Ramanathapuram

News March 5, 2025

ராமநாதபுரம் மக்களே! இந்த கோவிலுக்கு செல்லுங்கள்

image

ராமநாதபுரம், தேவிப்பட்டிணத்தில் உள்ள நவபாஷாண நவகிரக கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. இங்கு ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவகிரகம் கடல் அலையை பொருத்து கடலில் சிறிதோ, முழுமையாகவோ மூழ்கி இருக்கும். களத்திர தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், பிதுர் தோஷம், ஆயுள் தோஷம், நட்சத்திர தோஷம், சனிதோஷம், பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க இக்கோவிலுக்கு செல்லலாம். *நண்பர்களுக்கு பகிரவும்

News March 5, 2025

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.5) நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்: நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை மற்றும் கீழக்கரை ஆகிய பகுதிகளில் நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் அழைப்பு எண் 83000 31100அல்லது 100 அணுகவும்.

News March 5, 2025

உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

image

உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சிவன் கோயில், பழமையும் புரதான சிறப்பும் பெற்றது. இதிகாசத்துடன் நெருங்கிய தொடர்புள்ள இக்கோயில் ஆதி சிவன் கோயில் என அழைக்கப்படுகிறது. 2010 ல் ராஜகோபுரம் & அம்மன் கோபுரங்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மங்களநாதர் சன்னதியில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்.,4 கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனை *ஷேர் செய்து நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

News March 5, 2025

மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

image

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஐந்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று(மார்ச்.04) தற்காலிகமாக காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை பிறருக்கு தெரிவிக்க இதனை ஷேர் செய்யுங்கள்

News March 4, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 04) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 4, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தின் காலநிலை நிலவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையுடன் வெப்பநிலை உயர்ந்து காணப்படும். அடுத்த 5 நாட்களுக்கு பகல் நேர வெப்ப நிலையானது இயல்பை விட 2டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 36டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

News March 4, 2025

ராமநாதபுரத்தின் குஷி கடற்கரை

image

இராமநாதசுவாமி கோவிலில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அரியமான் கடற்கரை (எ) குஷி கடற்கரை. 150 மீ அகலமும், 2 கி.மீ நீளமும் உடைய அரியமான் கடற்கரையில் குறைந்த உயரத்தில் அலைகள் எழும்புவதால், பலரும் விரும்பி குளிக்கின்றனர். மேலும் இந்த கடற்கரையின் சிறப்பே இந்த கடற்கரையில் நீர் தெளிவாக இருக்கும் என்பது தான். இராமநாதபுரத்தின் சிறப்பான இடங்கள் குறித்து நீங்களும் எழுதி அனுப்பலாம். *ஷேர்

News March 4, 2025

தமிழக மீனவர்களுக்கான நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க உத்தரவு

image

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.6 லட்சம் என்பது ரூ.8 லட்சமாக உயர்த்தியும், சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின ஊதியத்தொகை ரூ. 350லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும், மீனவர்களின் பிரச்னை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் தீர்வு காண வலியுறுத்தவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். *ஷேர்

News March 4, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (மார். 03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 3, 2025

கமுதி கோட்டையின் வரலாறு

image

17ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர் உடையத்தேவர், பிரான்ஸ் நாட்டு பொறியாளர் உதவியுடன் குண்டாற்றின் கரையில் கமுதி கோட்டையை கட்டினார். அதனால் இப்பகுதி கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது. இக்கோட்டையிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதன் வாயிற்பகுதி சிமெண்ட் கற்களால் அடைக்கப்பட்டுள்ளது. *ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!