Ramanathapuram

News March 2, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று(மார்ச்.2) பெய்த மழையில் அதிகபட்சமாக ராமேஸ்வரம் பகுதியில் 10 செ.மீ அளவிற்கு கனமழை பதிவாகியுள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் மாவட்டத்தின் உள்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் கடலோரப் பகுதிகளில், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என இராமநாதபுரம் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. *ஷேர்

News March 2, 2025

ராமநாதபுரம் வந்த ஆளுநருக்கு கலெக்டர் வரவேற்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (02.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் செல்லும் ஆளுநர் அங்கு ராமநாதசாமி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார்.

News March 2, 2025

2 ஆண்டுக்கு பின் பாம்பன் துாக்கு பாலத்தில் வர்ணம்

image

பாம்பன் கடலில் உள்ள ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால் (2022) டிச.23ல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சில நாட்களாக துாக்கு பாலத்தில் உள்ள இரும்பு துருவை ரயில்வே ஊழியர்கள் அகற்றி துாக்கு பாலத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் உப்புக்காற்றில் துருப்பிடிக்காத ரசாயனம் கலந்த வர்ணம் பூசும் பணி நடக்கிறது.

News March 2, 2025

ராமேஸ்வரம் வரும் தமிழக ஆளுநர்

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(மார்ச்.2) ராமேஸ்வரம், செம்மமடம் பகுதியில் உள்ள மனோலோயா காப்பகத்தினை திறந்த வைக்க வருகைதர உள்ளார். இதற்காக காலை 10:30 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வருகை தந்து மனோலயா காப்பகத்தினை திறந்து வைத்து விட்டு, பின்பு ராமநாதபுரத்தில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

News March 1, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (மார். 01) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 1, 2025

ராமநாதபுரம் வரலாறை தெரிஞ்சிக்கோங்க

image

ராமநாதபுரம் பாண்டியர், சோழர், இஸ்லாமியர், நாயக்கர் மற்றும் சேதுபதி மன்னர்களால் ஆளப்பட்டுள்ளது. அன்றைய நாளில் இப்பகுதி நாடு, வளநாடுகளாக பிரக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதுகுளத்தூர் வட்டம்-வடதலைச் செம்பிநாடு, ராம்நாடு வட்டம்- கீழச் செம்பிநாடு, செவ்விருக்கை நாடு, கமுதி வட்டம்-பொலீயூர் நாடு, பரமக்குடி வட்டம்-கைக்கை நாடு, திருவாடானை வட்டம் – இடையளநாடு, தழையூர் நாடு என இருந்துள்ளன. நீங்கள் எந்த நாடு?

News March 1, 2025

ராமநாதபுரத்தில் அதிக மழை பெய்யும் இடங்கள்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக இராமேஸ்வரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பெய்து பதிவாகியுள்ளது. இன்றும் மாவட்டத்தில் பிற்பகல் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர ஒட்டிய இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தொண்டி, பரமக்குடி, கமுதி, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 1, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 01) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 1, 2025

பள்ளிக்கு கழிப்பறை கட்டி தந்த தலைமை ஆசிரியர்

image

திருவாடானை தாலுகா அலுவலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில், 62 மாணவர்கள் படிக்கின்றனர். 100 ஆண்டுகளை கடந்த இப்பள்ளியில் அடிப்படை வசதியான கழிப்பறை, குடிநீர் வசதியில்லை என கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்தும் பயனில்லை. கழிப்பறை செல்ல முடியாத சூழலால் மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைமை ஆசிரியர் கதிரவன், தன் சொந்த பணம், ரூ.65,000 செலவில் கழிப்பறை வசதி செய்து கொடுத்துள்ளார்.

News March 1, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு; 2 பேர் பணி நீக்கம்

image

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மெர்லின் டார்லிங் கூறுகையில்; அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு திடீர் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி, கமுதக்குடி, தடுத்தலான்கோட்டை கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் (பிப்.28) பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சிக்கல் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு உள்ளதாக என விசாரணை நடைபெறும் என்றார்

error: Content is protected !!