Ramanathapuram

News April 5, 2025

பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை 4000 போலீசார் பாதுகாப்பு

image

பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைத்து புதிய ரயில் போக்குவரத்தையும் துவக்குகிறார். இதற்காக இலங்கையிலிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நாளை காலை 11:50 மணிக்கு வந்திறங்குகிறார்.பின் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 4000 போலீசார் ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

News April 4, 2025

ராமநாதபுரத்தில் நேற்று பெய்த மழையின் அளவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.03) காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இராம்நாடு 08 மில்லி மீட்டர், மண்டபம் 14 மில்லி மீட்டர், இராமேஸ்வரம் 25.10 மில்லி மீட்டர், பாம்பன் 20.60 மில்லி மீட்டர், தங்கச்சிமடம் 83.20 மில்லி மீட்டர், திருவாடானை 21.20 மில்லி மீட்டர், தொண்டி 2.60 மில்லி மீட்டர், ஆர்.எஸ் மங்கலம் 40.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News April 4, 2025

ராமநாதபுரம் மக்களே தயாரா… சென்னைக்கு புதிய ரயில்

image

சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இரண்டு தினசரி ரயில் சேவைகள் இயங்குகிறது. இந்நிலையில் மூன்றாவதாக சென்னைக்கு ஒரு புதிய இரவு ரயில் சேவை அறிமுகமாகிறது. பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வண்டி எண்: 16103/16104 தாம்பரம்-ராமேஸ்வரம் சேவையை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. இன்று இந்த வண்டிக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. மக்களே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.

News April 4, 2025

பாம்பன் பாலம் திறப்பு விழா அழைப்பிதழ்

image

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாம்பன் இணைப்பு இரயில்வே பாலம் ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி திறக்க உள்ளார். அதன் அழைப்பிதழ் போக்குவரத்து அமைச்சகத்தால  வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.உங்க ஊர் பெருமையா நீங்கதான் சொல்லணும். #SHARE ALL

News April 3, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

image

இன்று (ஏப்ரல். 03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News April 3, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர், மங்களநாயகி கும்பாபிஷேக விழா நாளை (ஏப்.04) நடைபெற உள்ளது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடுகட்டும் விதமாக மே.10ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

News April 3, 2025

ஆங்கில தேர்வில் 348 பேர் ஆப்சென்ட்

image

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஆங்கிலப்பாடத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 348 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28 ல் துவங்கி ஏப்-15 வரை நடக்கிறது.16 ஆயிரத்து 399 மாணவர்கள், தனித் தேர்வர்களாக 249 பேர் என 16 ஆயிரத்து 648 பேர் தேர்வு எழுதுகின்றனர். நேற்று (ஏப்ரல்-02) நடந்த ஆங்கிலப்பாடத்தேர்வில் 348 பேர் பங்கேற்கவில்லை.

News April 3, 2025

ராமநாதபுரம் -செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

image

செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரயில் சேவை மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து ஏப்.2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

News April 3, 2025

ராமநாதபுரம்: வேலை வாய்ப்பு முகாம்

image

ராமநாதபுர மக்களே டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9-ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் விருதுநகர்,ராமநாதபுரம் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் டிகிரி, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் அழைக்கலாம். SHARE செய்து உதவவும்

News April 3, 2025

மூதாட்டி இறப்பில் மர்மம்

image

திருவாடானை பகுதியை சேர்ந்தவர் சிங்காரம் இவருக்கு இரு மனைவிகள்.இதில் வீரம்மாள் முதல் மனைவி. வள்ளி இரண்டாவது மனைவி. சிங்காரம் இறந்து விட்டதால் வீரம்மாள், அவரது தங்கை பரிமளத்துடன் வாழ்ந்து வந்தார்.நேற்று முன்தினம் வீரம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்ற போது இரண்டாவது மனைவி வள்ளியின் மகன் சி+ன்னத்தம்பி இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார்.

error: Content is protected !!