India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு ராமநாதபுரத்தில் பிப்.20, 21ல் நடந்தது. இதில் பல மாவட்டங்களில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நேற்று மதியம் நடந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் இருதரப்பினரிடையே திடீரென கைகலப்பு, மோதல் ஏற்பட்டதால் நேற்று நடக்க இருந்த பொது மாநாடு, ஊர்வலம் ரத்து செய்யப்பட்டன.
உலகெங்கிலும் இஸ்லாமிய மக்கள் ரமலான் காலங்களில் 30 நாட்கள் உண்ணாமல் பருகாமல் இறை வழியில் செயல்படுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் மாதம் 2ம் தேதி ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியன் உதயம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் வரையில் நோன்பு இருப்பது கட்டாயம். அதனால் ஒவ்வொரு பகுதியிலும் நேரம் மாறுவதால் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இந்த வருடத்திற்கான நோன்பு கால அட்டவணை வெளியீடு.
உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும் சிவன் கோயில்தான் உலகில் தோன்றிய முதல் சிவன் கோயில். ராமாயண காலத்திற்கு முன்பே இந்த கோவில் உள்ளது. இதனை ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது’ என்ற சொல் மொழியின் மூலமாக அறியலாம். உலகில் இங்குள்ள எந்த சிவன் கோயிலிலும் சிவனுக்கு தாழம்பூ வைத்து பூஜிக்கப்படுவதில்லை. இங்கு மட்டும் சிவனுக்கு தாழம்பூவைக் கொண்டு அர்ச்சனை நடக்கிறது. நடராஜர் திருமேனி, மரகதத்தால் ஆனது.
பேய் வலை என்றழைக்கப்படும் கழிவு வலைகள், கயிறுகளை நடுக்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் அதனை சேகரித்து கரைக்கு கொண்டு வர நேற்று சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் வேல்விழி, தங்கச்சிமடத்தில் 60 படகுகளின் உரிமையாளர்களுக்கு மரபெட்டிகள் வழங்கினார். இந்நிகழ்வில் மீனவர் சங்கத் தலைவர்கள் சகாயம், எமரிட், ஜாகிர்உசேன், முகமது சுல்தான் உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை 21/2/2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. வேலை நாடுனர்கள் ஒரிஜினல் மற்றும் அசல் கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் சுய விபர குறிப்புடன் கலந்துகொள்ளலாம். *ஷேர் செய்யுங்கள்
கீழப்பார்த்திபனுாரில் கி.பி.13 or 14ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் பட்டீஸ்வரமுடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஒரு கால பூஜை திட்டத்தில் வருகிறது.
கோயிலின் சுற்றுப்பகுதி 6 அடி வரை மண்ணில் புதைந்துள்ளது. இதனை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின் தொல்லியல் துறை சார்பில் புதைந்த கோயிலின் பகுதிகளை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கின்றனர்.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று(பிப்.20) அதிகாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும். அதனைத்தொடர்ந்து சாயரட்சை பூஜை நடைபெற்று பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி அம்பாள் கெந்தமாதன மண்டகபடிக்கு புறப்பாடு ஆனவுடன் காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை கோவில் நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
இன்று (பிப்.19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் சிகில் ராஜா வீதியில் விவேகானந்தர் நினைவு தூண் உள்ளது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வமய மாநாட்டில் கலந்து கொண்ட பின் 29.01.1897 அன்று மாநாட்டில் இருந்து இராமநாதபுரம் வருகை தந்ததிற்கு நினைவாக இந்த தூண் பாஸ்கர சேதுபதி மன்னரால் நிறுவப்பெற்றது. இது பாரம்பரிய மற்றும் சமய நல்லிணக்க சின்னமாக இன்றும் திகழ்கிறது. இத பத்தி இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன் அப்டீன்னா Comment பண்ணுங்க.
ராமநாதபுரம் மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை 21/2/2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. வேலை நாடுனர்கள் ஒரிஜினல் மற்றும் அசல் கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் சுய விபர குறிப்புடன் கலந்துகொள்ளலாம். *ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.