Ramanathapuram

News November 28, 2024

இரவு ரோந்து அதிகாரியின் விவரம் வெளியீடு

image

இன்று (28.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2024

பாம்பன் பாலத்திற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி

image

பாம்பனில் புதியதாக கட்டப்பட்ட ரயில்வே பாலம் தரமற்று கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தெற்கு ரயில்வே அதற்கி விளக்கம் அளித்துள்ளது. பாலத்தின் வடிவமைப்புக்கு சென்னை, மும்பை ஐஐடி நிபுணர்கள் தர மதிப்பீடு வழங்கியுள்ளனர்.பாலத்தின் இணைப்பு வெல்டிங் தர சோதனை 100% சரிபார்க்கப்பட்டுள்ளது. எனவே பாம்பன் பாலத்துக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.

News November 28, 2024

ராமநாதபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்.

News November 28, 2024

பாம்பன் புதிய ரயில் பாலத்தை மறு ஆய்வு செய்ய எம்பி கடிதம்

image

பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் சமர்ப்பித்த ஆய்வறிக்கை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. பாலத்தின் தரத்தை மறு ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்து, பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ரயில்வே துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

News November 28, 2024

மோர்ப்பண்ணை கிராமத்தில் கனமழைக்கு வீடு இடிந்து சேதம்

image

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டபொம்மன் என்பவர் மகன் குமார். இவருக்கு சொந்தமான மண் சுவர் ஓட்டு வீடு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இடிந்து சேதமடைந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.

News November 27, 2024

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(நவ.27) மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று பொது மக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஏராளமானோர் வருகை தந்து புகார் மனு அளித்தனர்.

News November 27, 2024

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்ககடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் எதிரொலியாக ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியில் மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து பனிமூட்டமாக வானிலை நிலவி வருகிறது. தற்போது பாம்பனில் உள்ள கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு திடீர் காற்றோடு மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 27, 2024

மின்கம்பிகளில் சேதம் குறித்து தெரிவிக்கலாம் – ஆட்சியர் தகவல்

image

பரமக்குடி கோட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பரமக்குடி சார் ஆட்சியர் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கனமழை மற்றும் புயல் காற்றினால் மரங்கள் சாய்ந்து மின்சாரம் தடைபடும் மின்கம்பங்கள் சாய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது மற்றும் மின்சார கம்பிகளில் ஏதாவது பிரச்சனைகள் என்றால் 04564-224151 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியை தெரிவித்துள்ளார்.

News November 27, 2024

தங்கச்சிமடதில் அதிக மழை பதிவு 

image

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நேற்று(நவ.26) இராமேஸ்வரம் தீவில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக நகர்ந்து வருவதையொட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சிமடத்தில் 62.2 மிமீ மழையும் தீர்த்தண்டாதனம் 48.60,இராமேஸ்வரம் 48, பாம்பனில் 46.1, வட்டனம் 45.20, மண்டபம் 44.80, திருவாடானை 37 மிமீ மழை பதிவாகி உள்ளது.

News November 27, 2024

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 75 கிமீ வேகத்தில் ரயில் இயக்க அனுமதி

image

பாம்பன் ரயில் பாலத்தில் 75 கிமீ வரை ரயிலை இயக்கலாம் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. பாம்பன் கடலில் 550 கோடி செலவில் இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் கட்டப்பட்டது. கப்பல் வந்து செல்வதற்கு வழி விடும் லிப்ட் வடிவத்தில் இயங்கும் இந்த செங்குத்து பாலம் இந்தியாவின் முதல் பாலமாகும். பயணிகள் ரயிலை 75 கிமீ வரையும் செங்குத்து பாலத்தில் 50கிமீ வரையும் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!