India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (49). இவரது மனைவி கோட்டை ஈஸ்வரி (41) இவருக்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்திகுமார் பிஜியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது லட்சுமணனுக்கு தெரியவர, ஈஸ்வரி லட்சுமணனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளார். இது தெரிந்த லட்சுமணன் எஸ்.பி.யிடம் புகார் அளித்ததையடுத்து கோட்டை ஈஸ்வரி, கெளதம், பிரதீபன் ஆகியோரை கைது செய்து பிஜியை தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான பெய்த மழை அளவு விவரத்தினை ராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மண்டபம் 87 மி.மீ மழை அடுத்தபடியாக ராமேஸ்வரத்தில் 80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மொத்த சராசரியாக மாவட்டத்தில் 46 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரத்தில் நேற்று தொடங்கிய மழை இன்னும் ஓயவில்லை. இன்றும் காலையும் மழை பெய்தது. அடுத்து வரும் மணி நேரங்களிலும் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், வாலிநோக்கம், கீழக்கரை, சாயல்குடி, கடலாடி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. (கனமழை பகுதியில் உள்ள மக்களுக்கு பகிரவும்)
மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இன்று (ஜன.19) இரவு 10 மணியளவில் மண்டபத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இராமநாதபுரம், பரமக்குடி ,மானாமதுரை, சிவகங்கை, கல்லல் ,காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி தஞ்சை ,கும்பகோணம்,மயிலாடுதுறை,சீர்காழி,சிதம்பரம்,கடலூர், பண்ருட்டி, விழுப்புரம் ,திண்டிவனம் ,மேல்மருவத்தூர்,செங்கல்பட்டு ,தாம்பரம்,மாம்பழம் வழியாக எழும்பூர் சென்றடையும்.
பழைய பாம்பன் ரயில் பாலம் உப்புக்காற்றில் துருப்பிடிப்பதை தடுக்க அலுமினிய பெயிண்ட் பூசாமலும் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பின்றியும் உள்ளதால் தினமும் வீசும் உப்பு காற்றில் தூக்கு பாலத்தின் இரும்பு தூண்கள் துருபிடித்து எலும்பு கூடாக மாறியுள்ளது. ராமேஸ்வரத்தின் அடையாளச்ச சின்னமாக விளங்கும் 111 வயதான இந்த பாலத்தை வரலாற்று நினைவுச் சின்னமாகவும் பாதுகாத்து பராமரிக்க சமூக ஆர்வலர்கள கோரிக்கை விடுத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.18) இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு 100 ஐ அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வாலிநோக்கம், முந்தல், மாரியூர், நரிப்பையூர், ரோஸ்மா நகர் உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடற்கரை கிராமங்களில் ஆழ்கடல் பகுதிகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மணிச்சிங்கி. கிளிச்சிங்கி. தாளிச்சிங்கி இறால்கள் ரூ.2000 முதல் ரூ.5000 வரை எடைக்கேற்ப விற்பனையாவதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் சுவை மிக்க இந்த வகை மீன்களுக்கு வெளிநாடுகளில் மவுஸ் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.18) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் 5 பேர் குழு ஜன.,10,11ல் புதிய பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர். இதையடுத்து புதிய பாலம் விரைவில் திறக்கப்படும். ரயிலில் பயணிக்கலாம் என பயணிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.இந்நிலையில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்கு ராமேஸ்வரம் செல்லாது என ரயில்வே அறிவித்தது. இதனால் பாம்பன் பாலம் திறப்பு தள்ளிபோனது. புதிய ரயில் துாக்கு பாலத்திற்கு என்னாச்சு என தெரியாமல்
மக்கள் குழம்பியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு சரவணன் தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியாமல் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த முடியவில்லை அதனால் தான் பணி செய்ய முடியவில்லை என உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.இந்த நிலையில் இன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு ராமநாதபுரம் டிஐஜி அபிநவ் குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.