Ramanathapuram

News April 2, 2025

நினைத்தை நிறைவேற்றும் நவபாஷாண நவக்கிரக கோயில்

image

கடலுக்குள் இருக்கும் தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகங்கள் உள்ள தலத்தில் நீராடினால் மிகவும் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், களத்திர தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், பிதுர் தோஷம், ஆயுள் தோஷம், நட்சத்திர தோஷம், சனி தோஷம், பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளிட்டவை நீங்கி நினைத்தது நிறைவேறும். இதை SHARE பண்ணுங்க.

News April 2, 2025

ராமநாதபுரத்தில் வேலை வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 விற்பனையாளர் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குஇ 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும் . விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 15க்குள் விண்ணப்பம் செய்யுங்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்கள்.

News April 2, 2025

ரயிலில் 20 கிலோ கஞ்சாவுடன் இருவர் சிக்கினர்

image

சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் முன்பதிவில்லா பெட்டியில் திருச்சி-மண்டபம் வரை பயணித்த பயணிகளின் உடைமைகளை போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனை செய்தனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதேஷ் மொகாந்தி 28, பிரியா பாரத் மொகாந்தி 40 ஆகியோரின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்பொழுது இருவரிடமும் 19.700 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இருவரையும் போதைப் பொருள் தடுப்பு போலீசில் ஒப்படைத்தனர்.

News April 2, 2025

சிறுமிக்கு பாலியல் கொடுமை அளித்த தாய் உட்பட 3 பேர் கைது

image

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி தனக்கு பாலியல் தொல்லைகள் நடந்ததாக ஆசிரியரிடம் கூறியுள்ளார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியின் தாயுடன் பழக்கத்தில் இருந்த நவீன்(21) என்ற கல்லூரி மாணவன் சிறுமியின் தாயின் உடந்தையுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பரத்(19) என்ற மற்றொரு மாணவரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் சிறுமியின் தாய் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News April 2, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஏப்ரல்.01) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News April 1, 2025

செகந்திராபாத் – ராமநாதபுரம் வார ரயில் ஏப்.30 வரை நீட்டிப்பு

image

செகந்திராபாத் – ராமநாதபுரம் (வ.எண் 07695) வாராந்திர ரயில் சேவை புதன் கிழமைகளில் (விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி) வழியாக நாளை (ஏப்.02) முதல் ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர ரயில் வெள்ளிக்கிழமைகளில் (வ.எண் 07696) ஏப்.4 முதல் மே 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2025

பிரதமர் வருகை – மீன் பிடிக்க தடை  

image

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்.6ல் திறந்து வைக்க உள்ளார். இதன் பாதுகாப்பு கருதி மண்டபம் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கு ஏப். 4, 5, 6ல் மீன்பிடி அனுமதி சீட்டு நிறுத்த கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தல் படி 3 நாட்களுக்கு மீன் பிடி அனுமதிச்சீட்டு நிறுத்தப்படுகிறது. இவ்வாறு மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

ராமநாதபுரத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

ராமநாதபுரத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

image

ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் உள்ளநீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப்.01 – ஏப்.13, இரண்டாம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, முன்றாம் தொகுப்பு ஏப்.29 – மே11, நான்காம் தொகுப்பு மே.13 – மே.25, ஐந்தாம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 99766 91417 தொடர்பு கொள்ளலாம்.

News April 1, 2025

ராமநாதபுரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

image

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் ராமநாதபுரம் உள்ளிட்ட 46 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதில் ராமநாதபுரத்தில் போகலூர், புலியால் அருகே கோடிக்கோட்டை, வென்னத்தூர் சுங்கச்சாவடிகளில் வாகன நுழைவு கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!