Ramanathapuram

News February 28, 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் – கலெக்டர் தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி 2024-2025 நெல் கொள்முதலுக்காக தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் NCCF மூலமாக விவசாயிகள் விளைவிக்கும் நெல்லினை நேரடியாக கொள்முதல் செய்யும் பொருட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் இன்று தெரிவித்துள்ளார்.

News February 28, 2025

ராமநாதபுரத்தில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.

image

தமிழகத்தில் ராமநாதபுரம் உட்பட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ,விருதுநகர், குமரி, நெல்லை,தூத்துக்குடி உட்பட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News February 27, 2025

ஏர்வாடி தர்ஹாவுக்கு போங்க.. இது குணமாகும்

image

இராமநாதபுரம் ஏர்வாடியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற செய்யது இப்ராஹிம் தர்கா. இங்கு நடத்தப்படும் சந்தனக்கூடு விழா இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்தும் சமூக நல்லிணக்க விழாவாக திகழ்கிறது. இந்த தர்ஹா 1207ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பால் கட்டப்பட்டது. இங்கு மனநோயாளிகள் மனச்சோர்வு குணமாக்கப்படுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டு பக்தர்களை விட‌ கேரள பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

News February 27, 2025

ராமநாதபுரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு 

image

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஸ்ரீ ஞானேஷ்குமார் தலைமையில் ராமநாதபுரத்தில் தேர்தல் மேலாண்மை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News February 27, 2025

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, மதுரை ஆகிய 10 மாவட்டங்களுக்கு நாளையும் (பிப்.28), குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை மறுநாளும் (மார்ச்.1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News February 27, 2025

இராமநாதபுரம்: TNPSC GROUP- 4 முழு மாதிரி தேர்வுகள்

image

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மாதிரி தேர்வுகளாக மார்ச் மாதம் – 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் பங்கு பெறுபவர்கள் நேரிலோ அல்லது தொலைபேசியில் முன்பதிவு செய்து பங்கு பெறலாம். *மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 27, 2025

இராம்நாடு மக்களே..! அடுத்த மூன்று நாட்கள் கவனம்‌

image

தமிழகத்தில் இன்று (பிப்.27) முதல் வரும் ஞாயிறு வரை மழை நீடிக்கும் என தனியார் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் கன முதல் மிக கனமழையும், குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி,தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் மழை தீவிரமடையும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆகவே ராமநாதபுரம் மக்கள் 3 நாட்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். *ஷேர்

News February 27, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று(பிப்.26) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 26, 2025

ரயில் இன்ஜின் மோதி மீனவர் உயிரிழப்பு

image

மண்டபம் மேற்குத் தெருவை சேர்ந்த சீனி மகன் மைதீன் பிச்சை(38). மீனவரான இவர் நேற்று (பிப்.25) இரவு மண்டபம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அது வழி சென்ற ரயில் இன்ஜின் மைதீன் பிச்சை மீது மோதியதில் 2 கால்கள் துண்டாகின. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 26, 2025

ராமேஸ்வரம் கோவிலில் வேலை உடனே அப்பளை பண்ணுங்க

image

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் வாட்ச்மேன், ஸ்லீப்பர், சானிட்டரி ஒர்க்கர், என மொத்தம் 76 காலி பணியிடங்கள் உள்ளன, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .இந்த வேலைக்கான கடைசி நாள் பிப்ரவரி 12-ஆம் தேதி ஆகும். தகுதியானவர்களுக்கு சம்பளமாக 10,000 முதல் 58,600 வரை வழங்கப்பட இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு <>இங்கே <<>>க்ளிக் செய்யவும்

error: Content is protected !!