Ramanathapuram

News March 4, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (மார். 03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 3, 2025

கமுதி கோட்டையின் வரலாறு

image

17ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர் உடையத்தேவர், பிரான்ஸ் நாட்டு பொறியாளர் உதவியுடன் குண்டாற்றின் கரையில் கமுதி கோட்டையை கட்டினார். அதனால் இப்பகுதி கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது. இக்கோட்டையிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதன் வாயிற்பகுதி சிமெண்ட் கற்களால் அடைக்கப்பட்டுள்ளது. *ஷேர் செய்யுங்கள்

News March 3, 2025

அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 48 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <>லிங்கை<<>> கிளிக் செய்து உடனே விண்ணப்பியுங்கள். உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க.

News March 3, 2025

நகை திருடிய பெண் கைது

image

திருவாடானை சேர்ந்தவர் சின்னப்பொன்னு 25. நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலிருந்து தொண்டிக்கு பஸ்சில் சென்றார். அவருடைய குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிராம் தாயத்து, பர்சிலிருந்த ரூ.5000 திருடு போனது.அப்போது பஸ்சிலிருந்து இறங்கி தப்பிக்க முயன்ற பெண்ணை மற்ற பயணிகள் பிடித்தனர். விசாரணையில் பேராவூரணியை சேர்ந்த தேன்மொழி 55, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து பணம், நகையை கைப்பற்றினர்.

News March 2, 2025

டிராக்டர் ஓட்டும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் ஓட்டும் பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. 22 நாள் நடைபெறும் இப்பயிற்சியில் 25 பேர் கலந்து கொள்ளலாம். இதில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94436 77046, 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 2, 2025

தங்கச்சிமடத்தில் இரவு வெளுத்து வாங்கிய மழை

image

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இரவு கனமழை பெய்தது. அதில் தங்கச்சிமடத்தில் அதிகளவில் மழை பதிவாகி உள்ளது. அதன் விவரங்கள் மிமீ -ல் பின்வருமாறு, தங்கச்சிமடத்தில் -85.20 மிமீ, பாம்பன் -26.70, ராமேஸ்வரம்- 97.40, ராமநாதபுரம் -15.00, மண்டபம்- 15.20, கீழக்கரை- 2.50, திருவாடானை- 3.80, தொண்டி -2.40, முதுகுளத்தூர் -10, கமுதி- 25.40, கடலாடி-15.20, வாலிநோக்கம்-11மி.மீ மழை பதிவாகியுள்ளது.

News March 2, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று(மார்ச்.2) பெய்த மழையில் அதிகபட்சமாக ராமேஸ்வரம் பகுதியில் 10 செ.மீ அளவிற்கு கனமழை பதிவாகியுள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் மாவட்டத்தின் உள்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் கடலோரப் பகுதிகளில், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என இராமநாதபுரம் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. *ஷேர்

News March 2, 2025

ராமநாதபுரம் வந்த ஆளுநருக்கு கலெக்டர் வரவேற்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (02.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் செல்லும் ஆளுநர் அங்கு ராமநாதசாமி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார்.

News March 2, 2025

2 ஆண்டுக்கு பின் பாம்பன் துாக்கு பாலத்தில் வர்ணம்

image

பாம்பன் கடலில் உள்ள ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால் (2022) டிச.23ல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சில நாட்களாக துாக்கு பாலத்தில் உள்ள இரும்பு துருவை ரயில்வே ஊழியர்கள் அகற்றி துாக்கு பாலத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் உப்புக்காற்றில் துருப்பிடிக்காத ரசாயனம் கலந்த வர்ணம் பூசும் பணி நடக்கிறது.

News March 2, 2025

ராமேஸ்வரம் வரும் தமிழக ஆளுநர்

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(மார்ச்.2) ராமேஸ்வரம், செம்மமடம் பகுதியில் உள்ள மனோலோயா காப்பகத்தினை திறந்த வைக்க வருகைதர உள்ளார். இதற்காக காலை 10:30 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வருகை தந்து மனோலயா காப்பகத்தினை திறந்து வைத்து விட்டு, பின்பு ராமநாதபுரத்தில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

error: Content is protected !!