Ramanathapuram

News February 18, 2025

இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி கண்டனம்

image

ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தனது X தளத்தில்: விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது பாஜக அரசின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அராஜக செயல். இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டு போர் விமானத்தில் கைதிகளைப் போல அழைத்துவரப்பட்ட போது வராத கோபம், ஒரு பத்திரிக்கை வெளியிட்ட கேலி சித்திரத்தின் மூலம் வருகின்றது என்றால் பாஜக அரசு எப்படிப்பட்டது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

News February 18, 2025

ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்

image

விகடன் குழுமத்திற்கு ஆதரவாக இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: நூறாண்டுகள் பழமையான விகடன் குழுமத்தின் இணையதளம் முடக்கம் கருத்து சுதந்திரத்திற்கு போடப்பட்ட தடையாக கருதுகிறோம். விளிம்பு நிலையில் உள்ள பொது மக்களுக்கு ஆதரவாக கருத்து சுதந்திரம் காத்து நாட்டின் வளர்ச்சிக்கு நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகை தர்மத்திற்கு இடையூறாக இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

News February 17, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News February 17, 2025

நில அளவர், வரைவாளர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு

image

டிப்ளமோ, ஐடிஐ படித்தோருக்கு ஒருங்கிணைந்த நில அளவர், வரைவாளர் பணிக்கு TNPSC சார்பில் ராமநாதபுரம் நகர் நெக்ஸான் என்டர்பிரைசஸ் சென்டரில் தொழில்நுட்ப தேர்வு இணையவழியில் இன்று (பிப்.17) நடந்தது. இத்தேர்வை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். இத்தேர்விற்கு விண்ணப்பித்த 437 பேரில் 156 பேர் மட்டும் இணைய வழி மூலம் தேர்வெழுதினர்.

News February 17, 2025

திரிபுரா மாநில ஆளுநருக்கு கலெக்டர் வரவேற்பு

image

திரிபுரா மாநில ஆளுநர் ஸ்ரீ இந்திரசேன ரெட்டி நல்லு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (பிப்.17) வருகை புரிந்துள்ளார். ஆளுநர் ஸ்ரீ இந்திரசேன ரெட்டி நல்லுவை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இவரது வருகையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News February 17, 2025

இராமநாதபுரம் மாவட்ட நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்

image

இன்று (17.02.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், திருவாடனை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

தொண்டி அருகே ஊரணியில் மிதந்த இளைஞர் சடலம்

image

திருவாடானை தாலுகா பனஞ்சாயல் ஊராட்சிபுதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் மகன் முருகானந்தம்(36) . இவர் நேற்று காலை புதுக்குடி கிராமத்தில் உள்ள ஊரணியில் இறந்த நிலையில் சடலமாக தண்ணீரில் மிதந்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை ,காவல்துறையினர் அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News February 16, 2025

தொண்டி அருகே ஊரணியில் மிதந்த இளைஞர் சடலம்

image

திருவாடானை தாலுகா பனஞ்சாயல் ஊராட்சிபுதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் மகன் முருகானந்தம்(36) . இவர் இன்று காலை புதுக்குடி கிராமத்தில் உள்ள ஊரணியில் இறந்த நிலையில் சடலமாக தண்ணீரில் மிதந்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை காவல்துறையினர் அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News February 16, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப்.16) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!