதத்திற்கு தேவையான யூரியா 958.5 மெ.டன், KRIBHCO யூரியா 114.75 மெ.டன் உர மூடைகள் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 283.5 மெ.டன், தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 798.75 மெ.டன் அனுப்பப்பட்டுள்ளது. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் எச்சரித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் சுமார் 4 மணி நேரமாக ஏர்டெல் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் தற்போது மாவட்டம் முழுவதும் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் லேசான முதல் மிதமான மழை தொடரும். கனமழையை பொருத்தவரை ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோர பகுதியில் ஒரு சில இடங்களில் கன மழை பதிவாகலாம் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது
வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமா வலுப்பெறுகிறது. இதையடுத்து, ராம்நாடு, சிவகங்கை மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று(நவ.25) மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. SHARE IT.
திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தில் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு மின்கம்பங்கள் சாய்ந்தும் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர் என way 2 news இல் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக இன்று மின்துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் அனைத்து மின்கம்பங்களையும் சரிசெய்தனர்.
ராமேஸ்வரம் முதல் இலங்கை தலைமன்னார் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதால் அதற்கான இடம் ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் வள்ளலார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இராமேஸ்வரம் கடல் பகுதியில் சோதனை செய்தனர். ஏற்கனவே நாகை முதல் இலங்கை தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருவாடானை தாலுகாவில் இன்று 135 வாக்குச் சாவடிகளுக்கு 71 மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் 135 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் 13 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். முகாம்களில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை ஆர்வத்துடன் சேர்ப்பதற்கு உரிய படிவங்களை வழங்கினர். அதேபோல் திருத்தம் மற்றும் நீக்கம் போன்றவற்றிற்கும் பொதுமக்கள் மனு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.