India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 32 பேர் & 5 விசைபடகுகளை இலங்கை கடற்படையினா் பிப்.22 நள்ளிரவு கைது செய்தனா். இதை அடுத்து, ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், 32 பேர் உட்பட கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று முதல் வேலை நிறுத்தம் செய்வது என, தீர்மானம் நிறைவேற்றினர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.23) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
முதுகுளத்துார் புளியங்குடியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி பிப்.,18ல் மாயமானார். போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்த போது முதுகுளத்துார் ஆதனக்குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்திச் சென்றது தெரிய வந்தது. அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினார்.
இலங்கை மன்னார் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 5 விசைப்படகுகளில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை சிறை பிடித்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சி கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வைரவனேந்தலைச் சேர்ந்தவர் சரவணன்(29) மனைவி பாக்கியலட்சுமி(25) உடன் ஸ்ரீராம் நகரில் வசித்தார். கணவருடன் தகராறு ஏற்பட்டதையடுத்து பாக்கியலட்சுமி நேற்று முன்தினம் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சரவணன், போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், இடையர்வலசை ஊருணியில் பாக்கியலட்சுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். பஜார் போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிந்துள்ளனர்.
இன்று (பிப். 22) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய உட்பட்ட பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் அவர்களிடமிருந்து 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப்.22) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவை காண விரும்பும், ரயில் பிரியர்கள், ரயில் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் வசதிக்காக திறப்பு விழா நாளில் திருச்சி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்க மதுரை கோட்ட மேலாளருக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது. மார்ச் 03 (அ) 04 ல் பாம்பன் செங்குத்து தூக்கு பாலம், ராமேஸ்வரம் ரயில் முனையம் பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என கூறப்படுகிறது.
காணாமல் போனவர் ஊரணியில் சடலமாக மிதப்புபரமக்குடி அருகே போகலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக ஊர் மக்கள் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று முதலூர் கிராம ஊரணியில் சடலமாக மிதந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்கள் அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.